<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்... 2.13 லட்சம் வாக்காளர்கள் தயார்!</title><atom:link href="https://tamil.abplive.com/elections/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 17:38:12 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[TN Bypoll: இன்றே கடைசி..! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வேட்புமனு - நிலவரம்? தொகுதிக்கு எத்தனை பேர்?]]></title><link>https://tamil.abplive.com/elections/tn-by-election-madhurandhagam-dharapuram-nomination-will-end-today-know-key-candidates-tvk-dmk-admk-tn-politics-274655</link><comments>https://tamil.abplive.com/elections/tn-by-election-madhurandhagam-dharapuram-nomination-will-end-today-know-key-candidates-tvk-dmk-admk-tn-politics-274655#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 07:14:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tn-by-election-madhurandhagam-dharapuram-nomination-will-end-today-know-key-candidates-tvk-dmk-admk-tn-politics-274655</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TN By-Election:&lt;/strong&gt; மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் நாதக என 5 முனை போட்டி நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்:&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவடைந்த சில வாரங்களிலேயே அதிமுக சார்பில் போட்டியிட்ட 6 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்களது பதவியை ராஜினாமா செய்தார். அதே வேகத்தில் ஆளுங்கட்சியான தவெகவிலும் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனால், முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. அதில் 5 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில்,&amp;nbsp; மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 9ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/can-kissing-cause-hiv-aids-transmission-risks-myths-and-facts-explained-details-in-pics-274568&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு..!&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக, எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளோடு, விஜய் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் களம் கண்டுள்ளன. இதனால் 5 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்புவோர்அந்தந்த தொகுதி கோட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 9ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். 12, 13, 14ம் தேதி தொடர் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் வேட்புமனு தாக்கல் நடந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/aVaFDk4PHPo?si=vMpufqH24fM51uJQ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மதுராந்தகம் நிலவரம் என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் இதுவரை அங்கு மொத்தம் 18 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏவான பரந்தாமனும், அதிமுக சார்பில் இந்த தொகுதியில் ஏற்கனவே வென்ற கனிதா சம்பத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-rain-alert-chennai-weather-forecast-tn-today-meteorological-department-warning-september-16th-heavy-rain-alert-for-6-districts-274651&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: TN Weather News: இன்று கனமழை பொளக்கும்,16 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாராபுரம் நிலவரம் என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இதுவரை 20 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இங்கும் அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சத்யபாமா ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் பத்மராஜன் தனது 256-வது வேட்புமனுவை இங்கு தாக்கல் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கூடுதல் பலம் பெறுமா தவெக?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவில் தனிப்பெரும்பான்மையை பெறாத தவெக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில் நடைபெறும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வென்றால் தவெகவின் பலம் 108 ஆக உயரக்கூடும். இதனால் ஆதரவு கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் சற்றே தணியலாம் என்பதால், முழு பலத்தை பயன்படுத்தி இந்த தேர்தலில் வெல்ல முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தலைமையிலான &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு முயலும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/d546936370d59ae31cbcf78a95558f101789522973572732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["விஜய் படம் ஒட்டாத வீட்டில் ஓட்டு விழாது" - தவெக வேட்பாளர் சத்யபாமா சர்ச்சை பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/elections/dharapuram-by-election-tvk-candidate-sathyabama-speech-about-election-work-274607</link><comments>https://tamil.abplive.com/elections/dharapuram-by-election-tvk-candidate-sathyabama-speech-about-election-work-274607#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 16:09:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/dharapuram-by-election-tvk-candidate-sathyabama-speech-about-election-work-274607</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;ldquo;ஒவ்வொரு வீடாக முதலமைச்சரின் விஜயின் புகைப்படத்தை ஒட்டுங்கள், எந்த வீட்டில் ஒட்ட வேண்டாம் என சொல்கிறார்களோ, அந்த வீட்டில் தவெகவிற்கு ஓட்டு விழுகாது &amp;ldquo; என்று தவெக வேட்பாளர் சத்யபாமா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல், பிரச்சாரம் என மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், தவெக தேர்தல் பணிமனையில் வேட்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வேட்பாளர் சத்தியபாமா, &amp;ldquo;அதிமுகவில் நல்ல தலைவர் இல்லாத காரணத்தால் தவெகவிற்கு வந்தேன். என்னை கட்சி மாறியவர் என்று மட்டுமே கூற முடியும். தற்பொழுது அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பானுமதி தேர்தல் தேதிக்கு முன்பு வரை தவெகாவில்தான் இருந்தார். அதிமுகவில் எம்எல்ஏ சீட்டுக் கொடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரிலேயே அவர் அதிமுகவிற்கு சென்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/FwEpv3k1CSI?si=Y61rI4oFDmabHT79&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஒருவருக்கு 50 ஓட்டுகள் என பிரித்து வேலை செய்ய வேண்டும். அனைவரும் தவெகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அப்படி வாக்களிக்காதவர்கள், மாற்றுக் கட்சியினரை நாம் மாற்றும் வேலையில் ஈடுபட வேண்டும்.&lt;br /&gt;ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அனைத்து கட்சிகளையும் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;எம்ஜிஆர் நல்ல தலைவர்&lt;/h2&gt;
&lt;p&gt;அதிமுகவில் நல்ல தலைவர்கள் இல்லை என கூற மாட்டேன். எம்ஜிஆர் ஒரு நல்ல தலைவர் தான். 40 ஆண்டு கால ஆட்சியில் திமுக, அதிமுக இடையே சட்டமன்றத்தில் இத்தனை கேள்விகள் எழுந்ததில்லை, தற்போது எடப்பாடி பழனிசாமி நாற்காலியின் அடியில் முள்படுக்கைப்போல் ஒவ்வொரு கேள்விகளாக தொடர்ந்து அடுக்கி வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;திமுக ஆட்சியில் இருக்கும் போது எதிர் கட்சியாக இருந்த எடப்பாடி பழனிசாமி இத்தனை கேள்விகளை கேட்கவில்லை. அப்போதே எனக்கு சந்தேகம் இருந்தது. திமுக என்ன அத்தனை சுத்தமான ஆட்சி நடத்தியதா?&lt;br /&gt;தாராபுரம் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் இணைந்து &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;ாவை வீழ்த்த முயற்சிக்கின்றனர் அது ஒருபோதும் நடக்காது. அதிமுக - திமுக இணைப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்ததை அடுத்து நான் கட்சியிலிருந்து விலகினேன்.&lt;/p&gt;
&lt;p&gt;தற்பொழுது ஊழலற்ற ஆட்சியில் உள்ளேன். ஒரு நல்ல தலைவரின் கீழ் பணியாற்ற வந்துள்ளேன். சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் திமுக - அதிமுக இருவரும் இணைந்து செயல்படுகின்றன இது வரலாறு காணாத ஒன்று&amp;rdquo; எனத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/why-should-potatoes-and-onions-not-be-stored-together-274565&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/c33c77883a353a3439be1de9675c9dcf1789468631797113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தட்டாஞ்சாவடியில் தேர்தல் களம் சூடுபிடித்தது! இன்று, நாளை வேட்புமனு தாக்கல்... அக்.6-ல் வாக்குப்பதிவு]]></title><link>https://tamil.abplive.com/elections/puducherry-thattanchavady-assembly-constituency-by-election-nomination-filing-274558</link><comments>https://tamil.abplive.com/elections/puducherry-thattanchavady-assembly-constituency-by-election-nomination-filing-274558#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 09:56:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/puducherry-thattanchavady-assembly-constituency-by-election-nomination-filing-274558</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் மீண்டும் விறுவிறுப்படைய உள்ளது. கடந்த 9-ம் தேதி தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டதையடுத்து, அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இருப்பினும் தொடக்க நாட்களில் பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களோ, சுயேச்சை வேட்பாளர்களோ ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்யவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;இதனிடையே, கடந்த 12, 13 மற்றும் 14-ம் தேதிகளில் தொடர்ச்சியாக அரசு விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்புமனுக்கள் பெறும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக வேட்புமனு தாக்கல் மையம் பெரிய அளவில் பரபரப்பின்றி அமைதியாகவே காணப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;விநாயகர் சதுர்த்தியில் வழிபாடு&lt;/h2&gt;
&lt;p&gt;அரசு விடுமுறை நாட்களை வேட்பாளர்கள் தேர்தல் பணிகளுக்காக பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொண்டனர். வேட்புமனு படிவங்களைப் பெற்றுக்கொண்ட அவர்கள், தேர்தல் விதிமுறைகளின்படி தேவைப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தயார் செய்து வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், &lt;a title=&quot;விநாயகர் சதுர்த்தி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vinayagar-chaturthi-2026&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விநாயகர் சதுர்த்தி&lt;/a&gt;யை முன்னிட்டு பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை தங்களது குலதெய்வ கோவில்களுக்கு எடுத்துச் சென்று வைத்து, சிறப்பு வழிபாடு செய்தனர். தேர்தலில் வெற்றி கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;இன்று, நாளை பிரம்மாண்ட ஊர்வலம்&lt;/h2&gt;
&lt;p&gt;ஆன்மிக வழிபாடுகளைத் தொடர்ந்து, இன்று மற்றும் நாளை தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுகள் களைகட்ட உள்ளன. வேட்பாளர்கள் தங்களது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலமாகச் சென்று வேட்புமனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜோதிடர்கள் மற்றும் ஜோசியர்கள் தெரிவித்துள்ள நேரத்தின்படி, நல்ல நேரத்தில் மனுக்களை தாக்கல் செய்யவும் பலர் ஏற்பாடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் இன்று முதல் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;பலத்த போலீஸ் பாதுகாப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;வேட்புமனுக்கள் பெறப்படும் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப்.16 மாலை 3 மணி ஆகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;செப்.17-ல் வேட்புமனு பரிசீலனை&lt;/h2&gt;
&lt;p&gt;பெறப்பட்ட அனைத்து வேட்புமனுக்களும் வரும் செப்.17-ம் தேதி காலை 11 மணிக்கு பரிசீலனை செய்யப்படுகின்றன. தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தின் 2-ம் தளத்தில் இந்த பரிசீலனை நடைபெறும். தேர்தல் விதிமுறைகளின்படி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய பிரதிநிதிகள் மட்டுமே வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.&lt;/p&gt;
&lt;h2&gt;செப்.19-ல் வாபஸ் பெற கடைசி நாள்&lt;/h2&gt;
&lt;p&gt;பரிசீலனையில் ஏற்றுக்கொள்ளப்படும் வேட்புமனுக்களில், போட்டியிலிருந்து விலக விரும்பும் வேட்பாளர்கள் தங்களது மனுக்களைத் திரும்பப் பெறலாம். இதற்கான கடைசி நாள் செப்.19 மாலை 3 மணி ஆகும். வேட்புமனுவைத் திரும்பப் பெற விரும்புவோர் தட்டாஞ்சாவடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜுன் ராமகிருஷ்ணன் அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஞானவேலு ஆகியோரிடம் அதற்கான கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். வாபஸ் பெறும் காலக்கெடு முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;அக்.6-ல் வாக்குப்பதிவு; அக்.9-ல் வாக்கு எண்ணிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், பதிவான வாக்குகள் 9-ம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகளின் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் களமிறங்க உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் தொகுதியில் தேர்தல் பரபரப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;டெபாசிட் தொகை எவ்வளவு?&lt;/h2&gt;
&lt;p&gt;சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பொதுப்பிரிவு வேட்பாளர்கள் ரூ.10,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். அதேபோல், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு வேட்பாளர்களுக்கு ரூ.5,000 வைப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, செல்லுபடியாகும் மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறும் வேட்பாளர்களின் வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும். இதனால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெற்றி மட்டுமின்றி, குறைந்தபட்ச வாக்கு சதவீதத்தைப் பெறுவதும் முக்கிய சவாலாக இருக்கும். வேட்புமனு தாக்கல் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதால், தட்டாஞ்சாவடி தொகுதியில் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/23/e279f0483a99ff8376a5576a64adba7f1787485713493194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தவெகவுக்கு செக் வைத்த கம்யூனிஸ்ட்டுகள்! இடைத்தேர்தலில் தனித்து போட்டி ஏன்? - வெளியான பரபரப்பு பின்னணி!]]></title><link>https://tamil.abplive.com/elections/left-parties-cpi-cpm-dharapuram-madurantakam-byelection-contest-274426</link><comments>https://tamil.abplive.com/elections/left-parties-cpi-cpm-dharapuram-madurantakam-byelection-contest-274426#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 19:50:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/left-parties-cpi-cpm-dharapuram-madurantakam-byelection-contest-274426</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் இணைந்து போட்டியிடப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தாராபுரம் தொகுதியில் சிபிஐ, மதுராந்தகம் தொகுதியில் சிபிஎம் களம் காண்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சென்னை பாலன் இல்லத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/kR43t5UOWuw?si=tK1FfW9IXyO_sUob&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;செய்தியாளர்களிடம் பேசிய மு. வீரபாண்டியன்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தற்போதைய அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இணையாமல் தனித்து நிற்கும் கட்சியின் நிலைப்பாடு தொடரும் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று எனக் குற்றம்சாட்டிய அவர் இடதுசாரிகள் இணைந்து இத்தேர்தலைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தொகுதிப் பங்கீட்டின்படி தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுகின்றன. தாராபுரம் தொகுதிக்கான வேட்பாளர் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் அறிமுகக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் இணைந்து அறிவிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் ஆதரவு தொடரும் எனக் குறிப்பிட்ட அவர் அரசின் தவறுகளையும் குறைபாடுகளையும் மக்களிடம் வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரம் அமையும் என்றும் சுட்டிக்காட்டினார். இடதுசாரிகள் இணைந்து போட்டியிடும் இந்த அறிவிப்பு, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;ஏன் தவெகவிற்கு ஆதரவு இல்லை?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது ஆரோக்கியமற்ற அரசியல் என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியில் இணைவது எந்த விதத்தில் நியாயம்? எனக் கேள்வி எழுப்பிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முக , இடைத்தேர்தல் என்பது திணிக்கப்பட்ட தேர்தல்; இதில் தனித்து போட்டியிடுவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு என்று கூறினார். மேலும், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் தவெக ஆட்சிக்கான ஆதரவு தொடரும் என்றும் அதேபோல, &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வுக்கு ஆதரவளிக்காமல் இடதுசாரிகள் போட்டியிடுவது திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடல்ல என்றும் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/spiritual/vinayagar-chaturthi-2026-date-muhurat-pooja-tithi-timings-visarjan-date-all-details-274005&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/13/09822a2bd6b3a3a21aa3f338303f93c81789308988939113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?]]></title><link>https://tamil.abplive.com/elections/tamil-nadu-by-election-2026-ntk-candidates-announced-dharapuram-madurantakam-274408</link><comments>https://tamil.abplive.com/elections/tamil-nadu-by-election-2026-ntk-candidates-announced-dharapuram-madurantakam-274408#respond</comments><pubDate>Sun, 13 Sep 2026 16:13:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tamil-nadu-by-election-2026-ntk-candidates-announced-dharapuram-madurantakam-274408</guid><description><![CDATA[&lt;p&gt;அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;நாம் தமிழர் வேட்பாளர்கள் யார் யார்.?&lt;/h2&gt;
&lt;p&gt;நாம் தமிழர் கட்சியின் சார்பாக, மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமனும், தாராபுரம் தொகுதியில் மு. கார்த்திகாவும் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதியில் ச. கார்த்திக்குமாரி போட்டியிடுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடைபெறவுள்ள இந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு, கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், பாசறைகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ-க்களில், 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதுமட்டும் இல்லாமல், அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். அதனால், அந்த 6 தொகுதிகளும் தற்போது காலியாக உள்ளன. அது மட்டுமில்லாமல், 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால், தமிழகத்தில் 7 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அதில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில், தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும், வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;அதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலை பொறுத்தவரை, ஐந்து முனைப் போட்டி உறுதியாகி உள்ளது. ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாதக ஆகியவை களத்தில் உள்ள நிலையில், இடதுசாரிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதனால், தமிழ்நாடு இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இடதுசாரிகள் இணைந்து இடைத்தேர்தலை தனியாக எதிர்கொள்ள உள்ளதாக இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. அவர்கள், நாளை மறுநாள் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/know-whether-soy-be-consumed-or-not-during-a-weight-loss-journey-274406&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/b2592785acac92250a92a37bc99c740a17857224374211322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தாராபுரம் வரார் விஜய்! வெற்றியை முதல்வருக்கு காணிக்கையாக்குவேன் - சத்யபாமா சபதம்]]></title><link>https://tamil.abplive.com/elections/dharapuram-tvk-candidate-sathyabama-says-cm-vijay-come-election-campaign-274310</link><comments>https://tamil.abplive.com/elections/dharapuram-tvk-candidate-sathyabama-says-cm-vijay-come-election-campaign-274310#respond</comments><pubDate>Sat, 12 Sep 2026 13:20:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/dharapuram-tvk-candidate-sathyabama-says-cm-vijay-come-election-campaign-274310</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்வர் விஜய் விரைவில் தாராபுரம் வர உள்ளதாகவும், இந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட தனக்கு மீண்டும் வாய்ப்பளித்த முதல்வருக்கு நன்றி என்றும் வேட்பாளர் சத்யபாமா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்தியபாமா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில், தாராபுரம் தொகுதியில் போட்டியிட எனக்கு மீண்டும் வாய்ப்பளித்த கட்சியின் தலைவர் விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத்தொகுதியின் வெற்றியை அவருடைய பாதங்களில் காணிக்கையாக்குவேன்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;தவெகவில் ஏன் இணைந்தேன்?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுக கூட்டணியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், முந்தைய ஆட்சிக் காலத்தின் குளறுபடிகள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாகவே அக்கூட்டணியில் இருந்து விலகி, மக்களுக்கு நேர்மையாகச் சேவை செய்யும் நோக்கில் தவெகவில் இணைந்தேன். இங்கு எவ்விதக் குதிரை பேரமும் நடைபெறவில்லை என்பதற்கு எனக்கு மீண்டும் சீட் கொடுத்ததே சான்றாகும். கடந்த தேர்தலை விட இம்முறை கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக மாபெரும் வெற்றி பெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Nz8wqJjVGKg?si=Z-MKJ0huze0_EoyN&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;உப்பாறு அணைக்கு விதிமுறைப்படி கிடைக்க வேண்டிய உபரிநீரைப் பெற்றுத் தரத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அதேபோல, முந்தைய திமுக ஆட்சியில் தாராபுரத்திற்கு வர வேண்டிய உயர்தர அரசு தலைமை மருத்துவமனை அப்போதைய அமைச்சரின் கவனக்குறைவால் காங்கேயத்திற்குச் சென்றது.&amp;nbsp;&lt;br /&gt;அதை மீண்டும் தாராபுரத்திற்குக் கொண்டுவர அரசிடம் வலியுறுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;தாராபுரம் வரும் முதல்வர் விஜய்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கடந்த 25 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தீர்க்கப்படாத 40 ஆண்டுகால இலவச வீட்டுமனைப் பட்டா கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண, தமிழக அரசு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. விரைவில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தலைவர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தாராபுரத்திற்குத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வரவுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/shani-bagavan-is-weak-in-your-horoscope-you-should-do-these-things-274303&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/12/1df534178e6b7dfef989bd9f7d9220571789198889628113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?]]></title><link>https://tamil.abplive.com/news/politics/dharapuram-by-election-2026-voters-analysis-key-issues-sathyabama-tvk-dmk-aiadmk-who-will-win-273982</link><comments>https://tamil.abplive.com/news/politics/dharapuram-by-election-2026-voters-analysis-key-issues-sathyabama-tvk-dmk-aiadmk-who-will-win-273982#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 11:47:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/dharapuram-by-election-2026-voters-analysis-key-issues-sathyabama-tvk-dmk-aiadmk-who-will-win-273982</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Dharapuram By-Election 2026:&lt;/strong&gt; பொதுத் தேர்தலின் போது தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் சத்யபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் சத்யபாமா, தனது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இதனால் காலியான அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று 10ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் தாராபுரம் தொகுதி எப்படி? யாருக்கு சாதகம்? வாக்காளர் விவரங்கள், தவெக முதல்முறையாக அந்த தொகுதியில் வெற்றிக்கொடியை நாட்டுமா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/side-effects-of-eating-apples-at-night-what-you-should-know-details-in-pics-273970&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாராபுரம் தொகுதி எப்படி?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனி தொகுதியான தாராபுரம் அதிமுகவின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் கூட அதிமுக வேட்பாளர் தான் 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொங்கு பகுதியை சேர்ந்த இந்த தொகுதியில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம் பெரும்பான்மையானதாக உள்ளது. இதுபோக பட்டியல் சமூகத்தினர், முதலியார் மற்றும் செட்டியார் சமூக மக்களும் இங்கு கணிசமாக வசித்து வருகின்றனர். விவசாயம், ஜவுளி, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவை இந்த தொகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/AY8x-4SsNYc?si=02jix2gV3dlIFXIE&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாராபுரம் - அதிமுகவின் கோட்டை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாராபுரம் தொகுதியில் இதுவரை, 17 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் திமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒட்டுமொத்தமாக 6 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், கடந்த 20 வருடங்களில் இரண்டு முறை வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி நான்கு முறையும், பாமக ஒரு முறையும் இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ளது. கொங்கு மண்டலம் ஒட்டுமொத்தமாகவே அதிமுகவின் கோட்டையாக கருதப்படுவதால், தாராபுரமும் அதிமுக வலுவாக உள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாராபுரம் வாக்காளர்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தாராபுரத்தில் சுமார் 2 லட்சத்து 22 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து ஆறாயிரம் பேர் ஆண்களும், ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் பெண்களும், ஒற்றை இலக்கில் மூன்றாம் பாலினத்தவரளும் உள்ளனர். இவர்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 89.96 சதவிகிதம் பேர் அதாவது ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 944 பேர் வாக்களித்தனர். பதிவான வாக்குகளில் 40.56 சதவிகிதம் அதாவது 80 ஆயிரத்து 248 வாக்குகளை பெற்று, அதிமுகவின் சத்யபாமா வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இந்திராணி 63 ஆயிரத்து 336 வாக்குகளையும், தவெக வேட்பாளர் கௌரி சித்ரா 46 ஆயிரத்து 99 வாக்குகளையும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Nirmalkumar: &amp;rdquo;திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை&amp;rdquo; - நிர்மல்குமார் விளக்கம்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/minister-nirmalkumar-clarification-over-cm-vijay-speech-on-dmk-stalin-misa-issue-tvk-communist-alliance-tn-politics-273976&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Nirmalkumar: &amp;rdquo;திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை&amp;rdquo; - நிர்மல்குமார் விளக்கம்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாராபுரம் - முக்கிய பிரச்னைகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்விக்காக காங்கேயம் அல்லது உடுமலைப்பேட்டைக்குச் செல்ல வேண்டியுள்ளதால், தாராபுரம் நகராட்சிப் பகுதியில் ஒரு அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;தாராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய நவீன மருத்துவ வசதிகள் இல்லாததால், அவசர சிகிச்சை மற்றும் தீவிர நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற மக்கள் திருப்பூர் அல்லது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;விவசாயமும், நெசவுத் தொழிலும் பிரதானமாக இருந்தாலும் போதிய நீர்ப்பாசன வசதிகள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்களுக்கான போதிய வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அதிமுக:&lt;/strong&gt; தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை அதிமுக உறுதி செய்துள்ளது. உட்கட்சி பூசலில் சிக்கியுள்ள அக்கட்சி மீண்டும் வலுப்பெற இந்த இடைத்தேர்தல் வெற்றியை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கிறது. பாரம்பரியமான வாக்குவங்கி தங்களுக்கு கைகொடுக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அலை வீசியபோதும், அதிமுக வேட்பாளரே பொதுத்தேர்தலின் போது இங்கு வெற்றி பெற்றார். அதேநிலையை தக்கவைத்து தனது கட்சி எம்.எல்.ஏக்களை இழுத்த தவெகவிற்கு பாடம் புகட்ட எடப்பாடி தீவிரம் காட்டுகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;திமுக: &lt;/strong&gt;இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான முடிவை திமுக இன்னும் அறிவிக்கவில்லை. பலமுனை போட்டி தவெகவிற்கு சாதகமாக அமையக்கூடும் என்பதால், தேர்தலை புறக்கணித்து மறைமுகமாக அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்தும் அறிவாலயம் பரிசீலித்து வருகிறதாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தவெக: &lt;/strong&gt;கூட்டணி கட்சிகளை நம்பி ஆட்சி நடத்தி வரும் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தனது சொந்த பலத்தை பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டியுள்ளது. புதுக்கட்சியாகவே 46 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது ஆட்சி அதிகாரம், அமைச்சரவையில் பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு கூடுதல் பலமாக அமையும் என பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/527130a683150b656032406d311cdbf21788934027170732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[46 வயதில் 61 தேர்தல்கள்! மதுராந்தகம் இடைத்தேர்தலில் களம் காணும் ‘அக்னி’ ஆழ்வார்!]]></title><link>https://tamil.abplive.com/elections/maduranthakam-bypoll-agni-alwar-files-nomination-for-set-to-contest-61st-election-tnn-273987</link><comments>https://tamil.abplive.com/elections/maduranthakam-bypoll-agni-alwar-files-nomination-for-set-to-contest-61st-election-tnn-273987#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 11:41:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/maduranthakam-bypoll-agni-alwar-files-nomination-for-set-to-contest-61st-election-tnn-273987</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமின்றி, சுயேச்சை மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் இறங்கி வருகின்றனர். அந்த வகையில், அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் சார்பில் 46 வயதான &amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;61-வது தேர்தல் போட்டி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வாரின் வேட்புமனு தாக்கல் தற்போது தேர்தல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. காரணம், இது அவரது 61-வது தேர்தல் போட்டியாகும். கடந்த காலங்களில் பல்வேறு தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் அவர், தற்போது மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தனது தேர்தல் பயணம் குறித்து அவர் தெரிவிக்கையில், இதுவரை 60 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளதாகவும், தற்போது 61-வது முறையாக தேர்தலை சந்திப்பதாகவும் கூறியுள்ளார். நாட்டின் பல்வேறு தேர்தல் முறைகளிலும் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்ட அனுபவம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வார், சாதாரண சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களில் மட்டுமின்றி, நாட்டின் உயரிய பதவிகளுக்கான தேர்தல்களிலும் போட்டியிட முயன்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்கள் முதல் மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் மாநகராட்சி மேயர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம், தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கான போட்டி மட்டுமல்ல; ஜனநாயகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் அரசியல் பங்கேற்புக்கான வாய்ப்பு என்பதையும் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் சார்பில் மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் &amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வார், ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை தொடர்ந்து முன்வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், ஊழல் எதிர்ப்பு மற்றும் ஜனநாயகப் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் தனது நோக்கம் என அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ச்சியாக பல தேர்தல்களில் வேட்பாளராக களம் காணும் அவரது பயணம், தேர்தல் அரசியலில் தனித்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்து தனது கருத்தையும் கொள்கையையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தேர்தல் களம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் பல்வேறு அமைப்புகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட முன்வருவதால், தேர்தல் களம் பலமுனைப் போட்டியாக மாறி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சூழலில், 60 தேர்தல்களை கடந்து 61-வது முறையாக தேர்தலில் போட்டியிடும் &amp;lsquo;அக்னி&amp;rsquo; ஆழ்வாரின் வேட்புமனு தாக்கல், மதுராந்தகம் தொகுதி தேர்தல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பது ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வரும் அவரது முயற்சி தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/b7ff20596e8468be508e44701321e3e217889342834601319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Madurantakam By Election: பாமகவை நம்பும் இபிஎஸ்.. அன்புமணி எடுக்கப்போகும் முடிவு என்ன? மதுராந்தகத்தில் பரபரப்பு!]]></title><link>https://tamil.abplive.com/elections/madurantakam-by-election-aiadmk-pmk-alliance-talks-eps-eyes-anbumani-support-tnn-273981</link><comments>https://tamil.abplive.com/elections/madurantakam-by-election-aiadmk-pmk-alliance-talks-eps-eyes-anbumani-support-tnn-273981#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 10:53:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/madurantakam-by-election-aiadmk-pmk-alliance-talks-eps-eyes-anbumani-support-tnn-273981</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் தீவிரமாக வகுத்து வருகின்றன. குறிப்பாக மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெறுவதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க.வுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாமகவை எதிர்பார்க்கும் அதிமுக&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பா.ம.க.வின் வாக்கு வங்கி முக்கியமானதாக இருந்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக, வரவிருக்கும் இடைத்தேர்தலிலும் பா.ம.க.வின் ஆதரவைப் பெறுவது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமையும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்கிடுவதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தி.மு.க.வின் ஆளுமையை எதிர்கொள்வதுடன், தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ள த.வெ.க.வின் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தலைமையிலான அரசியல் நகர்வுகளையும் சமாளிக்க வேண்டிய சூழல் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தொகுதியில் ஏற்கனவே வாக்கு செல்வாக்கு கொண்ட பா.ம.க.வுடன் இணைந்து செயல்படுவது தேர்தல் கணக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் பா.ம.க.வின் ஆதரவைப் பெற்று, மதுராந்தகம் மட்டுமின்றி தாராபுரம் தொகுதியிலும் தேர்தல் வெற்றியை உறுதி செய்ய முடியும் என அ.தி.மு.க. கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், தி.மு.க. இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பட்சத்தில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், தேர்தல் களத்தில் நிலவும் ஒவ்வொரு அரசியல் நகர்வும் அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அன்புமணியின் நிலைப்பாடு என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அ.தி.மு.க. தரப்பில் பா.ம.க.வை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பா.ம.க. தரப்பில் அன்புமணி ராமதாஸ் எத்தகைய முடிவை எடுப்பார் என்பது தற்போது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது. அ.தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பாரா அல்லது கட்சியின் எதிர்கால அரசியல் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தனித்த முடிவை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியில் பா.ம.க.வின் வாக்கு வங்கி கடந்த தேர்தல்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், அன்புமணியின் முடிவு அ.தி.மு.க.வின் தேர்தல் கணக்கில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் முடிவுகள் சொல்லும் கணக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியின் கடந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, பா.ம.க.வின் வாக்கு செல்வாக்கை புறக்கணிக்க முடியாது என்பது தெளிவாகிறது. 2016 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 16,215 வாக்குகளைப் பெற்றது. இது அந்தத் தேர்தலில் சுமார் 9.12 சதவீத வாக்குகளாக அமைந்தது. தனித்துப் போட்டியிட்ட நிலையிலும் பா.ம.க. பெற்ற இந்த வாக்குகள், தொகுதியில் அக்கட்சிக்கு இருந்த ஆதரவை வெளிப்படுத்தின.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் &lt;strong&gt;அ.தி.மு.க.&amp;ndash;பா.ம.க&lt;/strong&gt;. கூட்டணி அமைந்தது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 86,646 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கூட்டணி வாக்குகள் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியதாக அக்கட்சியின் நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2026 தேர்தலிலும் தொடர்ந்த போட்டி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மதுராந்தகம் தொகுதியில் கடுமையான போட்டி நிலவியது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 69,284 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. மற்றும் த.வெ.க. வேட்பாளர்களிடையே போட்டி நிலவிய நிலையிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வின் அடிப்படை வாக்கு வங்கியுடன் கூட்டணி கட்சிகளின் ஆதரவும் தேர்தல் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்பதை எடுத்துக்காட்டுவதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். குறிப்பாக பா.ம.க.வுக்கு உள்ள வாக்கு செல்வாக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கூடுதல் பலமாக அமையலாம் என்பதே எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கணக்காக இருப்பதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இடைத்தேர்தலில் மாறப்போகும் அரசியல் கணக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனிடையே, இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெற கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதன் மூலம் வேட்பாளர் தேர்வுக்கான பணிகளையும் அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் விரைவில் மேலும் சூடுபிடிக்கும் நிலையில், அ.தி.மு.க.&amp;ndash;பா.ம.க. இடையேயான பேச்சுவார்த்தை எந்த முடிவை எட்டுகிறது என்பது முக்கியமானதாக மாறியுள்ளது. பா.ம.க. ஆதரவு அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா, அன்புமணி ராமதாஸ் எத்தகைய அரசியல் முடிவை எடுக்கப் போகிறார் என்பதே தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/46470904c2dd94f4ce76d80dc225dd3817889314052391319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுராந்தகம் இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடக்கம்... 2.13 லட்சம் வாக்காளர்கள் தயார்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-by-election-2026-nomination-filing-begins-polling-on-october-6-2026-tnn-273966</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-by-election-2026-nomination-filing-begins-polling-on-october-6-2026-tnn-273966#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 08:22:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/madurantakam-by-election-2026-nomination-filing-begins-polling-on-october-6-2026-tnn-273966</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இதையொட்டி மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தொகுதி முழுவதும் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 16 வரை வேட்புமனு தாக்கல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கிய வேட்புமனு தாக்கல், வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் அட்டவணையின்படி, அக்டோபர் 6-ஆம் தேதி மதுராந்தகம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;2.13 லட்சம் வாக்காளர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 1,04,886 ஆண் வாக்காளர்களும், 1,08,738 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,13,689 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேட்புமனு தாக்கலின் முதல் நாளான இன்று எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலக அறைக்குள் வேட்பாளருடன் சேர்த்து மொத்தம் ஐந்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 18 குழுக்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சட்டவிரோத பணப் புழக்கம், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 9 பறக்கும் படைகளும், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் 24 மணி நேரமும் தொகுதி முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்கள் மற்றும் அரசு இடங்களில் இடம்பெற்றிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், தனியார் இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்களையும் 72 மணி நேரத்திற்குள் அகற்ற அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;SUVIDHA மூலம் முன்அனுமதி கட்டாயம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துதல், பிரசார வாகனங்களைப் பயன்படுத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் SUVIDHA செயலி மூலம் முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்களும் புகார் அளிக்கலாம். இதற்காக C-Vigil செயலியைப் பயன்படுத்தலாம். மேலும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 1950, 1800-425-7088 மற்றும் 044-27427412 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் பணிகள் வேகம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், மதுராந்தகம் தொகுதியில் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/09/20867fcd741b7ded3715f325c3c4c5bd17889223173851319_original.jpg" width="220"/></item></channel></rss>