தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் மே 4ம் வெளியாகிறது. மேற்கு வங்கத்தின் இறுதி மற்றும் 2வது கட்ட தேர்தல் முடிவுகள் நாளை வெளியானவுடன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகிறது.
இந்த சூழலில், கடந்த தேர்தலில் மேற்கண்ட 5 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கும் முடிவுகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்? எவ்வளவு ஒற்றுமை? என்பதை கீழே காணலாம்.
தமிழ்நாடு:
பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு திமுக கூட்டணி 160 முதல் 190 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணிக்கப்பட்டது. தனிப்பெரும்பான்மையாக திமுக 118 தொகுதிகள் வெல்லும் என்று கணிக்கப்பட்டது. அதிமுக 46 முதல் 68 தாெகுதிகள் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.
தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகள் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையாக 133 தொகுதிகள் வெற்றி பெற்றது. அதிமுக 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தனியாக 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கேரளா:
கேரளாவில் இடது சாரி முன்னணி மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 104 முதல் 120 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 20 முதல் 36 தொகுதிகள் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டது. சி வோட்டர் இடதுசாரி கூட்டணி 71 முதல் 77 தொகுதிகள் வெல்லும் என்றும், ஐக்கிய ஜனதா தளம் 62 முதல் 68 தொகுதிகள் வரை வெல்லும் என்று கணித்தது.
தேர்தல் முடிவுகளில் இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 128 முதல் 176 தொகுதிகள் கைப்பற்றும் என்றும், பாஜக 109 முதல் 148 தொகுதிகள் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டது. சி வோட்டர் திரிணாமுல் காங்கிரஸ் 152 தொகுதிகள் முதல் 164 தொகுதிகளும், பாஜக 109 முதல் 121 வரை கைப்பற்றும் என்று கருதப்படுகிறது.
ஆனால், தேர்தல் முடிவுகளில் 215 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளைக் கைப்பற்றியது.
அசாம்:
வடகிழக்கு மாநிலத்தில் முக்கியமான அசாம் மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 58 முதல் 85 தொகுதிகளையும், காங்கிரஸ் 40 முதல் 66 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. சி வோட்டார் பாஜக 58 முதல் 71 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 53 முதல் 66 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 75 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை் கைப்பற்றியது.
பாண்டிச்சேரி:
யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் பாஜக என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 16 முதல் 24 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டது. சி வோட்டர் பாஜக - என்ஆர் காங்கிரஸ் கூட்டணி 19 முதல் 23 தொகுதிகளையும், காங்கிரஸ் - திமுக கூட்டணி 6 முதல் 10 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று கணித்திருந்தது. தேர்தல் முடிவுகளில் 2021ம் ஆண்டு பாஜக - என்ஆர்காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை அமைக்கப்போவது யார்? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
