226 தேர்தல்களில் போட்டி: அனைத்திலும் தோல்வி: ஆனாலும் அசராமல் தொடரும் தேர்தல் மன்னன் பத்மராஜன்...

ஜனாதிபதி தேர்தல் முதல் பஞ்சாயத்து தேர்தல் வரை தன் வாழ்நாளில் 227 முறை வேட்புமனு தாக்கல் செய்த நபரைப் பற்றி தெரியுமா???

Continues below advertisement

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள ராமன் நகர் பகுதியை சேர்ந்த டயர் கடை உரிமையாளரான பத்மராஜன் என்பவர் 1959 ஆம் ஆண்டு ஆத்தூரில் பிறந்தார். இவர் தனது 30 வயதில் தொடங்கி 62 வயது வரை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 32 ஆண்டுகளில் 5 ஜனாதிபதி, 5 துணை ஜனாதிபதி, 4 பிரதமர் தேர்தல் உட்பட 227 தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

Continues below advertisement

தற்போது நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேட்டூரை அடுத்த வீரக்கல்புதூர் பேரூராட்சி வார்டில் போட்டியிடவுள்ளார். இதுவரை 227 தேர்தல்களில் எந்தவித கட்சியையும் சாராமல் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார். 1988 ஆம் ஆண்டு தனது 30 வயதில் நண்பர்களுடன் விளையாட்டாக தொடங்கிய வேட்புமனுத்தாக்கல் பிற்காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து பெரும் தலைவர்களை எதிர்த்து போட்டியிட வைத்துள்ளது. 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 5 நாடாளுமன்ற தொகுதிகளிலும், மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளார்.

இதில் தமிழ்நாடு கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இவர் முதல்வர் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட உள்ளார். 1988 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இவர் பெற்ற அதிகபட்ச வாக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 6,273 வாக்குகள் பெற்றுள்ளார். இதுவரை குறைந்த வாக்கு தற்போது நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வீரக்கல்புதூரில் கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜீரோ வாக்கு பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் கேரளா மாநிலம் வயநாட்டில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு 1,858 வாக்குகள் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உட்பட்ட 11 முதல்வர்களை ஆகியோரை எதிர்த்த போட்டியிட்டு உள்ளார். 

1993 ஆம் ஆண்டு பெருந்துறையில் நடைபெற்ற தேர்தலில் தனது மூன்று வயதான ஸ்ரீஜேஷ் பத்மராஜனை தேர்தலில் களமிறங்கியுள்ளார். மேலும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் லிமியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில் பத்மராஜனின் பெயர் இடம் பெற்றுள்ளது. 32 ஆண்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டும் 50 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக கூறுகிறார். 40 ஆண்டுகளாக மேட்டூர் நாடக நடிகர் சங்கம் உறுப்பினராக உள்ளார். டயர் கடை வைத்துள்ள இவரை தேர்தல் மன்னன் பத்மராஜன் என்று அனைவரும் வைக்கின்றனர்.

இதுகுறித்து பத்மராஜனிடம் கேட்டபோது, ஜனநாயக இந்தியாவில் யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். 227 வேட்பு மனுக்களில் பலமுறை தன்னை நிராகரித்து உள்ளதாகவும், இருப்பினும் வேட்பு மனு தாக்கல் செய்வது எனது கடமை என்றார். மேலும், இதுவரை ஒருமுறைகூட தனக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டது இல்லை, இருப்பினும் மக்கள் எனக்காக வாக்களித்து கொண்டுதான் உள்ளனர் இன்று நெகிழ்ச்சியுடன் கூறினார். ஜனநாயக இந்தியாவில் தேர்தலில் யார் வேண்டுமானாலும், யாரை எதிர்த்து வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற விழிப்புணர்வுக்காக மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்கிறேன் என்று கூறினார். இதுவரை தோல்விகளை மட்டுமே தனது அரசியல் வாழ்க்கையில் கண்ட பத்மராஜன், தேர்தல்களில் தோல்வி அடைவதை மட்டுமே தான் விரும்புவதாக கூறுகிறார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola