தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவரப்பட்டுள்ளது. நேற்று மாலை தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியான நிலையில், தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் வாகன சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் 50ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

Continues below advertisement

தொகுதி வளர்ச்சி நிதியை ஒதுக்க தடை

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் எம்பி, எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழக தேர்தலில் சட்டவிரோதா பணம் விநியோகத்தை தடுத்து கண்காணிக்கும் பணியில் மத்திய வருமான வரித்துறை, மத்திய தொழிலக பாதுகாப்பு படை, தபால் துறை, விமானத்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட மத்திய அமைப்புகளுக்கு ஈடுபடவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தபால் ஓட்டு- பணியை தொடங்குங்க

மேலும் ரயில்வே ஊழியர்கள், அகில இந்திய வானொலி, மெரைன் பிரிவு, விமான நிலைய ஊழியர்கள், தகவல் ஒளிபரப்பு துறை, பத்திரிக்கையாளர், மெட்ரோ ரயில், போக்குவரத்து துறை, மின்வாரியத்துறை, தீயணைப்புதுறை, சிறைத்துறை உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகளை செலுத்த உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அடுத்தாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேடுகள் குறித்த விழிப்பை ஏற்படுத்த தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Continues below advertisement