தமிழ்நாட்டில் போதைப் பொருள், பெண்கள் பாதுகாப்பு பிரச்சினை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேலமதா கூறியது பேசுபொருளாகி உள்ளது. சேலத்தில் நேற்று நடந்த திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா இவ்வாறு பேசி இருந்தார்.

Continues below advertisement

போதைப் பொருள் புழக்கம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சவால்களைத் தவிர, தமிழகத்தில் வேறு பெரிய குறைகள் இல்லை என்கிற ரீதியில் அவர் பேசியது தற்போது அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இவரது இந்தப் பேச்சைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஒரு தரப்பினர் இதனை விமர்சனப் பார்வையில் அணுகினாலும், ஒரு பெண் தலைவராக அவர் முன்வைக்கும் கருத்துகளைக் கூர்ந்து கவனிப்பதாகச் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Continues below advertisement

அரசியல் கட்சிகளின் பார்வைகள்

பிரேமலதா அவர்களின் இந்தக் கருத்து குறித்து மற்ற அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளன.

அதிமுக மற்றும் பாஜக தரப்பில், இந்தக் கருத்துகள் தமிழகத்தின் சவால்களைப் பிரதிபலிப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒரு கூட்டணித் தலைவராக அவர் பொது மேடையிலேயே இத்தகைய கருத்துகளை முன்வைத்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில், தேமுதிகவின் ஆரம்பகால கொள்கைகளையும் தற்போதைய நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு சில கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே இத்தகைய கருத்துப் பரிமாற்றங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.