விழுப்புரம் ; தமிழக அரசு நிறைவேற்றிய எந்த திட்டத்திற்கும் மோடி அரசு துணை நிற்கவில்லை தமிழ்நாடு ஒன்றிய பாஜக அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும் பொய் வழக்குகளை போட்டு பொன்முடியையும் கெளதம சிகாமணியையும் முடக்க பார்த்தால் ஆனால் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கெளதமசிமாமணியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய உதயநிதி கடந்த இரண்டு முறை திருக்கோவிலூர் தொகுயில் பொன்முடி வெற்றி பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும் அதே போன்று கெளதமசிகாமணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும் 

Continues below advertisement

பல்வேறு திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி உள்ளதாக கூறினார்.  ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது ஆனால் எந்த திட்டத்திற்கும் மோடி அரசு துணை நிற்கவில்லை, தமிழ்நாடு ஒன்றிய பாஜக அரசால் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தார். பொய் வழக்குகளை போட்டு பொன்முடியையும் கெளதம சிகாமணியையும் முடக்க பார்த்தால் அதில் வெற்றி பெற்றுள்ளோம் போன வாரம் நீதிமன்றத்தில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த வாரம் மக்கள் மன்றத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் அதிமுக ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டது பத்து லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் உரிமை தொகை ஒரு கோடியே,1கோடியே 32 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத் தொகையை நிறுத்த அதிமுகவும் பாஜகவும் முயற்சி செய்தனர். நீதிமன்றம் சென்று மூணு மாதம் நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும், திமுக ஆட்சி அமைந்தவுடன் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் முதல்வர் வழங்க உள்ளதாக கூறினார். தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பாஜகவையும், சங்கீ கூட்டத்தையும் புறக்கணிக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழும் புகைப்படத்தை காட்டி இப்படித்தான் அவர் முதல்வரானார் என கூறினார்.

மோடியின் முரட்டு அடிமை பழனிச்சாமி அடிமை கூட்டணியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். இதற்கு வரக்கூடிய சட்டமன்றத் தேர்தல் ஒரு சரியான வாய்ப்பு.டெல்லி அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் பாஜகவை தமிழ்நாட்டில் நுழைய விட்டால் தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுத்துச் செல்வார்கள் என கூறினார்.