விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  Vikravandi bypoll


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் Vikravandi bypoll வாக்குபதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி. அன்புமணி ஆகியோர் வாக்கினை பதிவு செய்தார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 82.48 % வாக்குப்பதிவாகியுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 95,536 பேரும், பெண் வாக்காளர்கள் 99944 பேரும் வாக்களித்துள்ளனர்.


 விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல்நலக்குறைவால் ஏப்ரல் 6-ஆம் தேதி காலமான நிலையில், இத்தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் ஜூலை 10 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த வெளியூர்களில் பணிபுரியும் நபர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள்


விக்கிரவாண்டி தொகுதியில்  1 லட்சத்து 16 ஆயிரத்து 962 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 40 பெண் வாக்காளர் 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 95,536 பேரும், பெண் வாக்காளர்கள் 99,944 பேரும் வாக்களித்துள்ளனர்.


தேர்தல் களத்தில் 29 வேட்பாளர்கள் :


இதைத் தொடர்ந்து ஜூன் 14 முதல் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கலும், 24ஆம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 26 ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் திமுக சார்பில் அன்னியூர் அ.சிவா, பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் பொ. அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர்.


காலை 7 மணிக்கு, 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். விக்கிரவாண்டி, காணை, சூரப்பட்டு, சிறுவாலை, கெடார், நேமூர், திருவாமாத்துார் உட்பட பல வாக்குச்சாவடிகளில், காலையிலே அதிக அளவில் பெண்கள் வாக்களிக்க குவிந்தனர்.


வாக்குப்பதிவு நாளான நேற்றும், காணை வட்டாரத்தில், பல கிராமங்களில், ஆளும் கட்சி தரப்பில் வாக்குக்கு 500 ரூபாய் வழங்கியதாக புகார்கள் எழுந்தன. மதியம், வாக்காளர்களை கட்சியினர் வீடு தேடிச்சென்று, வாக்குச்செலுத்த அழைத்து வந்தனர். ஒரு சில இடங்களில், ஆளும் கட்சியினருக்கும், பா.ம.க.,வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திமுகவினர் வாக்குக்கு பணம் வழங்குவதாகவும், புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் பாமகவினர் புகார் தெரிவித்தனர்.


வாக்குப்பதிவு நிலவரம் 


காலை 9:00 மணிக்கு 12.94;


11:00  மணிக்கு 29.97;  


பகல் 1:00 மணிக்கு 50.95;


மாலை 3:00 மணிக்கு 64.44;


மாலை 5:00 மணிக்கு, 77.73;


மாலை 6:00 மணிக்கு 82.48 சதவீதம் வாக்குகள் பதிவாகின.


வாக்குப்பதிவு முடியும் நேரத்தில், வாக்குச்சாவடிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக, சில வாக்குச்சாவடிகளில் மாலை 6:00 மணிக்கு மேலும் வாக்குப்பதிவு நடந்தது.


வாக்கு சதவீதம்


2011 தேர்தலில் 81.39 சதவீதம்;


2016 தேர்தலில் 81.71 சதவீதம்;


2019 தேர்தலில் 84.35 சதவீதம்;


2021 தேர்தலில் 82.04 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.


இந்த தேர்தலிலும், 80 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. சிறு சலசலப்புகள் தவிர்த்து, அமைதியாக வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை, 13ம் தேதி நடைபெற உள்ளது.


276 வாக்குச்சாவடி மையங்கள் 


விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்களுக்கு பணி ஆணை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Third Level Randomization )  நடத்தப்பட்டது. 3 மிகவும் பதற்றமான வாக்கு சாவடிகள் , 41 பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்ளன.  220 CRPF உட்பட 2651 காவல் ஆளிநர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தேர்தல் பணியில் 1355 அலுவலர்கள் : 


276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் - 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்களுக்கும், 44 பதற்றமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள 53 நுண்பார்வையாளர்களுக்கும் பணி ஆணை ஒதுக்கீடு செய்யப்பட்டது.