7600 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. ஆனால் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அவகாசம் ஒதுக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு கட்சி சார்பாகவும் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டி போட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்த வகையில் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பல ஆயிரம் பேர் குவிந்த்தனர். அந்த வகையில் தற்போது வரை 7600 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

Continues below advertisement

இன்று வேட்பு மனு பரிசீலனை

இன்று காலை வேட்புமனு மீதான பரிசீலனையானது நடைபெறவுள்ளது. அப்போது வேட்புமனுவில் ஏதேனும் தவறுகள் இருந்தால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும். ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனு பரிசீலனைக்காக கூடுதல் நாட்களை தேர்தல் நடத்தும் அதிகாரி எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், பொதுவாக ஒரே நாளில் வேட்புமனு பரிசீலனையை முடித்து விடுவார்கள். நாளை மறு நாள் 9ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். எனவே வேட்பாளர்களுக்கு பதிலாக மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் நேரில் வந்தோ  அல்லது அவரின் அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாவோ வேட்புமனுவை திரும்பப் பெறலாம். 9-ந் தேதி மதியத்திற்குள் வேட்பாளர் இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுவிடும். அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பிறகு தொகுதி வாரியாக களம் காணும் மொத்த வேட்பாளர்கள் முழுவிவரம் தெரிய வரும். 

கரூரில் 108 பேர் வேட்புமனு தாக்கல்

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 108 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.  குறைந்தபட்சமாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் 11வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் 6095 ஆண் வேட்பாளர்கள், பெண் வேட்பாளர்கள் 1356, மூன்றாம் பாலினத்தவர் 3 இதுவரை 7454 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 

Continues below advertisement