UPSC Topper: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு; முதலிடம் பிடித்த சக்தி துபே- யார் இந்தப் பெண்?

2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில், சக்தி துபே என்னும் பெண் தேர்வர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Continues below advertisement

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று  (ஏப்.22) வெளியாகி உள்ளன. இதில், சக்தி துபே என்னும் பெண் தேர்வர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஹர்ஷிதா கோயல் இரண்டாவது இடத்தையும், டோங்ரே அர்ச்சித் பராக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Continues below advertisement

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் தேர்வரான சக்தி துபே, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 

1129 காலி இடங்கள்

யுபிஎஸ்சி அறிவிக்கையின்படி, இந்தத் தேர்வு மூலம் 1,129 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இந்திய நிர்வாக சேவையில் (ஐஏஎஸ்) 180 பதவிகளும், இந்திய வெளியுறவு சேவையில் (IFS) 55 பதவிகளும், இந்திய காவல் சேவையில் (ஐபிஎஸ்) 147 பதவிகளும் அடங்கும்.

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற நிலையில், செப்டம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடந்தது. தொடர்ந்து நேர்காணல் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 335 பேர் பொதுப் பிரிவினர். 109 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் ஆவர். ஓபிசி பிரிவில் 318 பேரும் எஸ்சி பிரிவில் 160 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் எஸ்டி பிரிவில் 87 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்வாகி உள்ளனர்.  

தமிழ்நாட்டில் முதலிடம் யார்?

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன் அகில இந்திய அளவில் 23ஆம் இடத்தைப்பிடித்துள்ளார். இவர் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார். அதேபோல நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற மோனிகா 39ஆவது இடத்தைப் பெற்றுள்ளார். 

தேர்வர்கள் https://upsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறியலாம். 

அதேபோல் https://upsconline.gov.in/FR-CSM-2024-Engl-220425.pdf என்ற இணைப்பில், தேர்வானவர்களின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola