2025ஆம் ஆண்டுக்கான குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம். 

மாநில அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள், குரூப் 1, 2, 3, 4 என பலவகையான தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்வுகள் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு, நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு ॥ எனப்படும் குரூப் 2 மற்றும்‌ 2ஏ-ல் அடங்கிய பதவிகளின்‌ நேரடி நியமனத்திற்கான அறிவிக்கையை 20.06.2024 அன்று தேர்வாணைய வலைதளத்தில்‌ வெளியிட்டது. மொத்தம் 534 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது.

செப்டம்பரில் முதல்நிலைத் தேர்வு

இத்தெரிவிற்கான முதல்நிலை எழுத்துத்‌ தேர்வு 14.09.2024 அன்று முற்பகல்‌, 38 மாவட்ட மையங்களில்‌ நடைபெற்றது. இத்தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட 7,93,966 தேர்வர்களில்‌ 5,83,467 தேர்வர்கள்‌ தேர்வு எழுதினர்‌. இத்தெரிவிற்கான குரூப் 2 மற்றும்‌ 2ஏ பணிகளுக்கான அறிவிக்கையில்‌ நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரத்தில்‌. முதன்மை எழுத்துத்‌ தேர்வுகளுக்குத்‌ தற்காலிகமாக அணுமதிக்கப்பட்ட தேர்வர்களின்‌ பதிவெண்‌ கொண்ட பட்டியல்கள்‌, டிசம்பர் மாதம் வெளியிடபட்டன.

பிப்ரவரியில் முதன்மைத் தேர்வு

முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றுக்காக 21,822 பேர் முதன்மைப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற்றன. 

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ளது.