விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளுக்கு வழிகாட்டும் 'காபி வித் கலெக்டர்' (Coffee with Collector) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Continues below advertisement

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவர்களின் கல்வித் தரம், திறன் மேம்பாடு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் உயர்கல்வி, தொழில் வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பு மற்றும் தனித்திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் (Coffee with Collector) நிகழ்ச்சி கெடார் அரசு மாதிரிப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இன்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தங்கள் கல்வி, உயர்கல்வி வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

Continues below advertisement

மேலும், மாணவர்கள் ஒழுக்கம், நேர மேலாண்மை, தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் எனவும், தன்னம்பிக்கையுடன் இலக்கை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்றும், அரசு வழங்கும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்கையில் வெற்றியடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகள், தொழில் தேர்வு, சிவில் சர்வீஸ், மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கேள்விகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான நேரடி உரையாடலுக்கு சிறந்த தளமாக அமைந்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தங்கள் கல்வி, உயர்கல்வி வாய்ப்புகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு, தொழில் முனைவு, தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பாக மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாணவர்கள் தங்களது எதிர்கால இலக்குகள், தொழில் தேர்வு, சிவில் சர்வீஸ், மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக கேள்விகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும், மாணவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையிலான நேரடி உரையாடலுக்கு சிறந்த தளமாக அமைந்ததுடன், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களும் எதிர்கால வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.