இந்திய நாட்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மனா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

Continues below advertisement

இதில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புதிய மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக, ''உயர்கல்வித் துறையில் புதிய நிறுவனங்கள், பல்கலைக்கழக நகரங்கள், பெண்கள் விடுதி மற்றும் தொலைநோக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பெண்கள் விடுதி கட்டப்படும்'' என்று அமைச்சர் நிர்மலா அறிவித்தார்.

இந்த நிலையில் திமுக அரசு அறிவித்து, செயல்படுத்தி வரும் தோழி விடுதிக்குப் போட்டியா இந்த மகளிர் விடுதி என்று கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement

அது என்ன தோழி விடுதி?

பெண்களின் அதிக பணிப் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 9 மாவட்டங்களில், பணிபுரியும் பெண்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் பிரத்யேக மகளிர் விடுதிகள் கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் தோழி விடுதிகள் தொடங்கப்பட்டன.

மேலும் பல இடங்களில் தோழி விடுதி கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு தோழி மகளிர் பணிபுரியும் விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

மாவட்டந்தோறும் மகளிர் விடுதி

அந்த வகையில் மத்திய அரசு உயர் கல்வித் துறையில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் மகளிர் விடுதி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. எனினும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்படவில்லை.