டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.22) வெளியாகி உள்ளன. தேர்வர்கள் https://apply.tnpscexams.in/result-groupIV/A5k3pfLQfrCvGl3shUzfbvYWyto7qiY2 என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.  

Continues below advertisement


கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில், 3,935 இடங்களை நிரப்ப நடத்தப்பட்ட குரூப் 4 முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. பின்னர் காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டு, 4,662 ஆக அறிவிக்கப்பட்டது. இந்த இடங்கள் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வெளியான தேர்வு முடிவுகள்


2025ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 12ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு மொத்தம் 13,89,738 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 11,48,019 பேர் தேர்வை எழுதினர். மீதமுள்ள 2,41,719 தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதவில்லை. இதனால் தேர்வை எழுதியவர்கள் விகிதம் 82.61 சதவீதமாக இருந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.


தற்போது தெரிவிக்கப்பட்டு உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை, 4,662 ஆக உள்ள நிலையில், இந்த இடங்கள் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?



  • தேர்வர்கள் தங்களின் பதிவெண், பிறந்த தேதி ஆகிய தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்.

  • அனைத்தையும் உள்ளீடு செய்து, சப்மிட் பொத்தானை அழுத்தவும்.

  • உடனே தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

  • வருங்கால தேவைக்காக அதை பதிவிறக்கம் செய்து, சேமித்துக் கொள்ளவும்.




கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/


தொலைபேசி எண்: +91-44-25300300


ஃபேக்ஸ்: +91-44-25300598


இ மெயில்: grievance[dot]tnpsc[at]tn[dot]gov[dot]in,


உதவிக்கு: helpdesk[at]tnpscexams[dot]in