குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி 2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு தொடங்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில், சான்றிதழ்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 

Continues below advertisement


குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி, இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப நடத்தப்படுகிறது. தற்போது வனக் காப்பாளர், வனக் கண்காணிப்பாளர் பணி இடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வை நடத்துகிறது. 


ஜூனில் தேர்வு; அக்டோபரில் முடிவு


2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 15,91,429 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ஆம் தேதி வெளியாகின. அதே நாளில் , காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் 559 உயர்த்தப்பட்டதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக அதிகரித்தது.


2025 ஜனவரி மாதம் கலந்தாய்வு


தொடர்ந்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கின. இந்த நிலையில், குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான கலந்தாய்வு எப்போது என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தேசமாகத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 


தேர்வு குறித்த அட்ட்வணை பற்றிய கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/English/SelectionSchedule.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/