டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் சென்னையில் ஜூலை 4 முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த தகவலை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

2026 ஜூன் 23 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட  அறிவிக்கையில் குரூப் 1 தேர்விற்கு 2026 ஜுன் 30 முதல் இணை யவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 4 முதல் பயிற்சி வகுப்புகள்

இந்த நிலையில், குரூப் 1 தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை 4 முதல் தொடங்க உள்ளன. தேர்விற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வுகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புப் பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது. திறமை மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் திறம்பட நடத்தப்பட உள்ளன. மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

Continues below advertisement

இப்பயிற்சி வகுப்புகளை அகில இந்திய இன்ஷியூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் வழங்க உள்ளது.

15 ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகள்

மேலும் இதுபோன்ற அனைத்துவகை அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் மத்திய, மாநில அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர்.

இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஏனைய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

வகுப்புகள் நடைபெறும் இடம்

எண். 6/9, அக்ரஹாரம் சந்து, அரண்மனைக்காரன் தெரு (கச்சாலீஸ்வரர் ஆலயம் அருகில்) அமைந்துள்ள இக்கல்வி மையத்தில் ஜூலை 4 முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.

வகுப்புகள் எப்போது?

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.45 மணி வரையில் வகுப்புகள் நடைபெறும். ஆர்வமுள்ள தேர்வர்கள் முன்பதிவு செய்வதுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் முகவரி‌க்கான ஆதார நகலுடன் வர வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: 97912 85693, 73387 03324,  73581 44387, 90426 92613, 63698 74318, 94446 41712 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும்.