தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு ஜூன் 11 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில்‌ மாநிலப்‌ பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ 2023- 2024ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயின்று 2024-2025 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககத்தின் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தமிழ்நாட்டில்‌ அரசுப்‌ பள்ளி மாணவ மாணவியர்களின்‌ திறனைக் கண்டறிவதற்கும்‌, அவர்களை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌, 2024- 2025 ஆம்‌ கல்வியாண்டிற்கான "தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்வு" 21.07.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


"தமிழ்நாடு முதலமைச்சரின்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு" விண்ணப்பிக்க விரும்பும்‌ தமிழ்நாடு மாநிலப்‌ பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ அரசுப்பள்ளிகளில்‌ பத்தாம்‌ வகுப்பு பயின்று தற்போது 2024- 2025ஆம்‌ கல்வியாண்டில்‌ பதினொன்றாம்‌ வகுப்பினை அரசுப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணாக்கர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலமாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பப் ‌படிவத்தினை 11.06.2024 முதல்‌ 26.06.2024 வரை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என்றும்‌, அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேர்வு கட்டணம்‌ ரூ.50/- (ரூபாய்‌ ஐம்பது மட்டும்‌) சேர்த்து 26.06.2024-ற்குள்‌ மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.


எனவே, தங்கள்‌ அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ மாணவியர்‌ இத்தேர்விற்கு விண்ணப்பித்திட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்கிடவும்‌, தேர்வு தொடர்பான அறிவிப்பினை மாணவர்கள்‌ அறியும்‌ வண்ணம்‌ அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ அறிவிப்புப்‌ பலகையில்‌ ஒட்டவும்‌, அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள்‌ விண்ணப்பித்திட ஊக்குவித்திடவும்‌ உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள்‌ வழங்க வேண்டும்.


ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை


இத்தேர்வில்‌ 1000 மாணவர்கள் நடைமுறையில்‌ உள்ள இடஒதுக்கீட்டின்‌ அடிப்படையில்‌ (500 மாணவர்கள்‌, 500 மாணவியர்கள்‌) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூபாய்‌ 10,000/-(மாதம்‌ ரூ.1000/- வீதம்‌ ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்‌ ) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்‌.


பாடத்திட்டம் என்ன?


தமிழ்நாடு அரசின்‌ 9 மற்றும்‌ 10ஆம்‌ வகுப்புகளில்‌ கணிதம்‌, அறிவியல்‌ மற்றும்‌சமூக அறிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடத்திட்டங்களின்‌ அடிப்படையில்‌கொள்குறி வகையில்‌ தேர்வு இருதாள்களாக நடத்தப்பெறும்‌. முதல்‌ தாளில்‌ கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. இரண்டாம்‌ தாளில்‌ அறிவியல்‌ மற்றும்‌ சமூகஅறிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌. முதல்‌ தாள்‌ காலை 10.00 மணி முதல்‌ 12.00 மணி வரையிலும்‌ இரண்டாம்‌ தாள்‌ பிற்பகல்‌ 2.00 மணி முதல் 4.00 மணி வரையிலும்‌ நடைபெறும்‌.


விண்ணப்பிப்பது எப்படி?


மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ விண்ணப்பப்‌ படிவத்தினை 11.06.2024 முதல்‌ 26.06.2024 வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம்‌ ரூ.50/- (ரூபாய்‌ ஐம்பது மட்டும்‌) சேர்த்து 26.06.2024-ற்குள்‌ மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌.


இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.