TN Govt School Admission: குறையும் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை? 11 நாட்களில் 72,600 பேர்தானா? பின்னணி!

16 நாட்களில் குறிப்பாக 11 வேலை நாட்களில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

TN Government School Admission : அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ஆம் தேதி தேதி அன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Continues below advertisement

37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள்

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 24 ஆயிரத்து 338 அரசு தொடக்கப்பள்ளிகளும், 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளும், 3129 அரசு மேல்நிலைப் பள்ளிகளும் என 37 ஆயிரத்து 553 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு 50-க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு,  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காலை உணவுத் திட்டமும் புதுமைப் பெண் திட்டமும் 7.5 சதவீத இட ஒதுக்கீடும் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி இழுத்துவந்தன. 

அரசுப் பள்ளிகளில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றுடன் பல்வேறு விதமான உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை

இதற்கிடையே தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கிவிடும். அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கும்.

எனினும் சேர்க்கையை அதிகரிக்கும்பொருட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கியது. இதற்கு நல்ல பலன் இருந்தது. இந்த நிலையில் தற்போது மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கி நடைபெற்று வருகிறது.

72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்க்கை

16 நாட்களில் குறிப்பாக 11 வேலை நாட்களில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரத்து 600 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கிய பதின்மூன்றே நாட்களில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.5 லட்சத்தைத் தாண்டியது. 

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை வேகம் சற்று குறைவாகவே உள்ளது. இதற்கிடையே சேர்க்கை வீதத்தை அதிகரிக்கவும் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola