சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் நாளை (ஜனவரி 10 சனிக்கிழமை) விடுமுறை இல்லை என்றும் பள்ளிகள் செயல்படும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 03.12.2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 10.01.2026 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் வியாழக் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.