தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023- 2024ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப விநியோகம் 9ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


ஆன்லைன் மூலம் விண்ணப்பம்


கடந்த ஆண்டு தமிழகத்தில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான விண்ணப்பங்களைhttps://tngasa.org/, https://tngasa.in/என்ற இணையதள முகவரிகளில்‌ பதிவு செய்தனர்.


இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டது. அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.


விண்ணப்பக்‌ கட்டணம்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‌Credit Card/ Debit Card/ Net Banking மூலம்‌ இணையம் வாயிலாகச் செலுத்தினர். இணையதள வாயிலாகக்‌ கட்டணம்‌ செலுத்த இயலாத மாணவர்கள்‌ கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில்‌ “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில்‌ வங்கி வரைவோலை மூலம் செலுத்தினர். நேரடியாகப் பணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. 


இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023- 2024ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப விநியோகம் 9ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.