2023- 2024ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (அக்.20)  கடைசித் தேதி ஆகும். இதற்கு உடனே விண்ணப்பிக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார். 


பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ அறிவியல்‌, கணிதம்‌, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு அதிக அளவில்‌ தயாராகி, பங்கு பெறும் நிலையில், அதைப்‌ போன்று தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு தெரிவித்தது. 


மாதாமாதம் ரூ.1500


இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.


தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட  அடிப்படையில் கொள்குறி வகைத் கேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்கனில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.


2023- 2024-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் சிபிஎஸ்இ, ICSE உட்பட பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 


அக்டோபர் 15ஆம் தேதி தேர்வு


இதைத் தொடர்ந்து முதன்முதலாக‌ 2022- 2023ஆம்‌ கல்வியாண்டில்  அக்டோபர் 15ஆம் தேதி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்பட்டது.  2.67 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில்,  1,500 மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  


2023- 2024-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்தப்பட உள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் 05.09.2023 முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 20 என்று அரசுத் தேர்வுகள் இயக்கக இயக்குநர் தெரிவித்துள்ளார். 


முன்னதாக தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான  அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனினும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு என்ற தேர்வு புதிதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்படாமல் கைவிடப்படுகிறதா? என்று கல்வியாளர்களும் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களும் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.