10,11, 12ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை  என்று விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.  


ஏற்கெனவே 1 முதல் 9ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 10,11, 12ஆம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாணவ, மாணவியர்களின் நலன் கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், 10,12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 19ஆம் தொடங்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை


கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.


இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண