தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கல்விக் கட்டணம் தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. 

Continues below advertisement

இதன்படி, தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் கல்விக் கட்டணத்தைத் தவிர இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்தப் பள்ளிகளில்?

அனைத்து தனியார் நர்சரி பிரைமரி, மெட்ரிக், CBSE மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளின் முதல்வர்களுக்கும், பள்ளிகளில் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கல்வி (fee Structure) கட்டணத்தினை பொது மக்கள் பார்வையிடும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும், சார்ந்த பள்ளிகளின் இணைய தளங்களில் வெளியிடவும் மற்றும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தில் வகுப்புவாரியாக கல்விக் கட்டணத்தினை அச்சடித்து வழங்கப்படவும் வேண்டும்.

Continues below advertisement

அவ்வாறு வழங்குவதை அனைத்து தனியார், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், CBSE மற்றும் இதர பிற வாரியப் பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதேபோல அவ்வாறு தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் தங்களுடைய கல்விக் கட்டணத்தை வெளிப்படைத் தன்மையுடன் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 4(1)(b) பிரிவின்படி விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ஆம் தேதிக்குள்…

எனவே மேற்காணும் ஆணையினை தவறாமல் பின்பற்றி தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் 05.06.2026 க்குள் கல்வி கட்டணத்தை விளம்பரப்படுத்த அறிவுறுத்துமாறும் மேலும் 10.06.2026 க்குள் சார்ந்த விவரத்தினை அறிக்கையாக இவ்வியக்ககத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்படுகிறது.

மேற்காணும் விவரங்கள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள்/ மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) பள்ளி ஆய்வின்போது உறுதி செய்யப்பட வேண்டும்.

அலுவலக கோப்பில் வைக்க வேண்டும்

மேலும் மேற்காணும் செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை புகைப்பட ஆதாரம் மற்றும் ஒப்புகையுடன் அனைத்து வகை பள்ளிகளிலிருந்து பெற்று தங்கள் அலுவலக கோப்பில் வைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.