12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், இன்று (13.05.2026 அன்று) காலை 11.00 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து இதனைப் பெறலாம்.

Continues below advertisement

எப்படி?

அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID, PASSWORD ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து, அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, தலைமையாசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரையிட்டு 13.05.2026 முதலே மாணவர்களுக்கு வழங்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அதேபோல தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தாங்களாகவே பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக Notification HSE -II Year March-2026 - Statement of Marks & பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Continues below advertisement

விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பம் செய்தல்

விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். இதற்கு 16.05.2026 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. Arrear தேர்வர்களும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கலாம். 1 மேற்கண்ட நாட்களில்

ஒவ்வொரு பாடத்திற்கும் விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகலின் முக்கியத்துவம்

விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறு கூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் குறித்து ஊடகங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.

விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மறுகூட்டல் / மறுமதிப்பீடு செய்திட விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.