10-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தேர்ச்சி விகித வாரியாக கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் எவை என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.


ராணிப்பேட்டை 83.54%


நாகை 84.41%


கிருஷ்ணகிரி 85.36%


மயிலாடுதுறை 86.31%


செங்கல்பட்டு 88.27%


தமிழ்நாட்டிலேயே ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீதம் பெற்றும் கடைசி இடத்தில் உள்ளது. 


2022- 23ஆம் கல்வியாண்டில்  தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த ஏப்ரல் 6 -ஆம் தேதி தொடங்கி 20 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாட்டில் சுமார் 9,14, 320  மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 25 -ஆம் தேதி தொடங்கி மே 3- ஆம் தேதி வரை நடைபெற்றது. 


 83 தேர்வு முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்ற நிலையில், 60 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். மேலும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி நிறைவடைந்து முதலில் 10 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17- ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால்  சில காரணங்களால் தேர்வு முடிவு தேதி மே 19- ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியானது.


சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் திட்டமிட்டபடி  10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். 


தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in  ஆகிய இணையதளங்கள் மூலம் மாணாக்கர்கள்  தெரிந்துக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்ப்படத்தில் மாணாக்கர்கள் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை




  • தமிழ் - யாருமில்லை 

  • ஆங்கிலம் - 89 பேர் 

  • கணிதம் - 3649 பேர் 

  • அறிவியல் - 3584 பேர் 

  • சமூக அறிவியல் - 320 பேர்  முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.