பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்காக ரூ.14,90,52,000 அனுமதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்து உள்ளதாவது:


தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, மாற்றுத்‌ திறனாளிகளுக்கு அரசுப்‌ பேருந்துகளில்‌ கட்டணமில்லாப்‌ பயணச்‌ சலுகை, மாற்றுத்‌ திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்‌ தொகை ரூ.1,000 என்பதை ரூ.1,500ஆகவும்‌ உயர்த்தி வழங்கினார்‌. அத்துடன்‌, தற்போது, பள்ளிகளிலும்‌, கல்லூரிகளிலும்‌ பயிலும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகையையும்‌ உயர்த்தி அவர்கள்‌ ஊக்கமுடன்‌ கல்வி கற்க உதவி செய்துள்ளார்‌.


அதாவது, பள்ளிகளில்‌ படிக்கும்‌ மாணவ, மாணவியர்களில்‌ 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை ஆண்டுக்கு 1,000 ரூபாய்‌ என்பதைஇரு மடங்காக உயர்த்தி 2,000 ரூபாய்‌ என்றும்‌ 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 8-ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை ஆண்டுக்கு 3,000 ரூபாய்‌ என்பதை இரு மடங்காக உயர்த்தி 6,000 ரூபாய்‌ என்றும்‌; 9-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை ஆண்டுக்கு 4,000 ரூபாய்‌ என்பதை இரு மடங்காக உயர்த்தி 8,000 ரூபாய்‌ என்றும்‌ உயர்த்தி வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்‌.


பட்டப் படிப்புக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை


அதேபோல, கல்லூரிகளில்‌ பட்டப்‌ படிப்பு படிக்கும்‌ மாற்றுத்‌ திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும்‌ வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை 6 ஆயிரம்‌ ரூபாய்‌ என்பதை 12 ஆயிரம்‌ ரூபாய்‌ என இருமடங்காக உயர்த்தி வழங்கிடவும்‌ ஆணையிட்டுள்ளார்கள்‌.


பட்ட மேற்படிப்புக்கு ரூ.14 ஆயிரம்


மேலும்‌, தொழிற்கல்லூரிகளிலும்‌, பட்ட மேல்படிப்புகளிலும்‌ படிக்கின்ற மாற்றுத்‌ திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஆண்டுதோறும்‌ வழங்கப்படும்‌ கல்வி உதவித்‌ தொகை 7 ஆயிரம்‌ ரூபாய்‌ என்பதை 14 ஆயிரம்‌ ரூபாயாக இரண்டு மடங்கு உயர்த்தி வழங்கிடவும்‌ ஆணையிட்டுள்ளார்கள்.‌ இதற்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம்‌ ரூபாயை அனுமதித்து 10.9.2024 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்கள்‌.


ஆராய்ச்சிப் படிப்புக்கு ரூ.1 லட்சம்


பள்ளி, கல்லூரி படிப்புகளுடன்‌, மாற்றுத்‌ திறனாளி மாணவ-  மாணவியர்கள்‌ படிப்பை நிறுத்திவிடக்‌ கூடாது என்பதற்காக அவர்கள்‌ ஆராய்ச்சிப்‌ படிப்புகளிலும்‌ ஈடுபட வேண்டும்‌ என்னும்‌ விழைவோடு ஆராய்ச்சிப்‌
படிப்பில்‌ சேரும்‌ மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்க்கு ஊக்கமளிப்பதற்காக அவர்களுக்கு முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகை திட்டத்தின்கீழ்‌ தலா 1 லட்‌சம்‌ ரூபாய்‌ வீதம்‌ 50 மாற்றுதிறனாளிகள்‌ பயன்புபறும்‌ வகையில்‌ 50 இலட்சம்‌ ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.