ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மட்டும் தனது அலைபேசியைப் பயன்படுத்திட அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Continues below advertisement

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தேர்வர்களின் வருகைப் பதிவு விவரத்தினை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

வருகை புரியாதோர் விவரம்

தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வருகை புரியாதோர் (Absentees Entry) / மொழிப்பாட விலக்குப் பெற்றோர் (Language Exemption) போன்ற விவரங்களை பிற்பகல் 02.30 மணிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி தவறாது பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.

Continues below advertisement

அனைத்து தேர்வர்களும் தேர்வெழுத வருகை புரிந்திருப்பின் All Present என்பதை Click செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் அனைத்து நிலை தேர்வு மையப் பணியாளர்களின் முதன்மைக் கல்வி அலுவலரால் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட நியமன ஆணையினை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்கவேண்டும்.

தனி அலமாரி பயன்படுத்தக்கூடாது

தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர். அறைக் கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர், எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் அனைத்து நிலை தேர்வு மையப் பணியாளர்களிடம் பெறப்பட்ட கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக்கூடாது. இப்பணியினை அறைக் கண்காணிப்பாளர் அறிவுரைக் கூட்டம் மற்றும் அறை ஒதுக்கீடு (RooM allotment) முடிக்கும் முன்பே அதாவது Control Room-ல் அனைத்துப் பணியாளர் வருகை புரிந்தவுடன் முடிக்கப்பட வேண்டும்.

அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தேர்வு நாள் அன்றைய தேர்வர்கள் வருகை அறிக்கையினை (Present/ Absent Report) தேர்வு முடிவுற்ற பின்னர், பிற்பகல் 01.30 மணிக்கு மேல் உதவி இயக்குநர் வினாத்தாள் கட்டுக்காப்பாளரிடம் தெரிவித்தால் போதுமானது தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கண்காணிப்பாளர் மட்டும் அலைபேசி பயன்படுத்தலாம்

மேலும், தேர்வு நேரத்தில் தேர்வு நடத்துதல் தொடர்பாக ஏதேனும் அவசரத் தேவைகள் இருப்பின் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் மட்டும் தனது அலைபேசியைப் பயன்படுத்திட அனுமதி வழங்கப்படுகிறது.

தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும் நாட்களில் தேர்வறைகளில் CCTV கேமராக்கள் உள்ள மையங்களில் கேமராக்களை ஆய்வு செய்து (வீடியோவினை பார்வையிட்டு) முதன்மைக் கண்காணிப்பாளர்கள் விரிவான அறிக்கை அளித்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.