ஐஐடிஜேஇஇஅட்வான்ஸ்டுநுழைவுத் தேர்வில்வரலாற்றில்முதல்முறையாக 10,000-க்கும்மேற்பட்டமாணவிகள்தேர்ச்சிபெற்றுபுதியசாதனைபடைத்துள்ளனர்.
இந்தியாவின் மிக உயரிய மற்றும் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடி-களில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced) நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
வரலாற்றுச் சாதனை
இந்தத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு முடிவுகளில் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஐஐடி நுழைவுத்தேர்வு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, முதல்முறையாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நடப்பு ஆண்டுக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்தியது. மே 17ஆம் தேதி இதற்கான தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் மொத்தம் 1,88,389 மாணவ மாணவிகள் இந்த கடினமான தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,79,694 மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், ஒட்டுமொத்தமாக 56,880 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10,107 பேர் மாணவிகள்
இவர்களில் 10,107 பேர் மாணவிகள் ஆவர். கடந்த காலங்களில் ஐஐடி வளாகங்களில் மாணவிகளின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
ஜூன் 1ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகளில் ஐஐடி டெல்லியைச் சேர்ந்த ஷுபம் குமார் முதலிடம் பெற்றார். இவர் 360 மதிப்பெண்களுக்கு 330 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.
அரோஹி தேஷ்பாண்டே
அதே நேரத்தில் மாணவிகளுக்கான தேர்ச்சிப் பட்டியலில் மாணவி அரோஹி தேஷ்பாண்டே (ஐஐடி டெல்லி மண்டலம்) தேசிய அளவில் 77-வது இடத்தைப் பிடித்து, மாணவிகள் தரப்பில் அகில இந்திய அளவில் முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார். அவர் மொத்தம் உள்ள 360 மதிப்பெண்களுக்கு 280 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சித் துறைகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை இந்த தேர்வு முடிவுகள் ஆணித்தரமாக நிரூபித்துள்ளன.
