பள்ளிகளைத் திறப்பதில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 


கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு


தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 


இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைந்தது.


மே 14-ல் இருந்து கோடை விடுமுறை


இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. புதிய வகை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வகை தொற்றுகள் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 




எந்த மாற்றமும் இல்லை


இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்று கேள்வி எழுந்தது. இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் இன்று பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ''பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதில் இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லை. அதேபோல பதினொன்றாம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். அதில் இப்போதுவரை எந்த மாற்றமும் இல்லை


கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு வருகிறதா, முகக்கவசம் அணிய வேண்டுமா என்றும் பள்ளி திறப்பில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமா என்பதையும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி முதலமைச்சர் அலுவலகம் முடிவெடுத்து அறிவிக்கும். அதை நாங்கள் பின்பற்றுவோம்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண