கடந்த 7 தசாப்தங்களாக பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகளுக்குப் பெயர்பெற்ற ஐஐடி சென்னையின் அடையாளம் தற்போது ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. இதுவரை பொறியியல் பட்டதாரிகளை மட்டுமே உருவாக்கி வந்த இந்த நிறுவனம், இனி வருங்காலத்தில் மருத்துவர்களை உருவாக்கத் தயாராகி வருகிறது.

Continues below advertisement

மருத்துவ அறிவியல் பள்ளி

ஐஐடி மெட்ராஸ் மருத்துவக் கல்வியில் அடியெடுத்து வைக்கவுள்ளதுடன், இதற்காக மருத்துவ அறிவியல் பள்ளியை (School of Medical Sciences) புதிதாகத் தொடங்க உள்ளது.

இனி மாணவர்கள் இங்கு மருத்துவக் கல்வியைத் தொடர முடியும். இதுகுறித்துப் பேசிய இயக்குநர் பேராசிரியர் காமகோடி, ஐஐடி மெட்ராஸ் இந்த மருத்துவ அறிவியல் பள்ளியை தொடங்கும் என்றும், இங்கிருந்து மாணவர்கள் மருத்துவப் பட்டங்களைப் பெற முடியும்.

Continues below advertisement

மருத்துவத் துறையில் நிறுவனம் புதிதாக எதையும் தொடங்கவில்லை. கடந்த மே 2023-லேயே 'மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை' ஐஐடி சென்னை தொடங்கியது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இத்தகைய முன்னெடுப்பைக் கொண்ட முதல் துறை இதுவே ஆகும். இங்கு, நான்கு ஆண்டு இளங்கலை மருத்துவக் கல்வி வழங்கப்பட்டு, மாணவர்கள் ஹைப்ரிட் பட்டதாரிகளாக உருவாக்கப்படுவார்கள். இந்தப் பட்டங்களில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் ஆகியவை அடங்கும்.

இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடியைச் சந்தித்தார். அந்தப் புகைப்படங்களை அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு, ஐஐடி மெட்ராஸ் இயக்குநரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று எழுதியுள்ளார்.

மேலும், "கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதுடன், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை நிறுவனமாக தனது நிலையை மேலும் பலப்படுத்துகிறது.

நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டையும், இந்தியாவின் அறிவுசார் சூழல் அமைப்புக்கு அவர் அளிக்கும் பங்களிப்பையும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் காமகோடியின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.

தொழில்நுட்பநிறுவனம்மருத்துவர்களைஉருவாக்கவிரும்புவது ஏன்?

தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது மருத்துவப் பள்ளிகளைத் தொடங்க வேண்டியது மிக அவசியமாகும். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நவீன மருத்துவம் முழுமையாகத் தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என காமகோடி விளக்கினார்.

இத்தகைய சூழ்நிலையில், உயிர் காக்கும் தொழில்நுட்பத்திற்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பது எந்தவொரு நாட்டிற்கும் ஆபத்தானது. எனவே, தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளிடம் இருந்து விலைக்கு வாங்குவதற்குப் பதிலாக, அதனை இந்தியா தனது சொந்த நாட்டிலேயே உருவாக்க வேண்டும்.

ஐஐடி மெட்ராஸின் இந்த முயற்சி வெறும் பாரம்பரிய மருத்துவர்களை உருவாக்குவது மட்டுமின்றி, மருத்துவ அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஒரே தளத்தில் கொண்டு வரும் ஒரு பெரிய படியாகும். இன்றைய காலகட்டத்தில், நோய்களின் துல்லியமான சிகிச்சைக்கு எம்ஆர்ஐ, அதிநவீன மருத்துவ இமேஜிங் சிஸ்டம்கள், செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களின் முக்கியத்துவம் வேகமாக அதிகரித்துள்ளது.

இச்சமயத்தில், ஹெல்த்கேர் சாப்ட்வேரையும் பொறியியலையும் இணைப்பது மிகவும் அவசியமாகிவிட்டது. ஐஐடியின் இந்த நடவடிக்கையால், நாட்டின் மருத்துவத் துறை தொழில்நுட்ப ரீதியாக வலுவடைந்து முழுமையான தற்சார்பு அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.