இந்தியாவிலேயே தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஐஐடி மெட்ராஸ், பிடெக் பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய தலைவர்களாக உருவாக்கத் தயாராகி வருகிறது.

Continues below advertisement

ஐஐடி சென்னை, செயற்கை நுண்ணறிவு தொடர்பான பிடெக் படிப்பின் மூலம் மாணவர்களை செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகளாவிய தலைவர்களாக மாற்றத் தயாராக உள்ளது. வரவிருக்கும் 2025-26 கல்வியாண்டில் இரண்டாவது தொகுதி மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது.

என்ஐஆர்எப் தரவரிசையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள கல்வி நிறுவனத்தின் இந்த இளங்கலைப் பட்டப்படிப்பு, மாணவர்களுக்கு முக்கிய திறன்களையும், அறிவையும் வழங்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

எதற்காக இந்தப் படிப்பு?

செயற்கை நுண்ணறிவு அடிப்படைகள் மற்றும் பயன்பாடுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதில் கவனம் செலுத்தும் வகையில் அடிப்படை நிலையில் இருந்து இந்த பிடெக் பட்டப்படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், உள்ளகப் பயிற்சிகள், இளங்கலை ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றையும், வலுவான தொழில்துறை இணைப்பையும் கொண்டுள்ளது.

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அடிப்படை ஆராய்ச்சி முதல் உற்பத்தி மற்றும் சுகாதாரப் பராமரிப்பு போன்ற பயன்பாட்டுத் துறைகள் வரை பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

உலகளவில் செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்ட பள்ளிகளில் ஒன்றாக இருக்கும் வகையிலும், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கொள்கை குறித்து அரசுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியில் பி.டெக் படிப்பு வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படுவது எப்படி?

ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரவிருக்கும் JOSSA கவுன்சிலிங்கில் இப்பாடத்திட்டத்தை தேர்வு செய்யலாம். (Course Code - 412L) ஜேஇஇ மூலம் 50 மாணவர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள்.

இந்த பி.டெக். படிப்பு, கல்வி சார்ந்த நெகிழ்வுத் தன்மையை வழங்கும், இதனால் மாணவர்கள் துறைக்குள்ளும் வெளியிலும் பல்வேறு தேர்வுப் பாடங்கள் மூலம் தங்கள் கற்றல் பயணத்தை வடிவமைக்க முடியும். பேச்சு மற்றும் மொழி தொழில்நுட்பம் மற்றும் கணினி பார்வையின் நுணுக்கங்களை ஆராய்வது முதல் கட்டுப்பாடு மற்றும் கண்டறிதல் மற்றும் நேரத் தொடர் பகுப்பாய்வில் பயன்பாடுகளை ஆராய்வது வரை, மாணவர்கள் தனிப்பட்ட ஆர்வம் மற்றும் ஆர்வமுள்ள பகுதிகளை ஆழமாக ஆராயலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.iitm.ac.in/