தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்து வகைப் பணியாளர்களையும் பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


பள்ளிக்கல்வித்துறையில்பணியாற்றும்அனைத்து வகைப்பணியாளர்கள் மூன்று வருடத்திற்கு மேல்ஒரே அலுவலகத்தில்‌/ பணியிடத்தில்பணிபுரியும்பட்சத்தில்அவர்களை மாறுதல்செய்திடவும்மற்றும்பொதுவான விருப்ப மாறுதல்ஆண்டுதோறும்நடத்திடவும்அரசால்நெறிமுறைகள்வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில்அனைத்துவகை இயக்ககங்கள்‌ / அலுவலகங்கள்நிர்வாகம்திறம்பட செயல்படும்பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


3 ஆண்டுகளுக்கு மேல்‌ பணிபுரிந்தால் பணி மாறுதல்


பள்ளிக்கல்வித்துறையின்கீழ்செயல்படும்அலுவலகங்கள்‌ / ஆசிரியர்தேர்வு வாரியம்‌ / இயக்ககங்கள்‌ / பள்ளிகள்‌ / இயக்ககங்களில் ஜூன் 30 நிலவரப்படி 3 ஆண்டுகளுக்கு மேல்பணிபுரியும்நேர்முக உதவியாளர்‌, கண்காணிப்பாளர்‌ / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்‌ / உதவியாளர்‌ / இளநிலை உதவியாளர்‌ / தட்டச்சர்‌ / சுருக்கெழுத்து தட்டச்சர்‌- 1,2,3 விவரங்களை பணியிட வாரியாகத் தொகுக்க வேண்டும். அவற்றைத் தனித்தனியாக a3sec.tndse@gmail.com / cosea4sec@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 05.07.2024 அன்று மாலை 5 மணிக்குள்அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்தெரிவிக்கப்பட்டுள்ளது.


 மேலும்தங்கள்கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களில்பணிபுரியும்பணியாளர்விவரங்கள்விடுபடாமல்முழுமையான வகையில்விவரம்அளிக்க வேண்டும் எனவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்தெரிவிக்கப்பட்டுள்ளது.


a3sec.tndse@gmailcom - நேர்முக உதவியாளர்‌, கண்காணிப்பாளர்‌ / பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர்


cosea4sec@gmail.com - உதவியாளர்‌ / இளநிலை உதவியாளர்‌ / தட்டச்சர்‌ / சுருக்கெழுத்து தட்டச்சர்‌-1, 2, 3


இதுகுறித்த அறிவுறுத்தலை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், அனைவருக்கும் கல்வி இயக்கக மாநிலத் திட்ட இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் வழங்கியுள்ளார்.