லண்டனை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ஆட்சேர்ப்பு மற்றும் திறமை தீர்வுகள் நிறுவனமான ராபர்ட் வால்டர்ஸ் நடத்திய கணக்கெடுப்பில், Gen-Z தொழில் வல்லுநர்களில் 52 சதவீதம் பேர் இடைநிலை மேலாளர்களாக (middle managers) இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 69 சதவீதம் பேர், இடைநிலை மேலாளர் பணியில் மன அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாகவும் வெகுமதி குறைவாக இருப்பதாகவும் நம்புகிறார்கள். பதிலளித்தவர்களில் பதினெட்டு சதவீதம் பேர் முடிவெடுப்பதில் கட்டுப்பாடுகள் உள்ளதாக நம்புகிறார்கள், மேலும் 11 சதவீதம் பேர் வளர்ச்சி குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டினர்.

தனிப்பட்ட வளர்ச்சியே காரணம்

இந்த கணக்கெடுப்பில் மேலும் சில சுவாரசிய தகவல்களும் கிடைத்துள்ளன. அதன்படி, Gen- Z இல் 72 சதவீதம் பேர் மற்றவர்களை நிர்வகிப்பதை விட தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் திறன்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, தொழில் முன்னேற்றத்திற்கு தங்களுக்கென தனிப்பட்ட வழியை விரும்புவது தெரிய வந்துள்ளது.

அதேபோல 36 சதவீதம் பேர் விரும்பவில்லை என்றாலும், தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இதைச் செய்ய நேரிடும் என்று நினைக்கிறார்கள். அதே நேரத்தில் 16 சதவீதம் பேர் இடைநிலை மேலாளர்களாக மாறுவதை முற்றிலும் தவிர்க்கிறார்கள்.

30 சதவீத வேலை இழப்புகள்

Meta மற்றும் Citigroup உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இந்த இடைநிலை மேலாண்மை பணியைக் குறைத்ததால், சமீபத்திய வேலை இழப்புகளில் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது.

Gen-Z தலைமுறையினர், தங்களின் தொழில்முனைவோர் மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களை நிர்வகிப்பதில் நேரத்தை செலவிடுவதை விட, தங்கள் முழு திறமையையும் திட்டங்களுக்கு கொண்டு வரவும், தங்கள் சொந்த பிராண்டை வளர்ப்பதில் நேரத்தை செலவிடவும் விரும்புகிறார்கள். இடைநிலை மேலாண்மை பாத்திரங்களை ஏற்பதில் அவர்களுக்கு இருக்கும் இந்த தயக்கம் பின்னர் முதலாளிகளுக்கு சிக்கலை உருவாக்கலாம்.

வருங்காலத்தில் சிக்கல்

இடைநிலை மேலாண்மை பாத்திரங்கள் முக்கியமானவை, 89 சதவீதம் முதலாளிகள் இடைநிலை மேலாளர்கள் தங்கள் நிறுவனத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நடுத்தர அளவிலான மேலாண்மை எந்தவொரு நிறுவனத்தின் முக்கிய மையமாக உள்ளது. இது வருங்காலத்தில் சிக்கலை உருவாக்கும்’’.

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.