டிஎன்பிஎஸ் தேர்வு

அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பலரின் கனவாகும். அந்த வகையில் அரசு பணியில் சேர்வதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வானது நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அரசு பணியில் இணைய முடியும், அந்த வகையில் அரசு பணிக்கு ஏற்றவகையில் குரூப் 1 முதல் குரூப் 4 வரை தேர்வுகள் நடத்தப்படும். அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மிக முக்கியமான தேர்வு குரூப் 1 தேர்வாகும்,  துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர் போன்ற உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுக்க இந்த தேர்வானது நடைபெறவுள்ளது. அந்த வகையில் இந்தாண்டிற்கான தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

தேர்வர்களுக்கு இலவச பயிற்சி

எனவே இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்பானது நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  TNPSC தொகுதி-1 ற்கான முதல்நிலை தேர்விற்கு (TNPSC-GROUP-I Prelims) இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 01-06-2026 முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

இலவச பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி.?

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகி ட்டுகொள்ளப்படுகின்றார்கள். 

Continues below advertisement

மேலும், விவரங்களுக்கு, decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். https://forms.gle/9FX7gfSJhstpwtrce στ கூகுள் படிவத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அந்த அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.