TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்

TNPSC GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.01.2025 அன்று முதல் திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது

Continues below advertisement

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டுவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணிகளில் சேர்ந்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படவுள்ள TNPSC GROUP-IV தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 08.01.2025 அன்று முதல் திங்கள் முதல் வெள்ளி) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் 07.01.2025க்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பபட்டுள்ளது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தெரிவித்துள்ளார்.

குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல்வேறு பணி நிலைகளில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சியால் நிரப்பப்படுகின்றன. இதில் பத்தாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வுக்குத்தான் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. சில ஆயிரம் பணியிடங்களுக்கு கூட பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள். விஏஓ, இளநிலை உதவியாளர் போன்ற பணியிடங்கள் என்றாலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள். நடப்பு ஆண்டில் சுமார் 8 ஆயிரம் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு எழுத 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள்.

கடந்த ஆண்டுக்கான தேர்வு நடந்து முடிந்து முடிவுகளும் வெளியாகிவிட்டன. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் போன்ற அடுத்த கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஎன்பிஎஸ்சியை பொறுத்தவரை அடுத்த ஆண்டும் நடைபெற இருக்கும் தேர்வு விவரங்களை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. ஆண்டு கால அட்டவணைப்படி, 2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஜூலை மாதம் நடைபெற இருக்கும் குரூப் 4 தேர்வுக்கு தேர்வர்கள் தற்போதே தயாராகி வருகிறார்கள்.

தேர்வர்கள் பலரும் கோச்சிங்க் சென்டர்களிலும் சென்று படித்து வரும் நிலையில், ஏழை எளிய தேர்வர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பிலும் குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். மாவட்ட வாரியாக மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தின் மூலமாகவும் சில நேரங்களில் நடத்தப்படுகிறது. இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி  தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola