<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை</title><atom:link href="https://tamil.abplive.com/education/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 23 Jul 2026 10:48:36 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:27:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;வரவிருக்கும் தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), கடந்த 16 ஆண்டுகளாகக் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாகத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;16 ஆண்டு காலப் பணி அனுபவமும், தற்போதைய நிலையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் கடந்த 2011-ஆம் கல்வியாண்டில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; 2020-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூபாய் 5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு, ஊதியம் 10,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; அதனைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் ரூபாய் 5,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சம்பளமாக ரூபாய் 10,000 மற்றும் உதவித்தொகையாக ரூபாய் 5,000 என மொத்தம் ரூபாய் 15,000 வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோரிக்கைகளும் ஏமாற்றங்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அரசுகளுமே பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பியபோதும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்காலக்கட்டத்தில் மரணம் மற்றும் பணி ஓய்வு காரணமாகச் சுமார் 5,000 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன. தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்குறுதியை நிறைவேற்றத் தவெக அரசுக்கு வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது முதலாவது பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க உள்ளது. &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வின் தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்காலிகமாகப் பணிபுரிந்த காலத்திற்கு நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான &quot;சம வேலைக்கு சம ஊதியம்&quot; பெற்றுத் தரப்படும். என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. &quot;இந்த பணி நிரந்தர வாக்குறுதிக்கான கோப்பில் முதலமைச்சர் விஜய் கையொப்பமிட்டால், கடந்த 16 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 11,773 ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய ஒளிமயமான வாழ்வு கிடைக்கும்.&quot; என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் ஆசிரியர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (PF), உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணம், பணிநிறைவு பணிக்கொடை (Gratuity) போன்ற எந்தவொரு சமூகப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல், குறைந்த தொகுப்பூதியத்தில் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர்களின் நலன் கருதி 16 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றி வரும் இவர்களை முதலில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் பின்னரே ஏற்படுகின்ற காலிப்பணியிடங்களை உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட பாடங்களில் நிரப்ப வேண்டும். எனவே, தற்போது 1,328 உடற்கல்வி ஆசிரியர்களைக் காலிப் பணியிடங்களில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கைவிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது 11,773 ஆசிரியர்களுக்கான ரூ 15,000 தொகுப்பூதியத்திற்கு அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ 200 கோடி செலவாகிறது. இவர்களைக் காலமுறை ஊதியத்தில் (அடிப்படைச் சம்பளம் ரூ 20,600) கொண்டு வர ஆண்டுக்கு கூடுதலாக ரூபாய் 200 கோடி மட்டுமே தேவைப்படும். எனவே, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், அமைச்சரவையின் கொள்கை முடிவாக இதற்கான அறிவிப்பைச் சேர்க்க வேண்டும், காலமுறை சம்பளம் வழங்கத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி, அவர்களைச் சிறப்பாசிரியர்களாக நியமித்து முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/97310f713b35e8d2fae06914e08b63841784739388779186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/education/tnpsc-vacant-posts-tamil-nadu-government-chief-minister-office-budget-session-announcement-268628</link><comments>https://tamil.abplive.com/education/tnpsc-vacant-posts-tamil-nadu-government-chief-minister-office-budget-session-announcement-268628#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 17:59:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tnpsc-vacant-posts-tamil-nadu-government-chief-minister-office-budget-session-announcement-268628</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;டிஎன்பிஎஸ்சி&lt;/strong&gt; &lt;strong&gt;மூலம்&lt;/strong&gt; &lt;strong&gt;காலிப் பணியிடங்களை&lt;/strong&gt; &lt;strong&gt;நிரப்ப&lt;/strong&gt; &lt;strong&gt;முதல்வர்&lt;/strong&gt; &lt;strong&gt;அலுவலகத்தில்&lt;/strong&gt; &lt;strong&gt;தீவிர&lt;/strong&gt; &lt;strong&gt;ஆலோசனை&lt;/strong&gt; &lt;strong&gt;செய்யப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து&lt;/strong&gt; &lt;strong&gt;பட்ஜெட்&lt;/strong&gt; &lt;strong&gt;தொடரில்&lt;/strong&gt; &lt;strong&gt;முக்கிய&lt;/strong&gt; &lt;strong&gt;அறிவிப்பு&lt;/strong&gt; &lt;strong&gt;வெளியாக&lt;/strong&gt; &lt;strong&gt;உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் காலி இடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்பதும் ஆனால் கடைசியில் சொற்ப இடங்களே நிரப்பப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு முதல்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இதற்கிடையே காலி இடங்களை விரைந்து நிரப்புவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை &lt;a title=&quot;டிஎன்பிஎஸ்சி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tnpsc&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;டிஎன்பிஎஸ்சி&lt;/a&gt; நடத்தினாலும், எந்தெந்த துறைகளில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற தரவுகளை அந்தந்த அரசுத் துறைகள்தான் தேர்வாணையத்திடம் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளைத் துரிதப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு தமிழ்நாடு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் அலுவலகம் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளதால், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அப்போது, அரசுப் பணிகளுக்கான கூடுதல் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/what-happens-if-you-sleep-without-removing-your-makeup-268536&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/17e5661fd565d0b6a9bb360a4c6505761784723340589332_original.png" width="220"/></item><item><title><![CDATA[Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?]]></title><link>https://tamil.abplive.com/education/tamilnadu-chief-minister-breakfast-scheme-name-changed-to-kamarajar-breakfast-scheme-tvk-govt-268624</link><comments>https://tamil.abplive.com/education/tamilnadu-chief-minister-breakfast-scheme-name-changed-to-kamarajar-breakfast-scheme-tvk-govt-268624#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:54:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tamilnadu-chief-minister-breakfast-scheme-name-changed-to-kamarajar-breakfast-scheme-tvk-govt-268624</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கூடவே, தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.&amp;nbsp;ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நிதி அனுமதி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவ/ மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/ மாணவியருக்கு, ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில், ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00,000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HH8iveGCtPU?si=_VRM_txtZMvvEYZp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13,57,25,000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் (ரூபாய் ரூ.217,63,09,395/க்கான இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராசர் என்பதால் அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/what-does-ai-know-about-you-268535&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/318a1e1626294753dcc341830de44bed1784719390541332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!]]></title><link>https://tamil.abplive.com/education/neer-ezhil-palli-tamil-nadu-government-schools-wastewater-treatment-nature-based-solutions-268609</link><comments>https://tamil.abplive.com/education/neer-ezhil-palli-tamil-nadu-government-schools-wastewater-treatment-nature-based-solutions-268609#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:00:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/neer-ezhil-palli-tamil-nadu-government-schools-wastewater-treatment-nature-based-solutions-268609</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக &quot;நீர் எழில் பள்ளி&quot; (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன இது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரசுப் பள்ளிகளை நீர் மேலாண்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தழுவும் திறன் (Climate Resilience) மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் முன்னோடி வளாகங்களாக மாற்றும் நோக்கில், &quot;நீர் எழில் பள்ளி&quot; (Neer Ezhil Pall) என்ற புதிய முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை தி.நகரில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் பள்ளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 'நீர் சமநிலை' (Water Balance) திட்டத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலிலும், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் (TNGCC) ஆதரவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் எளிதில் பின்பற்றக்கூடிய, விரிவுபடுத்தக்கூடிய ஒரு மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கழிவுநீர் சுத்திகரிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்தின் கீழ், இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature-based Solutions NbS) மூலம், பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் நாளொன்றுக்கு சுமார் 25,000 லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாகச் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இதன் மூலம் பசுமையான பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டல், பல்லுயிர் பெருக்கம், நகர்ப்புற வெப்பத் தணிப்பு மற்றும் காலநிலை மீள்திறன் ஆகியவை மேம்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;வழக்கமான இயந்திர அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, இந்த இயற்கை சார்ந்த அமைப்புகள் மண், தாவரங்கள் மற்றும் இயற்கை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை பயன்படுத்தி கழிவுநீரைச் சுத்திகரிக்கின்றன. இதன் மூலம் நீர் சமநிலை மீட்டெடுக்கப்படுவதோடு. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தத் திட்டத்திற்கு மைக்ரோசாஃப்ட் (Microsoft) மற்றும் எஸ்.ஐ.வி இம்பாக்ட் (SIV Impact) ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. ப்ளூ-கிரீன் என்விரோ ஃபவுண்டேஷன் (BlueGreen Enviro Foundation). சென்னை ரெசிலியன்ஸ் சென்டர் (Chennal Reellence Centre CRC) மற்றும் கேர் எர்த் டிரஸ்ட் (Care Earth Trust - CET) ஆகிய அமைப்புகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பலகட்ட சுத்திகரிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக மேலும் பத்து அரசுப் பள்ளிகளிலும் இயற்கை சார்ந்த கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான மூலதனச் செலவு (CAPEX) முழுமையாக வழங்கப்படுகிறது. மேலும், இவ்வமைப்புகள் நீண்டகாலம் செயல்திறனுடன் இயங்குவதை உறுதிசெய்ய, பத்து ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவிற்கான (OPEX) ஆதரவும் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, விரிவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring &amp;amp; Evaluation - M&amp;amp;E) கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நீர் மீள்திறன், சுற்றுச்சூழல், சமூக மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள் அறிவியல் அடிப்படையில் தொடர்ந்து மதிப்பிடப்படும். இதன் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள், திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மற்றும் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt; நேரடி பங்களிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&quot;நீர் எழில் பள்ளி&quot; திட்டம், நீர் பாதுகாப்பு, காலநிலைத் தழுவல், நகர்ப்புற மீள்திறன், வெப்பத் தணிப்பு, இயற்கை சார்ந்த தீர்வுகள், நிலையான பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது. அதேவேளையில், பசுமை முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தும் ஒரு செயல்திறன் மிக்க மாதிரியாகவும் இது அமைகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அரசுப் பள்ளிகளை சுற்றுச்சூழல் புத்தாக்க மையங்களாக மாற்றும் முயற்சியில் &quot;நீர் எழில் பள்ளி&quot; திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் நீர் பாதுகாப்பை மேம்படுத்தி, காலநிலை மீள்திறனை உருவாக்கி, பல்லுயிர் வளத்தைப் பெருக்குவதோடு. மாணவர்களுக்கு நிலைத்தன்மை குறித்த செயல்வழிக் கற்றலையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்களுக்கு, குறைந்த செலவில் செயல்படுத்தக்கூடிய, அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, விரிவுபடுத்தக்கூடிய இயற்கை சார்ந்த தீர்வாக இந்த முன்னெடுப்பு விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றக்கூடிய முன்னோடி மாதிரியாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பசுமைப் பள்ளிகள் குறித்த தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை நடைமுறையில் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக &quot;நீர் எழில் பள்ளி&quot; திட்டம் அமைவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/what-does-ai-know-about-you-268535&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/67b16d48eea77bc7cd9061fc6b583aa31784716124285332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[’மாணவர்களின் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய்’ தரும் நிறுவனம் இதுதான்..!]]></title><link>https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604</link><comments>https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:43:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ வசந்த் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர்: சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;10 கோடி முதலீடு செய்ய ஒப்புதல்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி&amp;nbsp; மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்யவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும்&amp;nbsp; முதலீட்டு நிறுவனமான தின்குவேட், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது.&amp;nbsp; டீப் டெக், ஃபின்டெக், ஹெல்த் டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும்.&amp;nbsp; இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;தின்குவேட் நிறுவனம் செய்து வரும் உதவி&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை&amp;nbsp; பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;பங்கேற்றவர்கள் யார், யார் ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிகழ்வில் விஐடி துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழகத்தின்&amp;nbsp; அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/469c502b12116c4dc8e1b82a697fc72f1784715167674108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/education/minister-rajmohan-neer-ezhil-palli-water-conservation-green-wealth-sustainable-future-268587</link><comments>https://tamil.abplive.com/education/minister-rajmohan-neer-ezhil-palli-water-conservation-green-wealth-sustainable-future-268587#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:04:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/minister-rajmohan-neer-ezhil-palli-water-conservation-green-wealth-sustainable-future-268587</guid><description><![CDATA[&lt;p&gt;நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய இளைஞர்களை தமிழகக் காவல்துறை கைது செய்தது ஏன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&amp;rsquo;நீர் எழில் பள்ளி&amp;rsquo; திட்ட அடிக்கல் நாட்டல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி,&amp;nbsp; செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று நீர் எழில் பள்ளி திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக &quot;நீர் எழில் பள்ளி&quot; (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தத் திட்டம் சென்னை, எழும்பூர், கெங்கு ரெட்டி சாலையில் அமைந்துள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) தொடங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;rsquo;&amp;rsquo;நீட் தொடர்பான அறவழி, அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவரின் கைதை கடுமையாகக் கண்டிக்கிறோம். இங்கு தமிழ்நாட்டில் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு இல்லாமல், போக்குவரத்து இடையூறு இல்லாமல், முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று போராடினால் எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாமல், தூண்டுதலால் நடந்த போராட்டங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. மருத்துவ அவசரம், போக்குவரத்து உள்ளிட்ட பொது மக்களின் தேவைகளை போராடும் எல்லோரும் கருத்தில்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HH8iveGCtPU?si=_VRM_txtZMvvEYZp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நீட் சீரமைப்பு கிடையாது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;டெல்லியில் போராட்டக் களத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டார். அவர் சாலையில் போராடவில்லை. அதற்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது. அன்றும் இன்றும் நீட் ஒழிப்புதான் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வின் கொள்கை. நீட் சீரமைப்பு எங்களின் கொள்கை கிடையாது.&lt;/p&gt;
&lt;p&gt;வெறும் போராட்டம் அல்ல, சுமூகத் தீர்வை நோக்கிய அரசியலைத்தான் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் நிரந்தரத் தீர்வு&amp;rsquo;&amp;rsquo; என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/what-does-ai-know-about-you-268535&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/b18e4df623b45c305a3ed63f32ac3c411784709111937332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/salem/yercaud-village-student-nivetha-clears-neet-first-time-seeks-govt-help-for-medical-studies-268477</link><comments>https://tamil.abplive.com/news/salem/yercaud-village-student-nivetha-clears-neet-first-time-seeks-govt-help-for-medical-studies-268477#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 18:02:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ சேலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/salem/yercaud-village-student-nivetha-clears-neet-first-time-seeks-govt-help-for-medical-studies-268477</guid><description><![CDATA[&lt;p&gt;ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இருந்து முதல்முறையாக நீட் தேர்வில் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சேலம் மாவட்டம் ஏற்காடு மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா. சேலம் மாவட்ட சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் 65 மலை கிராமங்கள் உள்ளன. ஏற்காடு பிரதான பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் பள்ளத்தாக்கில் உள்ளது எழில் கொஞ்சும் குண்டூர் கிராமம். சுற்றுலாப் பயணிகளின் கண்ணைக் கவரும் பசுமைப் போர்வை போர்த்தி நிற்கும் இந்த மலை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/zNrlJNjsdbY?si=3AHBGNcWjxVUgIIX&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பெரிய தொழில்வாய்ப்பு இல்லாத நிலையில், காபி தோட்டத் தொழிலுக்கும் கூலி வேலைக்கும் செல்வதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கூடம் உள்ளது. &amp;nbsp;6-ம் வகுப்பு முதல் கல்வி கற்க 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏற்காட்டிற்கு நடந்து சென்றுதான் படிக்க வேண்டும் என்பதால் பெண் குழந்தைகளின் கல்வி பயணம் சிறுவயதிலேயே முடிவுக்கு வந்து விடுகிறது. இதுபோன்ற பல தடைகளைத் தாண்டி ஏழுமலை-மணிமேகலை தம்பதியின் மகள் நிவேதா நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வு நடைமுறை தொடங்கப்பட்ட பின்னர் ஏற்காடு மலைவாழ் கிராமங்களில் இதுவரை யாரும் தேர்ச்சி பெறாத நிலையில், 245 மதிப்பெண்கள் பெற்றும் மாணவி நிவேதா முதல்முறையாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கூறுகையில், &amp;lsquo;மாணவி நிவேதா 10-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளியிலும் பயின்றுள்ளார். இதனால் அரசுப்பள்ளி மாணவியருக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு பிரிவில் மாணவி நிவேதா இடம் பெறவில்லை. அரசு கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் கூலித் தொழிலாளர்களான தங்களால் மருத்துவக் கல்வி பயில வைக்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இல்லாததால் அரசு உதவி செய்ய வேண்டும்&amp;rsquo; என கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/fc9c5afc801ae760e1f295b9a1dce7951784636802797113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மாணவி நிவேதா கூறுகையில், &amp;ldquo;மழையின்போது ஒழுகாத வீடில்லை. அகலமான சாலையில் வீட்டிற்கு வாகனத்தில் போய் இறங்கக் கூடிய வாய்ப்பில்லை. நினைத்ததை நொடிப்பொழுதில் பதிவிறக்கம் செய்யக் கூடிய இணையதள வசதியில்லை. நிறைய இல்லைதான். ஆனால் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவராக வேண்டும் என்ற இலக்கு&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-scooty-ntorq-125-how-many-kilometers-per-liter-266815&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/176b0feb0e9f8672f4cf5aff436014e51784636630850113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/education/tamil-nadu-school-education-reforms-textbooks-to-picture-books-school-bag-weight-reduced-minister-rajmohan-268442</link><comments>https://tamil.abplive.com/education/tamil-nadu-school-education-reforms-textbooks-to-picture-books-school-bag-weight-reduced-minister-rajmohan-268442#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 13:48:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tamil-nadu-school-education-reforms-textbooks-to-picture-books-school-bag-weight-reduced-minister-rajmohan-268442</guid><description><![CDATA[&lt;p&gt;பாடப் புத்தகப் பைகளின் சுமை குறைக்கப்படும் என்றும் பாடப் புத்தகங்கள் அனைத்தும் இனி வண்ணப் படங்கள் நிறைந்த படப் புத்தமாக மாற்றப்படும் எனவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக பள்ளிக்கல்விப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும், காலத்துக்கு ஏற்ற புதிய பாடங்களைச் சேர்ப்பது குறித்தும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று (21.07.2026) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவைச் சேர்ந்த முக்கிய கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புதிய பாடத்திட்டம் பெற்றோரை மதிக்கும் கல்வித் திட்டமாக இருக்கப் போகிறது. குழந்தைகள் நன்றாக வளர வேண்டும் என்று பெற்றோர்கள் சில நேரங்களில் கடுமை காட்டலாம். அப்போது குழந்தைகள் பெற்றோரைப் புரிந்துகொண்டு, பணிவாக நடக்க வேண்டும். அதை கற்பிக்கப் போகிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குறையும் புத்தகப் பை சுமை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;முக்கியமானதாக பாடப் புத்தகப் பைகளின் சுமையைக் குறைக்கப் போகிறோம். அது எவ்வளவு குறைகிறதோ, அந்த அளவு குழந்தைகளின் மனச்சுமை குறையும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HH8iveGCtPU?si=N4qZjsOynQsIh9Th&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாடப் புத்தகம் வெறுமனே பாடங்களுக்கு ஏற்ற புத்தகமாக இருக்காது. அதிகமாக வண்ணப் படங்கள் இருக்கும் வகையில் படப் புத்தகங்களாக மாற்றப்படும். வாயொலியாக வந்த கல்வி, காணொலியாகவும் கேட்பொலியாகவும் மாறும். இதற்காக பாடப்புத்தகங்களில் இருக்கும் க்யூ ஆர் கோடுகள் அதிகரிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஏஐ தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும். ஏற்கெனவே நிறைய பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு கற்பிக்கப்படுகிறது. முக்கியமாக அதை எப்படி தற்போது பயன்படுத்த வேண்டும் என்ற ப்ராம்ப்ட்டை கற்றுத் தரப்போகிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கதைவழிக் கணிதம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கதைகளின் வடிவில் கணிதம் கற்றுத் தரப்படும். இதன்மூலம் கணக்கு மாணவர்களுக்கு எளிதாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/how-many-kilometers-will-a-tubeless-tire-last-after-a-puncture-268399&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/8d8013ba7c847147292470bed1a03de81784621479054332_original.png" width="220"/></item><item><title><![CDATA[நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/india/preventing-paper-leaks-a-national-responsibility-pm-modi-on-neet-row-268416</link><comments>https://tamil.abplive.com/news/india/preventing-paper-leaks-a-national-responsibility-pm-modi-on-neet-row-268416#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 12:04:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/preventing-paper-leaks-a-national-responsibility-pm-modi-on-neet-row-268416</guid><description><![CDATA[&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகப் பிழைகளைச் சரிசெய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க உறுதியான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;போராட்டக் குழுவுடன் மத்திய அரசு பேச்சு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்படி, போராட்டக் குழு பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இதற்கிடையே இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு (மங்கள் மிலன்) பின், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;குற்றவாளிகள் உடனடியாகக் கைது&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&quot;நீட் வினாத்தாள் கசிவு குறித்து தகவல் கிடைத்தவுடனேயே மத்திய அரசு விழிப்படைந்து உடனடியாகச் செயல்பட்டது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய 13 குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்படக் கூடிய மாணவர்களுக்கான மறுதேர்வும் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது என்பதை கூட்டத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HH8iveGCtPU?si=N4qZjsOynQsIh9Th&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;வினாத்தாள் கசிவு இல்லாத, மிகவும் வலுவான மற்றும் பாதுகாப்பான தேர்வு நடைமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஈவிரக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும்&lt;/strong&gt; &lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இனிவரும் காலங்களில் எவ்வித வினாத்தாள் கசிவும் ஏற்படாது என நாட்டின் இளைஞர்களுக்கு முழு உத்தரவாதம் அளித்துள்ள பிரதமர், இந்திய இளைஞர்கள் உலக அரங்கில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நீட் வினாத்தாள் லீக்கை தடுத்து, நம்பகத்தன்மையை உருவாக்க ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும் என்பதே பிரதமரின் நிலைப்பாடாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவளிக்கும். இளைஞர்கள் மற்றும் தேசம் சார்ந்த இதுபோன்ற முக்கியப் பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் அரசியலைக் கடந்து அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்&quot; என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;வினாத்தாள் கசிவைத் தடுக்க, மத்திய அரசுதானே பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் பொறுப்பாக்குவது ஏன் என்று விவாதங்கள் எழுந்து வருகின்றன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/how-many-kilometers-will-a-tubeless-tire-last-after-a-puncture-268399&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/c9c358e70c7e662b5d2a57bedcdeef191784615488307332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கலைஞர் பற்றிய பாடங்கள் நீக்க வாய்ப்பு? தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு ஆலோசனை]]></title><link>https://tamil.abplive.com/education/school-education-curriculum-committee-new-subjects-robotics-artificial-intelligence-268406</link><comments>https://tamil.abplive.com/education/school-education-curriculum-committee-new-subjects-robotics-artificial-intelligence-268406#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 11:23:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/school-education-curriculum-committee-new-subjects-robotics-artificial-intelligence-268406</guid><description><![CDATA[&lt;p&gt;பள்ளிக்கல்வி பாடத்திட்டக் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம், அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக பள்ளிக்கல்விப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும், காலத்துக்கு ஏற்ற புதிய பாடங்களைச் சேர்ப்பது குறித்தும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று (21.07.2026) முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவைச் சேர்ந்த முக்கிய கல்வியாளர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, இஸ்ரோ தலைவர் நாராயணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள முக்கிய விவரங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போதைய காலச் சூழலுக்குப் பொருந்தாத சில பழைய பாடப்பகுதிகளை முழுமையாக நீக்கிவிட்டு, மாணவர்களின் எதிர்காலத்துக்குப் பயனுள்ள வகையிலான புதிய பாடங்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. அதேபோல 6 முதல் 10ஆம் வகுப்பு வரையான பாடத்திட்ட வரைவு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;நவீன தொழில்நுட்பம், அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியதாக புதிய பாடத்திட்டத்தின் வடிவமைப்பு அமைய உள்ளது. குறிப்பாக ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகியவை குறித்த அறிமுகம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நோக்கில், மாநிலப் பாடத்திட்டத்தை விரிவுபடுத்த வல்லுநர் குழு ஆலோசிக்க உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HH8iveGCtPU?si=KUV8NDdLEnbTPY3a&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாடங்களில் செய்யப்பட உள்ள திருத்தங்கள் மட்டுமின்றி, புதிய வடிவமைப்புடன் அச்சிடப்பட உள்ள பாடப்புத்தகங்களின் அச்சுச் செலவினங்கள் மற்றும் அவற்றின் விலை நிர்ணயம் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அரசியல் பாடங்கள் நீக்கம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பாடப்புத்தகங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் சில அரசியல் தலைவர்கள் குறித்த பாடப்பகுதிகள் இந்த புதிய திருத்தத்தில் நீக்கப்படுமா என்ற கேள்வி கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எப்போது சேர்க்கப்பட்டது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு புத்தகத்தில், செம்மொழி நிலை, தமிழ்மொழிக்குக் கிடைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த பாடம் சேர்க்கப்பட்டது. 2023-24ஆம் கல்வியாண்டில் மாணவர்களுக்கு இந்த பாடம் சேர்க்கப்பட்டு, வழங்கப்பட்டது.&amp;nbsp;தொடர்ந்து 10ஆம் வகுப்புப் புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. இதில், ''பன்முகக் கலைஞர்'' என்ற தலைப்பில் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து 8ஆம் வகுப்புப் பாடப்புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் இடம்பெற்றது. குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில், குடிமையியல் பாடத்தில் பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/how-many-kilometers-will-a-tubeless-tire-last-after-a-puncture-268399&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/3c92b6295c6e1eb4e0a03bbb57d68a161784613025243332_original.png" width="220"/></item></channel></rss>