<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!</title><atom:link href="https://tamil.abplive.com/education/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 24 Jul 2026 08:45:01 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/education/pm-modi-assures-tougher-anti-paper-leak-measures-in-friday-s-cabinet-meeting-amid-cjp-protest-delhi-police-268783</link><comments>https://tamil.abplive.com/education/pm-modi-assures-tougher-anti-paper-leak-measures-in-friday-s-cabinet-meeting-amid-cjp-protest-delhi-police-268783#respond</comments><pubDate>Fri, 24 Jul 2026 06:29:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/pm-modi-assures-tougher-anti-paper-leak-measures-in-friday-s-cabinet-meeting-amid-cjp-protest-delhi-police-268783</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;PM Modi CJP Protest:&lt;/strong&gt; இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் மூலம் வினாத்தாள் கசிவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிராக டெல்லியில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா, நீர் தேர்வு ரத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இந்நிலையில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் முடிவில் நள்ளிரவில் அவர் வெளியிட்ட வீடியோவில், &amp;rdquo;வினாத்தாள் கசிவு தொடர்பாக இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும், வினாத்தாள் கசிவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்&amp;rdquo; என உறுதியளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/butter-vs-ghee-which-is-best-more-benefits-details-in-pics-268703&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மாணவர்களுக்கு பிரதமர் மோடி உறுதி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சுமார் 3 நிமிடங்களுக்கான அந்த வீடியோவில், &amp;ldquo;தேர்வு வினாத்தாள் கசிவுகளால் ஏற்படும் வேதனையை அரசாங்கம் புரிந்துகொள்கிறது. இது லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு ஆழ்ந்த கவலையளிக்கும் விஷயம். கடந்த இரண்டரை மாதங்களில், பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரு கல்வியாண்டை இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமையாகும். சுமார் 22 லட்சம் தேர்வர்களுக்கு மிகக் குறுகிய காலத்தில் தேர்வுகளை விரைவாக நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 19 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளோடு அரசு நின்றுவிடத் தயாராக இல்லை.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/lrCOkpyHvBw?si=12NBf3H2QoDfCFDf&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அமைச்சரவை கூட்டம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வினாத்தாள் கசிவு வழக்குகளில் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கு வழிவகுக்கும் ஒரு சட்ட வரைவைத் தயாரிக்குமாறு துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த வரைவை நிறைவு செய்வதற்காக அதிகாரிகள் இரவு முழுவதும் பணியாற்றுகின்றனர். அது விவாதத்திற்காக வெள்ளிக்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் . அமைச்சரவை சகாக்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த முன்மொழிவு இறுதி செய்யப்படும். திங்கட்கிழமை நாடாளுமன்றம் தனது இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைப்பதால், அரசாங்கம் இந்தச் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தி நிறைவேற்ற முயலும். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளை முன்மொழியும் ஒரு வரைவு மசோதா குறித்து வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்&amp;rdquo; என பிரதமர் மோடி தனது வீடியோவில் உறுதியளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;More strict actions against paper leaks to come in tomorrow&amp;rsquo;s Cabinet! &lt;a href=&quot;https://t.co/NRysBukk5U&quot;&gt;pic.twitter.com/NRysBukk5U&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Narendra Modi (@narendramodi) &lt;a href=&quot;https://x.com/narendramodi/status/2080357811662492096?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 23, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மத்திய அமைச்சர் ராஜினாமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என போராட்டக்கார்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதுதொடர்பாக அரசு இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/56a351f95380b2ec8672cab1e15ed0041784854670721732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[200-க்கு 199.50 மதிப்பெண்! மீன்வளப் பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்திய 3 மாணவர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-tamilnadu-dr-j-jayalalithaa-fisheries-university-undergraduate-rank-list-tnn-268761</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-tamilnadu-dr-j-jayalalithaa-fisheries-university-undergraduate-rank-list-tnn-268761#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 19:38:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-tamilnadu-dr-j-jayalalithaa-fisheries-university-undergraduate-rank-list-tnn-268761</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம், ஜூலை 23: &lt;/strong&gt;தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் 2026&amp;ndash;27-ஆம் கல்விய ஆண்டிற்கான பல்வேறு இளநிலை மீன்வளப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வுத் தரவரிசைப் பட்டியலை (Rank List) பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நா. ஃபெலிக்ஸ் &amp;nbsp;23.07.2026 இன்று வெளியிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்லூரிகள் மற்றும் இடங்கள் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவிக்கையில், பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்புத் தனியார் கல்லூரி என மொத்தம் 11 கல்லூரிகளில் உள்ள 447 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாடப்பிரிவு வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மீன்வள அறிவியல் (B.F.Sc.):&lt;/strong&gt; 187 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மீன்வளப் பொறியியல் (B.Tech. Fisheries Engineering):&lt;/strong&gt; 50 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மீன்வள உயிர்த்தொழில்நுட்பம் (B.Tech. Fisheries Biotechnology):&lt;/strong&gt; 43 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உணவுத் தொழில்நுட்பம் (B.Tech. Food Technology):&lt;/strong&gt; 42 இடங்கள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&lt;strong&gt;இளநிலை வணிக நிர்வாகவியல் (B.B.A.):&lt;/strong&gt; 21 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இளநிலை தொழிற்கல்வி (B.Voc.):&lt;/strong&gt; 78 இடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் சிறப்பு முயற்சியாக, மீன்வள அறிவியல் படிப்பில் 24 இடங்களும், மீன்வளப் பொறியியல் படிப்பில் 2 இடங்களும் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பங்கள் மற்றும் மாணவிகளின் அதிகப்படியான ஆர்வம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 15.05.2026 முதல் 14.06.2026 வரை பெறப்பட்டன. பின்னர், விண்ணப்பதாரர்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 23.06.2026 வரை நீட்டிக்கப்பட்டது. மேலும், விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்தம் செய்யும் வகையில் 4 நாட்கள் சிறப்பு திருத்தச் சாளரமும் (Correction Window) திறக்கப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு மொத்தம் 15,585 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இதில் ஆண்களை விட மாணவிகளே அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாணவிகள்: &amp;nbsp;&lt;/strong&gt;59% (9,265 விண்ணப்பங்கள்)&lt;br /&gt;&lt;strong&gt;மாணவர்கள்:&lt;/strong&gt; 41% (6,320 விண்ணப்பங்கள்)&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாடப்பிரிவு வாரியாக பெறப்பட்ட விண்ணப்பங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1.மீன்வள அறிவியல் (B.F.Sc.): 4,904 விண்ணப்பங்கள்&lt;br /&gt;2. இளநிலை தொழிற்கல்வி (B.Voc.): 3,822 விண்ணப்பங்கள்&lt;br /&gt;3. மீன்வள உயிர்த்தொழில்நுட்பம்: 1,890 விண்ணப்பங்கள்&lt;br /&gt;4.மீன்வளப் பொறியியல்: 1,813 விண்ணப்பங்கள்&lt;br /&gt;5. உணவுத் தொழில்நுட்பம்: 1,796 விண்ணப்பங்கள்&lt;br /&gt;6. இளநிலை வணிக நிர்வாகவியல் (B.B.A.): 1,370 விண்ணப்பங்கள்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் சிறப்புப் பிரிவு இடஒதுக்கீடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் செல்வன். எஸ். அனிஷ்குமார், செல்வன். ஜி. சேதுராஜன் மற்றும் செல்வி. டி. பிரியவதனா ஆகிய மூவரும் 200-க்கு 199.50 தகுதி மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, செல்வி. வி. ஜெ. அக்ஷயா 198.89 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிறப்புப் பிரிவு விண்ணப்ப விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* 7.5% அரசுப் பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீடு: 1,250 விண்ணப்பங்கள்&lt;br /&gt;* மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான 5% மற்றும் 15% இடஒதுக்கீடு: 366 விண்ணப்பங்கள்&lt;br /&gt;* விளையாட்டு வீரர்கள் பிரிவு: 116 விண்ணப்பங்கள்&lt;br /&gt;* தொழிற்கல்விப் பிரிவு மாணவர்கள் (5%): 104 விண்ணப்பங்கள்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள்: 30 விண்ணப்பங்கள்&lt;br /&gt;&amp;nbsp;* மாற்றுத்திறனாளிகள் (5%): 23 விண்ணப்பங்கள்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பிழைத் திருத்தம் மற்றும் கலந்தாய்வு அட்டவணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தரவரிசைப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மொத்த மதிப்பெண் அல்லது சதவீத மதிப்பெண்களில் ஏதேனும் பிழைகள் அல்லது கோரிக்கைகள் இருப்பின், விண்ணப்பதாரர்கள் வருகின்ற 27.07.2026 அன்று மாலை 5.00 மணிக்குள், &lt;a href=&quot;mailto:admissionug@tnfu.ac.in&quot;&gt;admissionug@tnfu.ac.in&lt;/a&gt; என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்குமாறு துணைவேந்தர் கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேரடி கலந்தாய்வு குறித்து அவர் கூறுகையில், முதற்கட்டமாக சிறப்புப் பிரிவு மற்றும் கூடுதல் இடஒதுக்கீடுகளுக்கான நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு 2026 ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் நேரில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/d33e73eaf0b9211beb48e81b321ec6cb1784815648119186_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/education/kamarajar-breakfast-st-scheme-change-ttv-dhinakaran-268754</link><comments>https://tamil.abplive.com/education/kamarajar-breakfast-st-scheme-change-ttv-dhinakaran-268754#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 17:55:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/kamarajar-breakfast-st-scheme-change-ttv-dhinakaran-268754</guid><description><![CDATA[&lt;p&gt;முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; தொடங்கி வைத்த காலை உணவுத் திட்டத்தின் பெயரை, தவெக அரசு பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் என்று மாற்றி உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அத்துடன் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த காலை உணவுத் திட்டம், நடுநிலைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதாவது 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியானது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், காலை உணவுத் திட்டத்துக்கு பழங்குடி திட்ட நிதி மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;6 கோடி ரூபாய் நிதி பயன்பாடு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், &amp;lsquo;&amp;rsquo;தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்காக, பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் 6 கோடி ரூபாயைப் பயன்படுத்துவதாக அரசு வெளியிட்ட அரசாணை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நிதியை மடைமாற்றம் செய்வதா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இன்றளவும் தரமான கல்வி, குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றம் செய்வது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும் செயலாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;காலை உணவுத் திட்டம் மாணவர்களின் நலனை மேம்படுத்தும் மிக முக்கியமான திட்டம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறோம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றுவது சமூக அநீதியின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எனவே, பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களின் வறுமையை ஒழிக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கான நிதியை தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலமாகவே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசை வலியுறுத்துகிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/when-can-children-be-given-their-first-pocket-money-268700&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/23/76eb1b771ee51897e7916f90530727b91784809538988332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பிளஸ்-2 & நீட் பாஸ் பண்ணியிருக்கீங்களா? - சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ரெடியாகுங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-students-government-medical-colleges-ayush-courses-applications-centac-268738</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-students-government-medical-colleges-ayush-courses-applications-centac-268738#respond</comments><pubDate>Thu, 23 Jul 2026 17:08:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-students-government-medical-colleges-ayush-courses-applications-centac-268738</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை ஆயுஷ் (BSMS, BUMS, BHMS) மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;பிற மாநில மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை ஆயுஷ் (BSMS, BUMS, BHMS) மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பச் பதிவு தொடங்கியுள்ளது. இதுகுறித்த விவரங்களை புதுச்சேரி செண்டாக் (CENTAC) ஒருங்கிணைப்பாளர் முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து புதுச்சேரி &amp;lsquo;செண்டாக்&amp;rsquo; (CENTAC) ஒருங்கிணைப்பாளர் முத்து மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-&lt;/p&gt;
&lt;h2&gt;5 மருத்துவ இடங்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;2026&amp;ndash;2027-ஆம் கல்வியாண்டில், புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிற மாநிலங்களில் வழங்கப்படும் இளநிலை பி.எஸ்.எம்.எஸ். (சித்தா), பி.யு.எம்.எஸ். (யுனானி) மற்றும் பி.எச்.எம்.எஸ். (ஹோமியோபதி) மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'நீட்' (NEET) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி, பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்.எம்.எஸ். - 2 இடங்கள், மதுரை திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பி.எச்.எம்.எஸ். - 1 இடம், பெங்களூரு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் பி.எச்.எம்.எஸ். - 1 இடம், சென்னை அரசு யுனானி கல்லூரியில் பி.யு.எம்.எஸ். - 1 இடம் என மொத்தம் 5 இடங்கள் உள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;கடைசி தேதி&lt;/h2&gt;
&lt;p&gt;இதற்கான இணையவழி விண்ணப்பப் படிவம் மற்றும் விவரக்குறிப்பை www.tnayushselection.org என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு செண்டாக் இணையதமான www.centacpuducherry.in வாயிலாக அறிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;பிளஸ்-2 மதிப்பெண் மூலம் சேர்க்கை&lt;/h2&gt;
&lt;p&gt;இதேபோல் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய 2 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2 இடங்களுக்கு www.tnayushselection.org என்ற இணையதளம் மூலம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/20/aaf781ea70fe84b0b87bb349e49ceff11718875350296140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:27:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;வரவிருக்கும் தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), கடந்த 16 ஆண்டுகளாகக் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாகத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;16 ஆண்டு காலப் பணி அனுபவமும், தற்போதைய நிலையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் கடந்த 2011-ஆம் கல்வியாண்டில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; 2020-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூபாய் 5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு, ஊதியம் 10,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; அதனைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் ரூபாய் 5,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சம்பளமாக ரூபாய் 10,000 மற்றும் உதவித்தொகையாக ரூபாய் 5,000 என மொத்தம் ரூபாய் 15,000 வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோரிக்கைகளும் ஏமாற்றங்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அரசுகளுமே பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பியபோதும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்காலக்கட்டத்தில் மரணம் மற்றும் பணி ஓய்வு காரணமாகச் சுமார் 5,000 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன. தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்குறுதியை நிறைவேற்றத் தவெக அரசுக்கு வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது முதலாவது பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க உள்ளது. &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வின் தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்காலிகமாகப் பணிபுரிந்த காலத்திற்கு நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான &quot;சம வேலைக்கு சம ஊதியம்&quot; பெற்றுத் தரப்படும். என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. &quot;இந்த பணி நிரந்தர வாக்குறுதிக்கான கோப்பில் முதலமைச்சர் விஜய் கையொப்பமிட்டால், கடந்த 16 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 11,773 ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய ஒளிமயமான வாழ்வு கிடைக்கும்.&quot; என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் ஆசிரியர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (PF), உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணம், பணிநிறைவு பணிக்கொடை (Gratuity) போன்ற எந்தவொரு சமூகப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல், குறைந்த தொகுப்பூதியத்தில் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர்களின் நலன் கருதி 16 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றி வரும் இவர்களை முதலில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் பின்னரே ஏற்படுகின்ற காலிப்பணியிடங்களை உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட பாடங்களில் நிரப்ப வேண்டும். எனவே, தற்போது 1,328 உடற்கல்வி ஆசிரியர்களைக் காலிப் பணியிடங்களில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கைவிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது 11,773 ஆசிரியர்களுக்கான ரூ 15,000 தொகுப்பூதியத்திற்கு அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ 200 கோடி செலவாகிறது. இவர்களைக் காலமுறை ஊதியத்தில் (அடிப்படைச் சம்பளம் ரூ 20,600) கொண்டு வர ஆண்டுக்கு கூடுதலாக ரூபாய் 200 கோடி மட்டுமே தேவைப்படும். எனவே, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், அமைச்சரவையின் கொள்கை முடிவாக இதற்கான அறிவிப்பைச் சேர்க்க வேண்டும், காலமுறை சம்பளம் வழங்கத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி, அவர்களைச் சிறப்பாசிரியர்களாக நியமித்து முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/97310f713b35e8d2fae06914e08b63841784739388779186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/education/tnpsc-vacant-posts-tamil-nadu-government-chief-minister-office-budget-session-announcement-268628</link><comments>https://tamil.abplive.com/education/tnpsc-vacant-posts-tamil-nadu-government-chief-minister-office-budget-session-announcement-268628#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 17:59:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tnpsc-vacant-posts-tamil-nadu-government-chief-minister-office-budget-session-announcement-268628</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;டிஎன்பிஎஸ்சி&lt;/strong&gt; &lt;strong&gt;மூலம்&lt;/strong&gt; &lt;strong&gt;காலிப் பணியிடங்களை&lt;/strong&gt; &lt;strong&gt;நிரப்ப&lt;/strong&gt; &lt;strong&gt;முதல்வர்&lt;/strong&gt; &lt;strong&gt;அலுவலகத்தில்&lt;/strong&gt; &lt;strong&gt;தீவிர&lt;/strong&gt; &lt;strong&gt;ஆலோசனை&lt;/strong&gt; &lt;strong&gt;செய்யப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து&lt;/strong&gt; &lt;strong&gt;பட்ஜெட்&lt;/strong&gt; &lt;strong&gt;தொடரில்&lt;/strong&gt; &lt;strong&gt;முக்கிய&lt;/strong&gt; &lt;strong&gt;அறிவிப்பு&lt;/strong&gt; &lt;strong&gt;வெளியாக&lt;/strong&gt; &lt;strong&gt;உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் காலி இடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்பதும் ஆனால் கடைசியில் சொற்ப இடங்களே நிரப்பப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு முதல்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இதற்கிடையே காலி இடங்களை விரைந்து நிரப்புவது தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை &lt;a title=&quot;டிஎன்பிஎஸ்சி&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tnpsc&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;டிஎன்பிஎஸ்சி&lt;/a&gt; நடத்தினாலும், எந்தெந்த துறைகளில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்ற தரவுகளை அந்தந்த அரசுத் துறைகள்தான் தேர்வாணையத்திடம் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளைத் துரிதப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு தமிழ்நாடு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் அலுவலகம் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளதால், அரசு வேலைக்காகக் காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கிடையே தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அப்போது, அரசுப் பணிகளுக்கான கூடுதல் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/what-happens-if-you-sleep-without-removing-your-makeup-268536&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/17e5661fd565d0b6a9bb360a4c6505761784723340589332_original.png" width="220"/></item><item><title><![CDATA[Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?]]></title><link>https://tamil.abplive.com/education/tamilnadu-chief-minister-breakfast-scheme-name-changed-to-kamarajar-breakfast-scheme-tvk-govt-268624</link><comments>https://tamil.abplive.com/education/tamilnadu-chief-minister-breakfast-scheme-name-changed-to-kamarajar-breakfast-scheme-tvk-govt-268624#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:54:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tamilnadu-chief-minister-breakfast-scheme-name-changed-to-kamarajar-breakfast-scheme-tvk-govt-268624</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கூடவே, தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.&amp;nbsp;ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நிதி அனுமதி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவ/ மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/ மாணவியருக்கு, ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில், ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00,000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HH8iveGCtPU?si=_VRM_txtZMvvEYZp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13,57,25,000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் (ரூபாய் ரூ.217,63,09,395/க்கான இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரசுப் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராசர் என்பதால் அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/what-does-ai-know-about-you-268535&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/318a1e1626294753dcc341830de44bed1784719390541332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!]]></title><link>https://tamil.abplive.com/education/neer-ezhil-palli-tamil-nadu-government-schools-wastewater-treatment-nature-based-solutions-268609</link><comments>https://tamil.abplive.com/education/neer-ezhil-palli-tamil-nadu-government-schools-wastewater-treatment-nature-based-solutions-268609#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 16:00:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/neer-ezhil-palli-tamil-nadu-government-schools-wastewater-treatment-nature-based-solutions-268609</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை, எழும்பூர், மாகாண மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக &quot;நீர் எழில் பள்ளி&quot; (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன இது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அரசுப் பள்ளிகளை நீர் மேலாண்மை, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தழுவும் திறன் (Climate Resilience) மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் முன்னோடி வளாகங்களாக மாற்றும் நோக்கில், &quot;நீர் எழில் பள்ளி&quot; (Neer Ezhil Pall) என்ற புதிய முன்னெடுப்பு தொடங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை தி.நகரில் உள்ள லிட்டில் ஃபிளவர் கான்வென்ட் பள்ளியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட 'நீர் சமநிலை' (Water Balance) திட்டத்தின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலிலும், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் (TNGCC) ஆதரவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் எளிதில் பின்பற்றக்கூடிய, விரிவுபடுத்தக்கூடிய ஒரு மாதிரியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கழிவுநீர் சுத்திகரிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்தின் கீழ், இயற்கை சார்ந்த தீர்வுகள் (Nature-based Solutions NbS) மூலம், பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியிலும் நாளொன்றுக்கு சுமார் 25,000 லிட்டர் கழிவுநீர் பாதுகாப்பாகச் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும். இதன் மூலம் பசுமையான பள்ளி வளாகங்கள் உருவாக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டல், பல்லுயிர் பெருக்கம், நகர்ப்புற வெப்பத் தணிப்பு மற்றும் காலநிலை மீள்திறன் ஆகியவை மேம்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;வழக்கமான இயந்திர அடிப்படையிலான கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளிலிருந்து மாறுபட்டு, இந்த இயற்கை சார்ந்த அமைப்புகள் மண், தாவரங்கள் மற்றும் இயற்கை நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை பயன்படுத்தி கழிவுநீரைச் சுத்திகரிக்கின்றன. இதன் மூலம் நீர் சமநிலை மீட்டெடுக்கப்படுவதோடு. சுற்றுச்சூழல் மற்றும் சமூக நன்மைகளும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தத் திட்டத்திற்கு மைக்ரோசாஃப்ட் (Microsoft) மற்றும் எஸ்.ஐ.வி இம்பாக்ட் (SIV Impact) ஆகியவற்றின் கூட்டாண்மை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. ப்ளூ-கிரீன் என்விரோ ஃபவுண்டேஷன் (BlueGreen Enviro Foundation). சென்னை ரெசிலியன்ஸ் சென்டர் (Chennal Reellence Centre CRC) மற்றும் கேர் எர்த் டிரஸ்ட் (Care Earth Trust - CET) ஆகிய அமைப்புகள் இணைந்து திட்டத்தை செயல்படுத்துகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பலகட்ட சுத்திகரிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;முதல் கட்டமாக ஐந்து அரசுப் பள்ளிகளிலும், இரண்டாம் கட்டமாக மேலும் பத்து அரசுப் பள்ளிகளிலும் இயற்கை சார்ந்த கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கான மூலதனச் செலவு (CAPEX) முழுமையாக வழங்கப்படுகிறது. மேலும், இவ்வமைப்புகள் நீண்டகாலம் செயல்திறனுடன் இயங்குவதை உறுதிசெய்ய, பத்து ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்புச் செலவிற்கான (OPEX) ஆதரவும் வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, விரிவான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு (Monitoring &amp;amp; Evaluation - M&amp;amp;E) கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் நீர் மீள்திறன், சுற்றுச்சூழல், சமூக மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள் அறிவியல் அடிப்படையில் தொடர்ந்து மதிப்பிடப்படும். இதன் மூலம் கிடைக்கும் ஆதாரங்கள், திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் மற்றும் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt; நேரடி பங்களிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&quot;நீர் எழில் பள்ளி&quot; திட்டம், நீர் பாதுகாப்பு, காலநிலைத் தழுவல், நகர்ப்புற மீள்திறன், வெப்பத் தணிப்பு, இயற்கை சார்ந்த தீர்வுகள், நிலையான பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய துறைகளில் தமிழ்நாடு அரசின் முன்னுரிமைகளுக்கு நேரடி பங்களிப்பை வழங்குகிறது. அதேவேளையில், பசுமை முன்னெடுப்பை நடைமுறைப்படுத்தும் ஒரு செயல்திறன் மிக்க மாதிரியாகவும் இது அமைகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அரசுப் பள்ளிகளை சுற்றுச்சூழல் புத்தாக்க மையங்களாக மாற்றும் முயற்சியில் &quot;நீர் எழில் பள்ளி&quot; திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் நீர் பாதுகாப்பை மேம்படுத்தி, காலநிலை மீள்திறனை உருவாக்கி, பல்லுயிர் வளத்தைப் பெருக்குவதோடு. மாணவர்களுக்கு நிலைத்தன்மை குறித்த செயல்வழிக் கற்றலையும் இந்தத் திட்டம் வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நகரங்களுக்கு, குறைந்த செலவில் செயல்படுத்தக்கூடிய, அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய, விரிவுபடுத்தக்கூடிய இயற்கை சார்ந்த தீர்வாக இந்த முன்னெடுப்பு விளங்குகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றக்கூடிய முன்னோடி மாதிரியாக இது உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நிலையான நகர்ப்புற வளர்ச்சி மற்றும் பசுமைப் பள்ளிகள் குறித்த தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை நடைமுறையில் முன்னெடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக &quot;நீர் எழில் பள்ளி&quot; திட்டம் அமைவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/what-does-ai-know-about-you-268535&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/67b16d48eea77bc7cd9061fc6b583aa31784716124285332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[’மாணவர்களின் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய்’ தரும் நிறுவனம் இதுதான்..!]]></title><link>https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604</link><comments>https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:43:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ வசந்த் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர்: சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;10 கோடி முதலீடு செய்ய ஒப்புதல்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி&amp;nbsp; மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்யவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும்&amp;nbsp; முதலீட்டு நிறுவனமான தின்குவேட், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது.&amp;nbsp; டீப் டெக், ஃபின்டெக், ஹெல்த் டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும்.&amp;nbsp; இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;தின்குவேட் நிறுவனம் செய்து வரும் உதவி&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை&amp;nbsp; பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;பங்கேற்றவர்கள் யார், யார் ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிகழ்வில் விஐடி துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழகத்தின்&amp;nbsp; அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/469c502b12116c4dc8e1b82a697fc72f1784715167674108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/education/minister-rajmohan-neer-ezhil-palli-water-conservation-green-wealth-sustainable-future-268587</link><comments>https://tamil.abplive.com/education/minister-rajmohan-neer-ezhil-palli-water-conservation-green-wealth-sustainable-future-268587#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:04:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/minister-rajmohan-neer-ezhil-palli-water-conservation-green-wealth-sustainable-future-268587</guid><description><![CDATA[&lt;p&gt;நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய இளைஞர்களை தமிழகக் காவல்துறை கைது செய்தது ஏன் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&amp;rsquo;நீர் எழில் பள்ளி&amp;rsquo; திட்ட அடிக்கல் நாட்டல்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி,&amp;nbsp; செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று நீர் எழில் பள்ளி திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அரசுப் பள்ளிகளில் நீர் மேலாண்மைக்கான தனி செயல்திட்டம் தொடங்கும் விதமாக &quot;நீர் எழில் பள்ளி&quot; (நீர் பாதுகாப்பு, பசுமை வளம், நிலைத்த எதிர் காலம்) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தத் திட்டம் சென்னை, எழும்பூர், கெங்கு ரெட்டி சாலையில் அமைந்துள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (22.07.2026) தொடங்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;rsquo;&amp;rsquo;நீட் தொடர்பான அறவழி, அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவரின் கைதை கடுமையாகக் கண்டிக்கிறோம். இங்கு தமிழ்நாட்டில் மக்களுக்கும் மற்றவர்களுக்கும் தொந்தரவு இல்லாமல், போக்குவரத்து இடையூறு இல்லாமல், முறைப்படி காவல்துறை அனுமதி பெற்று போராடினால் எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வாறு இல்லாமல், தூண்டுதலால் நடந்த போராட்டங்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை. மருத்துவ அவசரம், போக்குவரத்து உள்ளிட்ட பொது மக்களின் தேவைகளை போராடும் எல்லோரும் கருத்தில்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/HH8iveGCtPU?si=_VRM_txtZMvvEYZp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நீட் சீரமைப்பு கிடையாது&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;டெல்லியில் போராட்டக் களத்தில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டார். அவர் சாலையில் போராடவில்லை. அதற்கும் நமக்கும் வித்தியாசம் உள்ளது. அன்றும் இன்றும் நீட் ஒழிப்புதான் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வின் கொள்கை. நீட் சீரமைப்பு எங்களின் கொள்கை கிடையாது.&lt;/p&gt;
&lt;p&gt;வெறும் போராட்டம் அல்ல, சுமூகத் தீர்வை நோக்கிய அரசியலைத்தான் நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதுதான் நிரந்தரத் தீர்வு&amp;rsquo;&amp;rsquo; என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/what-does-ai-know-about-you-268535&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/b18e4df623b45c305a3ed63f32ac3c411784709111937332_original.jpg" width="220"/></item></channel></rss>