<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>"இனிமேலும் தற்காலிகமா?" – முதல்வர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை நம்பிப் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!</title><atom:link href="https://tamil.abplive.com/education/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 01:52:12 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மதுரை இளைஞர்களே...  TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767</link><comments>https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 20:05:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/madurai-employment-career-guidance-free-coaching-tnpsc-ssc-cgl-rrb-tnn-265767</guid><description><![CDATA[&lt;p&gt;பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வேலைவாய்ப்பு துறையின் சார்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அரசுப்பணியாளர்&amp;nbsp; &amp;nbsp;தேர்வாணையம் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி TNPSC GR-I முதனிலை (Prelims)&amp;nbsp; தேர்விற்கான அறிவிப்பு&amp;nbsp; 23.06.2026 அன்றும் SSC CGL 2026 தேர்விற்கான அறிவிப்பு 21.05.2026 அன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து TNPSC GR-I&amp;nbsp; முதனிலைத் தேர்விற்கும் SSC CGL தேர்விற்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பமுள்ள போட்டித் தேர்வு ஆர்வலர்கள், ஆதார் அட்டை நகல்&amp;nbsp; மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், இரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படவுள்ள RRB Group &amp;ndash;D பணியிடங்களுக்கான தேர்விற்கு மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 04.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மதுரையில் காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வு ஆர்வலர்கள் இம்மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அனைத்து வகையானப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள், வேலைவாய்ப்பு துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான&amp;nbsp;&lt;a href=&quot;https://www.tamilnaducareerservices.in.gov.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=https://www.tamilnaducareerservices.in.gov.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1783002136346000&amp;amp;usg=AOvVaw3cwwUbU8uMuzmyxSkDjdZb&quot;&gt;https://www.&lt;wbr /&gt;tamilnaducareerservices.in.&lt;wbr /&gt;gov.in&lt;/a&gt; என்ற இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொண்டு, இத்தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை pdf &amp;ndash; வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம், மேலும், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பதிவு காணொளி பாடக்குறிப்புகள் &amp;ldquo;TN Career Services Employment&amp;rdquo; என்ற&amp;nbsp; You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் த.அருண்நேரு தெரிவித்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/948cfc25d7df75cf48cb03cd28aae4101782916470773184_original.png" width="220"/></item><item><title><![CDATA[அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!]]></title><link>https://tamil.abplive.com/education/magizh-mutram-student-parliament-leadership-house-captains-student-ministers-government-schools-265753</link><comments>https://tamil.abplive.com/education/magizh-mutram-student-parliament-leadership-house-captains-student-ministers-government-schools-265753#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 18:12:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/magizh-mutram-student-parliament-leadership-house-captains-student-ministers-government-schools-265753</guid><description><![CDATA[&lt;p&gt;மாணவர்களிடையே தலைமைத்துவம், குழுப்பணி, ஒழுக்கம், சமூகப் மனப்பான்மை, ஒற்றுமை, குழுச்செயல்பாடு மற்றும் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அரசு பள்ளிகளில் &quot;மகிழ் முற்றம்&quot; திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;2026- 27ஆம் கல்வியாண்டில், அனைத்து அரசு பள்ளிகளிலும் &quot;மகிழ் முற்றம்&quot; மாணவர் குழு செயல்பாடுகளை முறையாகவும், சிறப்பாகவும் செயல்படுத்திடும் நோக்கில், &quot;மகிழ் முற்றம்&quot; செயல்பாடுகளை மாணவர் பாராளுமன்ற செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த செயல்பாடானது மாணவர்களை பள்ளி நிகழ்வுகளில் ஆர்வமுடன் ஈடுபடுத்தி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கி, அவர்களை திறமையான தலைவர்களாகவும். பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்க அடித்தளமாக அமையும்.&lt;/p&gt;
&lt;p&gt;2026-2027 ஆம் ஆண்டிற்கான மகிழ் முற்றம் செயல்பாடுகளை பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;மாணவர் குழு அமைப்பின் வகுப்புத் தலைவர் : (House Class Leader):&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்பிற்கான பிரிவிலும், ஒவ்வொரு குழுவிற்கான வகுப்புத் தலைவர் (House Class Leader) நியமிக்கப்படுதல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;குழுவின் வகுப்புத் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி மாணவ/மாணவியர்களின் அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைதூக்கும் முறையிலோ தேர்ந்தெடுத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இரு பாலினர் பயிலும் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்தது மூன்று குழுக்களுக்கான வகுப்பு தலைவர்கள் மாணவிகளாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;ஒவ்வொரு மாதமும் என்ன செய்ய வேண்டும்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், ஒவ்வொரு மாதமும் ஐந்து குழுக்களுக்கான வகுப்புத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வேலைநாள் அன்று வகுப்புக்குழுத் தலைவர்கள் மாற்றி அமைக்கப்படுதல் வேண்டும். இதன்மூலம் வகுப்பறை அளவில் பெருமளவிலான மாணவர்கள் தலைமைத்துவ பண்பினை வளர்த்துக்கொள்ள நல்வாய்ப்பாக அமையும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மாணவர் குழுத் தலைவர்கள் (House Captains) மற்றும் 5 மாணவ அமைச்சர்கள் (Student Ministers) இதில் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றுவர்.&lt;/p&gt;
&lt;p&gt;மேல்நிலைப் பள்ளி எனில் தேர்வு செய்யப்பட வேண்டிய வகுப்பு &amp;ndash; 11ஆம் வகுப்பு ஆகும். உயர்நிலைப் பள்ளி எனில், 9ஆம் வகுப்பு மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;நடுநிலைப் பள்ளி எனில் 8ஆம் வகுப்பு மாணவரும் தொடக்கப் பள்ளி எனில் 5ஆம் வகுப்பு மாணவரும் தேர்வு செய்யப்படுவர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வகுப்பிலிருந்து ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் ஒரு மாணவர் குழுத் தலைவர் (House Captain) மற்றும் ஒரு மாணவ அமைச்சர் (Student Minister) நியமிக்கப்படுதல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மாணவர் குழுத் தலைவர் (House Captain)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒவ்வொரு குழுவிற்கும் முதலில் மாணவர் குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும். எனவே, ஒவ்வொரு குழுவிற்கும் தலைவராக இருக்க விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகளின் பெயர்களை துண்டுச் சீட்டுகளாக எழுதி அம்மாணவர்களின் முன்னிலையில் குலுக்கல் முறையிலோ அல்லது கைத்தூக்கும் முறையிலோ ஒரு மாணவர் குழுத் தலைவரை தேர்ந்தெடுத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மாணவர் அமைச்சர் (Student Minister)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;ஒவ்வொரு குழுவிற்கும் மாணவர் குழுத் தலைவர் (House Captain) தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர். இருபாலரும் பயிலும் பள்ளிகளில் குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாணவி எனில் அக்குழுவிற்கான மாணவ அமைச்சர் பொறுப்பிற்கு மாணவன் நியமிக்கப்படுதல் வேண்டும். அல்லது மாணவர் குழுத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் எனில், அக்குழுவிற்கான மாணவ அமைச்சர் பொறுப்பிற்கு மாணவி நியமிக்கப்படுதல் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/do-you-know-which-is-the-cheapest-suv-in-india-265698&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/6ddd23e7d0582d3bca3261a51deb86761782721854089487_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-schools-nep-2020-three-language-policy-cbse-exemptions-265738</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-schools-nep-2020-three-language-policy-cbse-exemptions-265738#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:42:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-schools-nep-2020-three-language-policy-cbse-exemptions-265738</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரைகளின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2026&amp;ndash;27 கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை நடைமுறைக்கு வர உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) பரிந்துரைகளின்படி மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டுள்ளது. இதன் மூலம், வரும் 2026&amp;ndash;27 கல்வியாண்டு முதல் புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாணவர்களுக்கு நிம்மதி தரும் முக்கிய சலுகைகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;புதிய கொள்கை அமலாக்கப்பட்டாலும், தற்போது படித்து வரும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சிபிஎஸ்இ சில முக்கிய சலுகைகளையும், தளர்வுகளையும் அறிவித்துள்ளது:&lt;/p&gt;
&lt;p&gt;10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு: தற்போது 10-ஆம் வகுப்பில் பயின்று வரும் மாணவர்களுக்கு இந்த மும்மொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை: தற்போது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், அடுத்த கல்வி நிலைக்கு (அடுத்த வகுப்புகளுக்கு) உயரும் போது, இந்த மூன்றாவது மொழிக்கான பொதுத் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இருக்காது.&lt;/p&gt;
&lt;p&gt;வெளிநாட்டு மொழி படிப்போருக்குப் புதிய விதி: தற்போது பள்ளிகளில் இரண்டு வெளிநாட்டு மொழிகளைக் கற்று வரும் மாணவர்கள், அதனைத் தொடர்ந்து கற்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், அவர்கள் அதனுடன் கூடுதலாக ஒரு இந்திய மொழி அல்லது தங்களது தாய்மொழியைப் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;கற்றல் வளங்கள் மற்றும் சிபிஎஸ்இ-யின் விளக்கம்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவர்களின் வயது மற்றும் அவர்கள் பயிலும் வகுப்புகளுக்கு ஏற்ப, தேவையான கற்றல் வளங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள் (Study Materials) அனைத்தும் உரிய காலக்கெடுவிற்குள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. இந்த மொழிக் கற்றல் முறை, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயனுள்ளதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும், அறிவை வளர்க்கும் அனுபவமாகவும் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;தேசிய கல்விக் கொள்கை 2020 கூறுவது என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் பள்ளிப் பருவத்தில் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் மிக முக்கியமாக, குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயப் பரிந்துரையாகும். இதன் மூலம் இந்திய மொழிகளின் பன்முகத்தன்மையை மாணவர்கள் ஆழமாக அறிந்துகொள்ளவும், அவர்களின் மொழித்திறன் மேம்படவும் வழிவகை ஏற்படும் என கல்வி வாரியம் கூறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், நடுநிலைப் பள்ளிகளில் (6 முதல் 8-ஆம் வகுப்பு வரை) கற்ற மொழியின் தொடர்ச்சியாகவே, 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளிலும் இந்த மூன்றாவது மொழி அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாணவர்களின் கல்வி மற்றும் மனவளர்ச்சியில் சமநிலையைப் பேணும் வகையிலேயே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;அரசியல் களம் மற்றும் சமூக அமைப்புகளின் எதிர்ப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கையைக் கொண்டு வரப் பல்வேறு சமூக அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றன. இந்தத் தீவிரமான அரசியல் மற்றும் சமூக எதிர்ப்புச் சூழலுக்கு மத்தியிலும், நடப்பு கல்வியாண்டு முதல் இக்கொள்கை நடைமுறைக்கு வருவது புதுச்சேரி கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/17/0d220314152dfaab42eb9f173f85e4e71721195287588140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[TNEA Counselling 2026 Date: ஜூலை 13 முதல் பொறியியல் கலந்தாய்வு- பொதுப்பிரிவுக்கு எப்போ? துணை கவுன்சிலிங்? முக்கிய தேதிகள்!]]></title><link>https://tamil.abplive.com/education/tnea-counselling-2026-date-when-tamil-nadu-engineering-counselling-begins-265701</link><comments>https://tamil.abplive.com/education/tnea-counselling-2026-date-when-tamil-nadu-engineering-counselling-begins-265701#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 12:24:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tnea-counselling-2026-date-when-tamil-nadu-engineering-counselling-begins-265701</guid><description><![CDATA[&lt;p&gt;பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலையும் கலந்தாய்வு தேதிகளையும் உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;தரவாிசை பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால், பிரச்சனை இருந்தால் 6ஆம் தேதிக்குள் மாணவா்கள் அணுகலாம் என்றும்பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியலை &lt;a href=&quot;http://tneaonline.org&quot;&gt;http://tneaonline.org&lt;/a&gt; என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து கலந்தாய்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 13ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 20ஆம் தேதி தொடங்க உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கலந்தாய்வு தேதிகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டுப் பிரிவினருக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு- &lt;strong&gt;ஜூலை 13 முதல் 14ஆம் தேதி வரை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டுப் பிரிவினருக்கான பொதுப் பிரிவு இட ஒதுக்கீடு கலந்தாய்வு- &lt;strong&gt;ஜூலை 15 முதல் 18ஆம் தேதி வரை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பொதுப் பிரிவுக்கான பொறியியல் கலந்தாய்வு- &lt;strong&gt;ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 30 வரை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;துணைக் கலந்தாய்வு எப்போது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதே நேரத்தில் துணைக் கலந்தாய்வு, எஸ்சிஏ டூ எஸ்சி கலந்தாய்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பொறியியல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கூடுதல் தகவல்களுக்கு: &lt;a href=&quot;https://www.tneaonline.org/&quot;&gt;https://www.tneaonline.org/&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/business/how-much-do-indian-billionaires-earn-in-1-minute-265581&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/e6aaec9bf9e672e7cad6ceaeeb728eab1782888840710332_original.png" width="220"/></item><item><title><![CDATA[TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!]]></title><link>https://tamil.abplive.com/education/tnea-rank-list-2026-released-know-official-website-how-to-download-engineering-counselling-rank-list-265696</link><comments>https://tamil.abplive.com/education/tnea-rank-list-2026-released-know-official-website-how-to-download-engineering-counselling-rank-list-265696#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 11:50:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tnea-rank-list-2026-released-know-official-website-how-to-download-engineering-counselling-rank-list-265696</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;TNEA Counselling Rank List 2026:&lt;/strong&gt; 2026- 27ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஆண்டு 3,02,373 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்து இருந்த நிலையில், அதில் 2,45,220 பேர் பதிவுக் கட்டணம் செலுத்தி இருந்தனர்.&amp;nbsp;ஜூன் 5ஆம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று (ஜூலை 1) தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;2.36 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் 10 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தரவரிசைப் பட்டியலைக் காண்பது எப்படி?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;மாணவர்கள் &lt;a href=&quot;https://www.tneaonline.org/user/login&quot;&gt;https://www.tneaonline.org&lt;/a&gt; என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.&lt;/li&gt;
&lt;li&gt;அதில், &lt;a href=&quot;https://www.tneaonline.org/user/login&quot;&gt;https://www.tneaonline.org/user/login&lt;/a&gt; என்ற இணைப்பு மூலம் லாகின் செய்ய வேண்டியது அவசியம்.&lt;/li&gt;
&lt;li&gt;அதில் இ மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு உள்ளே நுழைய வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;அதில் நம்முடைய தரவரிசைப் பட்டியலை மாணவர்கள் காணலாம்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இதையும் வாசிக்கலாம்: &lt;a href=&quot;https://tamil.abplive.com/education/nirf-rankings-2025-engineering-iit-madras-tops-list-check-tamil-nadu-institutions-colleges-233148&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;NIRF Rankings 2025: NIRF தரவரிசை: தமிழ்நாட்டின் 14 டாப் பொறியியல் கல்லூரிகள்! உங்கள் கனவு காலேஜ் இருக்கா?&amp;nbsp;&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கூடுதல் தகவல்களுக்கு: &lt;a href=&quot;https://www.tneaonline.org/user/login&quot;&gt;https://www.tneaonline.org&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மாணவர்கள் இதுதொடர்பான விரிவான விவரங்களை &lt;a href=&quot;https://www.tneaonline.org/&quot;&gt;https://www.tneaonline.org/&lt;/a&gt; என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/business/how-much-do-indian-billionaires-earn-in-1-minute-265581&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/f2cdaa5e679499c9792192bab3a4cf711782886709628332_original.png" width="220"/></item><item><title><![CDATA[ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!]]></title><link>https://tamil.abplive.com/education/tntet-tamil-nadu-teacher-eligibility-test-pass-mark-reduce-35-percent-teachers-before-2011-265556</link><comments>https://tamil.abplive.com/education/tntet-tamil-nadu-teacher-eligibility-test-pass-mark-reduce-35-percent-teachers-before-2011-265556#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 12:59:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tntet-tamil-nadu-teacher-eligibility-test-pass-mark-reduce-35-percent-teachers-before-2011-265556</guid><description><![CDATA[&lt;p&gt;பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில், தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக அரசு குறைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து இன்று அவர் மேலும் கூறும்போது, &amp;rsquo;&amp;rsquo;தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்கள்&amp;nbsp;தகுதித் தேர்வில் எளிதாக வெற்றி பெறுவதற்காக பல மாநிலங்களில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அத்தகைய திட்டங்களை அறிவிக்காதது ஆசிரியர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளை பின்பற்றி நியமிக்கப்படுகின்றனர். 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலைதான் இருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இதையும் வாசிக்கலாம்: &lt;a href=&quot;https://tamil.abplive.com/education/tamil-nadu-school-curriculum-committee-revamp-former-isro-scientist-mylswamy-annadurai-heads-panel-265544&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!&lt;/a&gt;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எல்லோருக்கும் கட்டாயமான தகுதித்தேர்வு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆனால், அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி&amp;nbsp;தீர்ப்பளித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;பணியில் உள்ள ஆசிரியர்களும் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய உடனேயே, ஆசிரியர்களுக்காக சிறப்புத் தகுதித் தேர்வை மிகவும் எளிமையான முறையில் நடத்தியும், தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்தும் அனைத்து ஆசிரியர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனை வழங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால், அதை அப்போது ஏற்காத திமுக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் காலத்தை வீணடித்தது. திமுக அரசின் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் சிறப்புத் தகுதித் தேர்வை அறிவித்தது. அதுதான் ஜூலை 4, 5ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;2011ஆம் ஆண்டுக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் பயின்றபோது இருந்த பாடத்திட்டமும், இப்போது உள்ள பாடத்திட்டமும் முற்றிலுமாக மாறுபட்டது என்பதால், அந்த ஆசிரியர்களால் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம் ஆகும். அதனால் அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்க வேண்டும் என்பதுதான் நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அத்தகைய சிறப்பு சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பொதுப்பிரிவினர் &amp;nbsp;60% (150&amp;amp;க்கு 90) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (150&amp;amp;க்கு 82) மதிப்பெண்களும் &amp;nbsp;பெற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 28&amp;amp;ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட &amp;nbsp;அரசாணையின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான தேர்ச்சி &amp;nbsp;மதிப்பெண் 50% ஆகவும் உயர்த்தப்பட்டது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இரு பிரிவுகளாக பிரித்தது நியாயமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/_JucZlBfVWs?si=q_QFe1bsQn6uFtgf&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எந்த பயனும் இல்லை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அதன்பின் அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்கள் எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆசிரியர் அமைப்புகள் விடுத்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின ஆசிரியர்கள் 75 மதிப்பெண்களும், &amp;nbsp;பட்டியலின, பழங்குடியின ஆசிரியர்கள் 60 மதிப்பெண்களும் எடுப்பது கடினம் என்று கூறப்படுகிறது. தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்காமல் சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவதால் எந்த பயனும் இல்லை என்றும், சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறாது என்றும் ஆசிரியர் அமைப்புகள் கூறுகின்றன. இதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சூழல்களையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மேற்கு வங்க அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற 55 மதிப்பெண்கள் (37%) போதுமானது என்று அறிவித்திருக்கிறது. இது நியாயமானது தான். 2011ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் 20 ஆண்டுகளுக்கும் &amp;nbsp;கூடுதலான பணி அனுபவம் கொண்டிருப்பார்கள். அவர்களின் தகுதி மீது யாரும், எந்த ஐயமும் கொள்ள முடியாது.&lt;/p&gt;
&lt;p&gt;அவர்கள் ஏராளமான மருத்துவர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை உருவாக்கிய ஆசிரியர்கள்தான். அவர்களுக்கும் தகுதித் தேர்வு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அதை &amp;nbsp;நிறைவேற்றுவதற்காகத் தான் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் எந்தத் தவறும் இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு கீழ் குறைக்காதபட்சத்தில் நீதிமன்றமும் இதை எதிர்க்காது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 75 (50%) ஆகவும், &amp;nbsp;மற்ற அனைத்துப் பிரிவினருக்கும் 150-க்கு 52 (35%) ஆகவும் குறைக்க வேண்டும். அதன் மூலம் சிறப்புத் தகுதித் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் &amp;nbsp;அனைவரும் தேர்ச்சி பெற்று பணியில் தொடருவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/on-road-price-of-maruti-grand-vitara-phantom-black-edition-265485&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/01/23/f08bc92762eae641208dcd6f8fb1799d1769172366051487_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!]]></title><link>https://tamil.abplive.com/education/tamil-nadu-school-curriculum-committee-revamp-former-isro-scientist-mylswamy-annadurai-heads-panel-265544</link><comments>https://tamil.abplive.com/education/tamil-nadu-school-curriculum-committee-revamp-former-isro-scientist-mylswamy-annadurai-heads-panel-265544#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 11:34:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tamil-nadu-school-curriculum-committee-revamp-former-isro-scientist-mylswamy-annadurai-heads-panel-265544</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசின் தலைமையின்கீழ் தமிழ்நாட்டு பள்ளிகளில் பாடத்திட்டத்தை உருவாக்கும் குழு கலைக்கப்பட்டு, இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவரின் கீழ் 15 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உறுப்பினர்கள் யார் யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஐசர் (IISER, டெல்லி) எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியும் பேராசிரியருமான த.வி.வெங்டேசுவரன்&lt;/li&gt;
&lt;li&gt;சென்னைப் பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் ரீட்டா ஜான்&lt;/li&gt;
&lt;li&gt;பிரசிடென்சி கல்லூரி, தமிழ் ஸ்காலர் சுதந்திர முத்து&lt;/li&gt;
&lt;li&gt;சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் நவீன படிப்பு மையத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் தலைவர் &lt;strong&gt;முனைவர் மதிவாணன்&lt;/strong&gt;&lt;/li&gt;
&lt;li&gt;திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரும் வரலாற்றாளருமான &lt;strong&gt;முனைவர் அசோகன்&lt;/strong&gt;&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p&gt;சிஐஇடி டெல்லி உதவிப் பேராசிரியர் &lt;strong&gt;ஏஞ்சல் ரத்தினபாய்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p&gt;சென்னை, ஆங்கில மொழி கற்பித்தல் நிபுணர் &lt;strong&gt;உமா ராமன்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p&gt;சென்னை, மீனம்பாக்கம் அகர்சந்த் மன்முல் ஜெயின் கல்லூரி தலைவர் &lt;strong&gt;மஹாவீர்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p&gt;பிரபல ஓவியர் &lt;strong&gt;மணியம் செல்வன்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p&gt;பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தி முன்னாள் வரலாற்றுப் பேராசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான &lt;strong&gt;ராஜன்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p&gt;திருநீர்மலை மகரிஷி வித்யா மந்திர் கல்வியாளர் &lt;strong&gt;சந்தான தேவன்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;டிஐஇடி முதல்வர் &lt;strong&gt;முனைவர் செல்வம்&lt;/strong&gt;&lt;/li&gt;
&lt;li&gt;விழுப்புரம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி &lt;strong&gt;ஆசிரியர் திலிப்&lt;/strong&gt;&lt;/li&gt;
&lt;li&gt;அனைவருக்கும் கட்டாயக் கல்வி செயல்பாட்டாளர் &lt;strong&gt;ஆனந்தஜித் மாகியா&lt;/strong&gt;&lt;/li&gt;
&lt;li&gt;&lt;strong&gt;எஸ்சிஇஆர்டி இயக்குநர்&lt;/strong&gt; - உறுப்பினர் செயலர்&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;உள்ளிட்ட 15 பேராசிரியர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அத்துடன் அலுவல் உறுப்பினராகவும் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதேபோல&amp;nbsp;உயர்மட்ட பாடத்திட்ட வடிவமைப்புக் குழு துணைத் தலைவர் &amp;ndash; நியமன உறுப்பினர் ஆகவும் நியமிக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/_JucZlBfVWs?si=q_QFe1bsQn6uFtgf&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதன்மூலம் அறிவியல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பரந்துபட்ட துறைசார் அறிவு மாணவர்களுக்கு பாடமாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/on-road-price-of-maruti-grand-vitara-phantom-black-edition-265485&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/3007d0332394c6e518efc11b222d52b81782799224831332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!]]></title><link>https://tamil.abplive.com/education/puducherry-technological-university-postgraduate-admissions-application-deadline-extended-until-july-5-tnn-265542</link><comments>https://tamil.abplive.com/education/puducherry-technological-university-postgraduate-admissions-application-deadline-extended-until-july-5-tnn-265542#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 11:15:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/puducherry-technological-university-postgraduate-admissions-application-deadline-extended-until-july-5-tnn-265542</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக முதுகலை சேர்க்கைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மாணவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்...&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (PTU) 2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை (PG) படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாணவர்களின் கோரிக்கைக்கு கிடைத்த பலன்&lt;/h2&gt;
&lt;p&gt;முன்னதாக, பல்கலைக்கழகத்தின் எம்.டெக். (M.Tech), எம்.சி.ஏ. (MCA), எம்.பி.ஏ. (MBA) மற்றும் எம்.எஸ்.சி. (M.Sc) உள்ளிட்ட பல்வேறு முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 26ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இருப்பினும், பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களாலும், தங்களுக்கு மேலும் கால அவகாசம் தேவை என்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக முதுகலை சேர்க்கைக்குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;முக்கிய தேதிகள் மற்றும் வழிமுறைகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவர்கள் தங்களின் சேர்க்கை நடைமுறைகளைச் சரியாக திட்டமிட கீழே உள்ள முக்கிய தேதிகளைப் பின்பற்றலாம்:&lt;/p&gt;
&lt;p&gt;ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 5, 2026&lt;/p&gt;
&lt;p&gt;சான்றிதழ் நகல்களைச் சமர்ப்பிக்க கடைசி நாள்: ஜூலை 7, 2026&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;முக்கிய குறிப்பு:&lt;/strong&gt; ஆன்லைனில் வெற்றிகரமாக விண்ணப்பித்த மாணவர்கள், தங்களின் விண்ணப்பப் படிவத்தை அச்சு நகல் (Hard Copy) எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்களையும் (Attested Copies) இணைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த விண்ணப்பக் கோப்பினை ஜூலை 7ஆம் தேதிக்குள் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள 'முதுகலை சேர்க்கைக்குழு அலுவலகத்தில்' நேரிலோ அல்லது தபால் (Post/Courier) மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தல்&lt;/h2&gt;
&lt;p&gt;முதுகலை சேர்க்கைக்கான தகுதிகள், கட்டண விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முழுமையான நடைமுறைகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;இறுதி நாளில் ஏற்படும் இணையதளப் பக்க நெரிசல் மற்றும் தொழில்நுட்பத் கோளாறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, மாணவர்கள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் விரைந்து விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/14a6af33defa2db1782236b14040ceaf1782798225593194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Central Govt: "உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/education/central-govts-new-vbsa-bill-rejects-state-govt-power-in-higher-education-department-warning-vck-mp-ravikumar-tn-politics-265539</link><comments>https://tamil.abplive.com/education/central-govts-new-vbsa-bill-rejects-state-govt-power-in-higher-education-department-warning-vck-mp-ravikumar-tn-politics-265539#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 11:07:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/central-govts-new-vbsa-bill-rejects-state-govt-power-in-higher-education-department-warning-vck-mp-ravikumar-tn-politics-265539</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Central Govt Higher Education:&lt;/strong&gt; நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் மத்திய அரசின் கைக்குள் செல்லும் புதிய மசோதாவை பாஜக முன்னெடுப்பதாக, விசிக எம்.பி., ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;உயர்கல்விக்கு ஆபத்து - ரவிக்குமார் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் மத்திய அரசின் கைக்குள் செல்லும் புதிய மசோதாவை மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக, விசிக எம்.பி., ரவிக்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், &amp;ldquo;நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஆபத்தான மசோதா ஒன்று அறிமுகமாக உள்ளது. விஸ்கிட் பாரத் சிக்&amp;zwnj;ஷா அதிஷ்டான் சட்ட மசோதாதான் அது. முன்பே அது அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதுதான். இந்த கூட்டத் தொடரில் அது சட்டமாக்கப்படும் எனத் தெரிகிறது. அந்த சட்டமானால் இந்தியாவின் ஒட்டுமொத்த உயர்கல்வியும் ஒன்றிய அரசின் பிடிக்குள் சென்றுவிடும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/eggs-vs-soybeans-protein-content-details-in-pics-265529&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கலைக்கப்படும் கல்வி அமைப்புகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த மசோதா 2025 டிசம்பர் 15 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உயர்கல்விக்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவுவதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. விஸ்கிட் பாரத் சிக்&amp;zwnj;ஷா அதிஷ்டான் என்ற இந்த அமைப்பு பின்வரும் அமைப்புகளுக்கு மாற்றாக அமையும்: (i) பல்கலைக்கழக மானியக் குழு (UGC), (ii) அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), மற்றும் (iii) தேசிய ஆசிரியர் கல்விக் குழு (NCTE). ஏற்கனவே உள்ள இந்த அமைப்புகள் தொடர்பான சட்டங்களை இந்த சட்டம் ரத்து செய்துவிடும். சட்டம் மற்றும் மருத்துவக் கல்வியை இந்த சட்டத்தின்கீழ் வராது. அவற்றுக்குத் தனியே சட்டங்கள் உருவாக்கப்படும்.&amp;nbsp; பள்ளிக்கல்வியையும் உயர்கல்வியையும் &amp;nbsp;ஆர்.எஸ்.எஸ் கொள்கைக்கு ஏற்ப வடிவமைப்பதே ஒன்றிய பாஜக அரசின் நோக்கம். அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்துவருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/W6QVl3GrML0?si=WJSQde3cCVE_445A&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;புதிய சட்டத்தின் பாதிப்புகள் என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த விஸ்கிட் பாரத் &amp;hellip; அமைப்பு நிறுவப்படுவதால் பின்வரும் கேடுகள் ஏற்படும்:&amp;nbsp;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;இந்த சட்டம், மானியங்கள் வழங்கும் பொறுப்பை கல்வி அமைச்சகத்திடம் (MoE) ஒப்படைக்கிறது. இதனால் மானிய ஒதுக்கீடென்பது அதிகாரத்துவமானதாகவும், தன்னிச்சையானதாகவும், அரசியல் கணக்கீடுகளுக்குட்பட்டதாகவும் மாறும். ஏற்கனவே இந்தியைப் பயிற்றுமொழியாக ஏற்காத மாநிலங்களுக்கு பள்ளிக் கல்விக்கான நிதியை பாஜக அரசு விடுவிக்க மறுத்துவருகிறது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;உயர்கல்வியென்பது அரசமைப்புச் சட்டத்தின் ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. அதை இந்த சட்டம் ஒன்றிய அரசின் அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுசெல்லும். ஆணையத்தின் 12 உறுப்பினர்களில் 10 பேர் நேரடியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டோ, அல்லது மத்திய அரசு பரிந்துரைக்கும் &amp;ldquo;நிபுணர்கள்&amp;rdquo; ஆகவோ இருப்பார்கள்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;VBSA சட்டம் முந்தைய அனைத்து சட்டங்களையும் மேலோங்கி நிறைவேற்றும் (overriding effect) என்பதால், நாட்டின் கூட்டாட்சித் (federal) தன்மைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்&lt;/li&gt;
&lt;li&gt;உயர்கல்வித் தரநிலைகளை நிர்ணயிப்பதில் &amp;lsquo;ஒரே அளவு அனைவருக்கும்&amp;rsquo; (one size fits all) என்ற அணுகுமுறை ஒருபோதும் வெற்றி பெற முடியாது. ஆனால் HECI/VBSA அணுகுமுறை உயர்கல்வியை ஒருசிலருக்கானதாகச் சுருக்குவதையே நோக்கமாகக் கொண்டு, சமத்துவம் &amp;nbsp;குறித்த கேள்விகளை முழுமையாகப் புறக்கணிக்கிறது.&lt;/li&gt;
&lt;li&gt;&lt;strong&gt;&amp;nbsp;&lt;/strong&gt;VBSA சட்டம், உயர்கல்வி நிறுவனங்களின் &amp;nbsp;தன்னாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள கல்வியில் மாநில அரசுகளின் செல்வாக்கக் குறைப்பதோடு, மாநில அரசுகள் நடத்தும் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஆளும் கட்சியுடன் அரசியல் மோதலுக்குள் தள்ளும்.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;a title=&quot;GOD Of War: முருகனை வடநாட்டுக்கு கடத்தும் ஆந்திர திரையுலகம்..! கொதிப்பில் தமிழர்கள் - என்னடா நடக்குது?&quot; href=&quot;https://tamil.abplive.com/entertainment/junior-ntrs-god-of-war-movie-producer-naga-vamsis-controversy-tweet-about-thamizh-kadavul-murugan-netizens-slams-265525&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: GOD Of War: முருகனை வடநாட்டுக்கு கடத்தும் ஆந்திர திரையுலகம்..! கொதிப்பில் தமிழர்கள் - என்னடா நடக்குது?&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&amp;rdquo;ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கான புதிய சட்டம்&amp;rdquo;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்திய உயர்கல்வியின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணியாக இந்த சட்டம் அமையும். இந்த சட்டத்தை நிறைவேற்றுவது மட்டுமின்றி கல்வியை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டப்படி மறுவார்ப்பு செய்வதற்காகவே திருமதி நிர்மலா சீதாராமன் கல்வி அமைச்சராக்கப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.&amp;nbsp; கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் அகற்றப்படுவது காக்ரோச் ஜன்தா பார்ட்டியின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படலாம். ஆனால், புதிய அமைச்சர் நியமனம் வினாத்தாள் கசிவு உட்பட உயர்கல்வியின் எந்தவொரு சீர்கேட்டையும் தடுத்துவிடாது என்பதே உண்மை.&amp;nbsp; வினாத்தாள் கசிவு முதலானவை உயர்கல்வியைப் பீடித்துள்ள நோயின் அறிகுறி மட்டும்தான். தேசிய கல்விக் கொள்கை ( NEP) என்பதுதான் நோய். அந்த நோயை ஒழிப்பதே நம் இலக்காக இருக்க வேண்டும்&amp;rdquo; என விசிக எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/d40be87a3250ec424cbfbb33f73c18821782797658495732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["இனிமேலும் தற்காலிகமா?" – முதல்வர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதியை நம்பிப் தவிக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-part-time-special-teachers-regularization-chief-minister-vijay-tnn-265505</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-part-time-special-teachers-regularization-chief-minister-vijay-tnn-265505#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 20:31:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-part-time-special-teachers-regularization-chief-minister-vijay-tnn-265505</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வாக்குறுதியை அரசாணையாக வெளியிட்டு, 11,773 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க முதல்வர் விஜய் கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான செய்தி அறிக்கை பின்வருமாறு;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுக&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், &quot;தமிழக அரசுத் துறைகளில் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களில், 5 ஆண்டுகளை நிறைவு செய்தவர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில் நிரந்தர ஆசிரியர்களாக/ஊழியர்களாக மாற்றப்படுவார்கள்&quot; என்ற மிக முக்கியமான வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது தவெக ஆட்சிப் பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராகச் செயல்பட்டு வரும் நிலையில், இந்த வாக்குறுதியை அரசாணையாக மாற்றி தங்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள் பெருத்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூ.15,000 சம்பளத்தில் வாழ வழியின்றி பரிதவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுப் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தையல், கணினி உள்ளிட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தற்போது மாதந்தோறும் வெறும் ரூபாய் 15,000 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;இன்றைய அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகள் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவுகளைக் கணக்கிட்டால், இந்த 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு குடும்பத்தை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இதனால் 11,773 ஆசிரியர்களின் குடும்பங்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கே வழியின்றி பரிதவித்து வருகின்றன,&quot; என்று ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;50 வயதைக் கடந்த ஆசிரியர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் பகுதிநேர ஆசிரியர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும், பணிநிரந்தரத்திற்காகவும் போராடத் தொடங்கி ஏற்கனவே 15 கல்வி ஆண்டுகள் முடிந்து, தற்போது 16-வது கல்வி ஆண்டு நடைபெற்று வருகிறது. இளமைக் காலம் முழுவதையும் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்திற்காகத் தியாகம் செய்த பல ஆசிரியர்கள், தற்போது 50 வயதைக் கடந்து விட்டார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய சூழ்நிலையில் இவர்களைப் பணிநிரந்தரம் செய்தாலும் கூட, இன்னும் சில ஆண்டுகளில் இவர்கள் பணி ஓய்வு (Retirement) பெறும் வயதை எட்டிவிடுவார்கள். எனவே, இத்தனை ஆண்டுகள் தங்களின் உழைப்பை அரசுப் பள்ளிகளுக்காக அர்ப்பணித்த இந்த ஆசிரியர்களை முதல்வர் விஜய் அங்கீகரித்து, அவர்களை முழுநேர தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும். அப்போதுதான் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் கிடைத்து, தங்களின் வாழ்நாளின் இறுதிக்காலத்திலாவது அவர்கள் ஒரு நல்ல நல்வாழ்வை வாழ முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முதல்வர் விஜய்க்கு அவசர வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி என்பது மாணவர்களின் ஆளுமைத் திறனுக்கும், வேலைவாய்ப்புக்கும் மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. அத்தகைய கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் எதிர்காலம் இன்று கேள்விக்குறியாக உள்ளது. எனவே, முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தற்போது பணியில் நீடிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்களின் எதிர்காலம், அவர்களது குடும்ப நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மனிதாபிமானத்தோடு பரிசீலிக்க வேண்டும். &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;-வின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய இவர்களைப் பணிநிரந்தரம் செய்வதை அரசின் கொள்கை முடிவாக (Policy Decision) உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/1c7cf4d7294c7d655932d7d272b17d8b1782745267782186_original.jpg" width="220"/></item></channel></rss>