கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்த உதவி பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

பணியாளர்கள் மீது முதலமைச்சருக்கு அக்கறை

தமிழ்நாடு முதலமைச்சர் பணியாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளதால் இவர்கள் தொடர்ந்து பணிபுரிய அறிவுறுத்தினார்கள். அதனால் அண்ணா பல்கலைக்கழக தற்காலிக உதவி பேராசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவி பேராசிரியர்கள் (Teaching Fellows) முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • மீண்டும் உடனடி நியமனம், பணி நீட்டிப்பு ஆணை வழங்குதல்.
  • ஜனவரி மாதத்திற்கான ஊதிய இழப்பை வழங்குதல்
  • நீதிமன்ற உத்தரவை உடனடியாக பின்பற்றி ஊதிய உயர்வு மற்றும் அனுபவ சான்றிதழ் வழங்கல்.
  • அடிப்படை தேவைகளான ESI, EPF, மருத்துவ காப்பீடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துதல்.
  • பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பணிக்கொடை மற்றும் ஈமச்சடங்கு நிதி வழங்கிட வேண்டுதல்.
  • கல்வித் தரத்தை பாதிக்கும் நடைமுறைகளை நிறுத்தல்
  • UGC விதிமுறைகளின்படி ஊதிய திருத்தம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.