அண்ணா பல்கலைக்கழகத்தின் பிஎச்டி, எம்எஸ் ஆராய்ச்சிப் படிப்புகளில் சேர மாதாமாதம் ரூ.40,000 உதவித்தொகையுடன் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது? என்று காணலாம். 

Continues below advertisement

அண்ணா பல்​கலைக்​கழகத்தின் வளாகக் கல்​லூரி​களான கிண்டி பொறி​யியல் கல்​லூரி, அழகப்பா தொழில்​நுட்ப கல்வி நிறு​வனம், குரோம்​பேட்டை எம்​ஐடி மற்​றும் அரசு பொறி​யியல் கல்​லூரி​களில் பிஎச்​டி, எம்எஸ் ஆராய்ச்சி படிப்​பு​களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்பாக, பொறி​யியல், தொழில்​நுட்​பம், மேலாண்​மை, கட்​டிடக்​கலை, கலை அறி​வியல் பாடங்​களில் சேர விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

Continues below advertisement

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கல்​லூரி​களில் பணி​யாற்றி வரும் பேராசிரியர்​கள், தொழில்​துறை​யில் பணி​யாற்​று​வோர், முதுகலை பட்​டதா​ரி​கள் மற்றும் இறுதியாண்டு முதுகலை மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்​ணப்​பிக்​கலாம். இதில் தேர்வு செய்யப்படும் 250 ஆராய்ச்சி மாணவர்​களுக்கு மாதாமாதம் ரூ.40 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்படும்.

முக்கியத் தேதிகள் இதோ!

இதற்கு மார்ச் 28ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன், உரிய சான்றிதழ்களை இணைத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இதற்கு ஏப்ரல் 4ஆம் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://cfr.annauniv.edu/jul26/ என்ற இணைப்பில் பாடத் திட்ட இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

https://cfr.annauniv.edu/jul26/phd-broucher.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு தகவல்களையும் படித்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல https://cfr.annauniv.edu/jul26/ms-broucher.php என்ற இணைப்பை க்ளிக் செய்து, முழு தகவல்களையும் பெற்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் தகவல்களை https://cfr.annauniv.edu/research/academics/index.php என்ற இணைப்பில் பெறலாம்.

தொலைபேசி எண்: 044 22357366