Crime: ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த சதீஷ், கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார்.

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் கொதிக்கும் ரசப் பாத்திரத்தில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டைச் சேர்ந்த இளைஞர் சதீஷ் (வயது 20). சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த சதீஷ், கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார்.

அதன்படி சென்ற ஏப்.23ஆம் தேதி    திருமண விழா ஒன்றுக்கு உணவு பரிமாறச் சென்ற சதீஷ், உணவுப் பாத்திரத்தை இறக்கி வைத்தபோது அருகில் ரசம் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.

தொடர்ந்து சதீஷ் மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டு சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி சதீஷ் நேற்று முன் தினம் (ஏப்.29) உயிரிழந்தார்.

இச்சூழலில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல் முன்னதாக கிருஷ்ணகிரி, மாத்தூர் அருகே சுண்ணாம்புப் பாறை வெட்டி எடுக்கும் குட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

நீர் நிரம்பிய சுண்ணாம்புக் குட்டையில் மீன் பிடிக்க மாது -தீபா ஆகியோரின் மகன் இளவரசன் சென்ற நிலையில், 30 அடி ஆழம் கொண்ட சுண்ணாம்புக் குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான். இந்நிலையில், சம்பவம் குறித்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் வெகு நேர முயற்சிக்குப் பின் சிறுவனின் உடலைக் கண்டுபிடித்தனர். 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola