மாறாத தலைநகர்..! 3 குழந்தைகளின் தாய் பரிதாபம், ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது
Delhi Horror: தலைநகர் டெல்லில் பேருந்தில் வைத்து இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Delhi Horror: தலைநகர் டெல்லில் பேருந்தில் வைத்து இளம்பெண்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை:
கடந்த திங்களன்று தலைநகர் டெல்லியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தனியார் ஏசி பேருந்து ஒன்றில், இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ராணி பாக் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தில் வைத்து, குற்றவாளிகள் இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். பிதாம்புராவில் உள்ள ஒரு குடிசைப் பகுதியைச் சேர்ந்த அந்த பெண், மங்கோல்புரியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோர சம்பவம் - நடந்தது என்ன?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, கடந்த மே 11ம் தேதி இரவு 30 வயதான அப்பெண் வழக்கம் போல் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சரஸ்வதி விஹாரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஒரு படுக்கை வசதி கொண்ட பேருந்து வந்து நின்றுள்ளது. அந்த பேருந்தின் கதவருகே நின்றுகொண்டிருந்த ஒரு நபரிடம் அந்தப் பெண் நேரம் கேட்பதற்காக அணுகியுள்ளார். அப்போது அந்த நபர் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து பேருந்துக்குள் ஏற்றியுள்ளார். பின்னர், பேருந்தானது நங்லோய் நோக்கி ஓட்டிச் செல்லப்பட்டு, அங்கு ஒரு மறைவான பகுதியில் வாகனத்தை நிறுத்தி கூட்டு பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியுள்ளனர். தொடர்ந்து பேருந்து நகரை சுற்றி 2 மணி நேரம் வலம் வந்ததாகவும், வேறு சிலருக்கும் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
#WATCH | Delhi: The police have registered a case of the alleged gangrape of a woman on a private bus in Delhi. The police have arrested both accused individuals and also seized the bus used in the incident.
— ANI (@ANI) May 14, 2026
(Visuals of the bus seized by the police) pic.twitter.com/DFT2toJ5mL
3 குழந்தைகளுக்கு தாய்
காவல்துறை தகவல்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. அவருக்கான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பத்தில் தொடர்புடைய பேருந்தானது சம்பவத்தில் ஈடுபட்ட பேருந்து, ஃபரிதாபாத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள, ராயல் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனத்தினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு நிர்பயா?
கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் கடந்த 2020ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் ஆன பிறகும், பல்வேறு கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்ட பிறகும் மீண்டும் ஒரு பெண் தலைநகர் டெல்லியில் கூட்டு பாலியல் வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கண்டனம்
கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாஜக அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சமூகவலைதள பதிவில், “டெல்லி காவல்துறையிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதன் தலைவரான துணைநிலை ஆளுநர், நாம் அவருடைய சோலே பத்தூரே மற்றும் ஜிலேபி சாப்பிடும் காணொளிகளைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். மூன்று வயது பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கிற்காக நம்மைச் சந்திக்க முயன்றபோது கூட நேரம் ஒதுக்காதவர்" என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Before You Go
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
ட்ரெண்டிங் செய்திகள்






















