பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் அத்துமீறல் செய்த வாலிபர்கள் போக்சோவில் கைது

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் சிறுமிகளிடம் பேசினர். அப்போது தங்களுக்கு என்ன நடந்தது என்பதை அந்த சிறுமிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

Continues below advertisement

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் அரசு பள்ளிக்கு வந்த சகோதரிகள் அடுத்தடுத்து மயக்கம் போட்டு விழுந்ததன் பின்னணியில் மனதை உறைய செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

Continues below advertisement

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்துள்ளனர். இவர்கள் பள்ளிக்கு வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பள்ளி ஆசிரியர்கள் இரு மாணவிகளையும் அதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மாணவிகளை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் மாணவிகள் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பதுதான்.

உடன் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிகள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் போலீசார் சிறுமிகளிடம் பேசினர். அப்போது தங்களுக்கு என்ன நடந்தது என்பதை அந்த சிறுமிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதாவது முசிறி அருகில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வரும் அஜித் (20), கொத்தனாராக கூலி வேலை பார்த்து வரும் கேசவன் (23) ஆகியோர் சிறுமிகளிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டதுதான் மாணவிகள் பாதிப்புக்கு காரணம் என்பது விசாரணை மூலம் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அஜித், கேசவன் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். முசிறி அருகே அரசுப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவிகள், சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola