Crime: மனைவியின் நடத்தையில் சந்தேகம் - கொன்ற கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்
திருச்சியில் மனைவி தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவன் கைது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Continues below advertisement

கொலை மாதிரிப்படம்
திருச்சி மாநகர், பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40), பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது அரியமங்கலம், கண்டோன்மெண்ட் ஆகிய போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் சபுராபீவியை பொன்மலை கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே பழைய பொன்மலை மகளிர் போலீஸ் நிலையம் பின்புறம் ரயில்வேக்கு சொந்தமான ஒரு கட்டிடத்துக்கு அழைத்து சென்றார். அப்போது, அந்த கட்டிடத்தில் வைத்து அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கினார். பின்னர் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதிகாலையில் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், “நான் எனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தேன். இதனால் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு என்னிடம் கோபித்துக்கொண்டு அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அவரிடம் சமரசம் செய்து மீண்டு்ம் வீட்டுக்கு அழைத்து வந்தேன். ரயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடம் அருகே வந்தபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கட்டிடத்துக்குள் இழுத்து சென்று சேலையால் அவரது கழுத்தை நெரித்தேன். இதில் அவர் சாகாததால், அவரது தலையில் கல்லைபோட்டு கொலை செய்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். போலீசார் என்னை கைது செய்தனர்” என்று கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
DMK: ”இதுதான் போதைப்பொருளை ஒழிக்கும் லட்சணமா?” திமுக அரசில் காவல்துறை சூப்பர்? கெட்டொழியும் இளசுகள்
திருமலா பால் நிறுவன மேலாளர் தற்கொலை , காவல் துறை மீது நடவடிக்கை - காவல் ஆணையர் அருண்
மதுபோதையில் ஏர் கன்னால் சுட்டதில் 3 பேர் பரிதாபம் ; சம்பவ இடத்தில எஸ்பி விசாரணை... கிராம மக்கள் கொடுத்த அதிர்ச்சி!
மதுரையின் பிரபல ரவுடி சிவமணி படுகொலை! கூட்டாளிகள் கைது - கொலையின் பின்னணி என்ன?
மதுரையில் மோசடி நடந்தது எப்படி? 27 லட்சம் இழந்த மூதாட்டி - தொண்டு நிறுவனம் மீதான புகார்!
சென்னையில் சாலையில் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்த லாரி
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.