திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சின்னதுரை (வயது 47). இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு லண்டனுக்கு சென்று அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதனால் இவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்று இருந்தார். இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சின்னதுரை லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். தீபாவளி பண்டிகையையொட்டி இவர் நேற்று காலை ரெயில்வே குட்ஷெட் மேம்பாலம் அருகே ஒரு டாஸ்மாக் கடை அருகே இருந்த பாரில் மது குடித்துக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சிலருக்கும், சின்னதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாகி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுபாட்டிலால் சின்னதுரையின் தலையில் பலமாக தாக்கினர். இதில் அலறி துடித்த அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.




இதனை தொடர்ந்து மருத்துவமனையில் தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால்  சிறிதுநேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சின்னதுரையை திருச்சி முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மன் (65) உள்பட 3 பேர் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக சின்னதுரையின் மனைவி மதுமிதா அளித்த புகாரின்பேரில் இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முடுக்குப்பட்டியை சேர்ந்த தர்மனை (65) கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய உலகநாதபுரத்தை சேர்ந்த பிரசன்னா, சரவணன் ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் பிரசன்னாவை (24) நேற்று கைது செய்தனர். தொடர்ந்து சரவணனை தேடி வருகிறார்கள்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.