மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்; நையப் புடைத்த இளைஞர்களில் ஒருவர் கைது

சேத்துப்பட்டு அருகே பள்ளி மாணவியை வீட்டிற்கு வா என அழைத்த ஆசிரியரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ வைரலானதை அடுத்து தலைமறைவாக இருந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனக்கரசு 42 தணிக்கவியல் ஆசிரியராக கடந்த 20 ஆண்டு காலமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தனக்கரசு இப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு அடிக்கடி வராமல் நின்று விடுவாராம். இந்த மாணவியை பள்ளியில் இருந்து விடுவிக்க டிசி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவியும் டிசியை வாங்கும் நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதிக்கு முன்பு தனக்கரசு குடிபோதையில் மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய் வீட்டுக்கு வா என செல்போனில் பேசி உள்ளார்.

Continues below advertisement


 

அந்த மாணவியும் சார் நான் டி சி வாங்க போறேன் எனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறுகிறார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வா என ஆசிரியர் அழைக்கிறார். அதற்கு மாணவி நான் ஏன் வரவேண்டுமென பேசுகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அந்த மாணவிக்கு வந்த செல்போன் உரையாடலை வைத்து இளைஞர்கள் சதீஷ்குமார் என்கிற சத்தியா மற்றும் கோகுல் வயது (24), மனோஜ் வயது (24), செல்வராஜ் வயது (23) சேது என்கிற சேதுராமன் வயது (24), சந்துரு வயது (24) ஆகிய ஆறு பேர் ஆசிரியர் தனக்கரசுவை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று முட்டி போட வைத்து அந்த மாணவியின் செல்போன் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது. திருமணம் ஆகி உனக்கு குழந்தைகள் இல்லையா, உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா, நாங்களும் தான் குடிக்கிறோம் ஆனால் இப்படி செய்ய மாட்டோம் உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என கேட்டு இளைஞர்கள் ஆசிரியரை தாக்குகின்றனர்.


அதில் அவரை தர குறைவாக பேசுகின்றனர். இது குறித்து அந்த இளைஞர்கள் ஆசிரியரை தாக்குவதை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலான நிலையில் ஆசிரியர் தனகராசுவை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிரியரை தாக்கிய ஆறு பேரை தேடி வந்தனர். அப்போது சேத்துப்பட்டு நான்கு வழி சாலை சந்திப்பில் ஆய்வாளர் ராஜாராம், துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தலைமறைவாக இருந்த சதீஷ் என்கின்ற சத்தியா போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போளூர் சிறையில் அடைத்தனர். மேலும் தரைமறைவாக உள்ள ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola