திருப்பத்தூர் அருகே கண் பார்வை இல்லாத தாயை எட்டி கன்னத்தின் மீது உதைத்து கீழே தள்ளியே கொடூர மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பியின் மண்டை உடைக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Continues below advertisement

சொத்து பிரச்சனை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விசமங்கலம் சித்தேரி பகுதியை சேர்ந்த மனோகரன், விஜயலட்சுமி மகன்கள் கோபி மற்றும் ஜோதிராஜ் என இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் மனோகரனுக்கு சொந்தமாக 1 ஏக்கர் 70 சென்ட் அளவிலான நிலம் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை கோபி மற்றும் ஜோதி ராஜ் ஆகிய இருவருக்கும் தந்தை சரி பாதியாக பிரித்து கொடுத்துள்ளார். அதன் பின்பு சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை மனோகரன் உயிரிழந்த நிலையில் அண்ணன் கோபி,  தம்பிக்கு கொடுக்கப்பட்ட 85 செண்ட் நிலத்தையும் தனக்கு வேண்டும் என்று கூறி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

தாயை எட்டி உதைத்த மகன்

இந்த நிலையில் ஜோதி ராஜ் சில கடந்த 7 வருடங்களுக்கு முன்பு அந்த இடத்தில் வீடு கட்டியுள்ளார். அதிலிருந்து அவ்வப்போது அண்ணன் தம்பி இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி குடிபோதையில் வந்த கோபி சொத்து எனக்கு வேண்டும் என்று கூறி ஜோதிராஜ் வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டை அடித்து நொறுக்கி உள்ளார். பின்னர் கண்ணு தெரியாத அம்மாவை காலால் எட்டி கண்ணத்தின் மீது உதைத்து கீழே தள்ளியுள்ளார். இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. 

Continues below advertisement

மேலும் ஜோதிராஜின் மண்டையும் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜோதி ராஜன் குற்றம் சாட்டினர். சொத்து பிரச்சனை காரணமாக கண்ணு தெரியாத பெத்த தாயை எட்டி உதைக்கும் மகனின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.