"அய்யய்ய.. இந்த அங்கிள் உச்சா போயிட்டாரு! - 'தலைநகரம்' வடிவேலு பாணியில் போலீஸைப் பார்த்ததும் பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்த போலி மருத்துவர்
திருப்பத்தூரில் முறையான மருத்து படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர்கள் கைது.

அய்யய்ய இந்த அங்கிள் உச்சா போயிட்டாரு! தலைநகரம் படத்தில் வடிவேல் பேண்டில் உச்சா போவது போல முறையான மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்த முதியவரை பிடிக்கும்போது பேண்டில் சிறுநீர் கழித்த போலி மருத்துவர்! தத்துவம் பேசி அட்ராசிட்டி! ரெய்டில் இருவர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொட்டாவூர்,பேரம்பட்டடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கோட்டாவூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் இளங்கோ (68) என்பவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பு மட்டும் முடித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தார். அப்போது அங்கு சோதனையின்போது ஆங்கில மருந்துகளுடன் கையும் களவுமாக பிடிபட்டார். இளங்கோ பிடிபட்டவுடன் பயத்தில் பேண்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இதனை வீடியோ எடுக்கும் பொழுது, இது கூட வீடியோ எடுப்பீங்களா வீடியோ எடுத்து போடுங்க நான் பிரபலம் ஆகிறேன் என கூறினார். அது மட்டுமல்லாமல் கிருஷ்ணர் எனக்கு தண்டனை கொடுத்து விட்டார். அதனால் இன்று அனுபவிக்கிறேன் எனவும் தத்துவம் பேசினார். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் இளங்கோ மருத்துவம் பார்த்து வந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், அதேபோல பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்(36) என்பவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததால் அவருடைய கிளினிக்குக்கும் சீல் வைக்கப்பட்டது. திருப்பத்தூர் கிராமிய போலீசார் உதவியுடன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையின்போது மாவட்ட மருந்தக ஆய்வாளர் சுரேஷ்குமார், அரசு மருந்து ஆளுநர்கள் குரு ராகவேந்திரன், கார்த்திக் ஆகியோர் இருந்தனர். முறையான மருத்துவ படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இருவர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்






















