சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பக்கநாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (26). இவர் தனது நண்பரான கட்டிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சவுந்தரராஜன் (22) ஆகியோருடன் நேற்று இரவு 9 மணிக்கு குண்டத்துமேடு டாஸ்மாக் கடையின் எதிரே மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, முருகேசனின் நண்பர் சக்திவேல் (26) என்பவரும் அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். இந்த நிலையில் சக்திவேல் மற்றும் முருகேசனுக்கு இடையே ஏற்கனவே பணம் விஷயத்தில் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதன் பிறகு ஆத்திரம் அடைந்த சக்திவேல் மதுபோதையில் வீட்டிற்கு சென்று ஆடு அறுக்கும் அரிவாளை எடுத்துவந்து முருகேசனை வெட்டினார். அப்போது அதனை தடுக்க முயன்ற மணிகண்டனையும் வயிற்றில் குத்தினார். மேலும் சௌந்தரராஜனின் தலையிலும் வெட்டினார். இந்தச் சூழலில் முருகேசனும், மணிகண்டனும் எடப்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சவுந்தரராஜன் தலையில் அரிவாளால் வெட்டுப்பட்ட நிலையில் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் பார்த்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சவுந்தரராஜனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தலையிலிருந்து அரிவாளை எடுக்காத நிலையில் மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அரிவாளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற முடிவு செய்துள்ளனர்.


அதேசமயம் அப்படி செய்யும்போது உயிரிழக்கும் அபாயமும் இருப்பதால் மருத்துவர்கள் தீவிர ஆலோசனைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். இதுகுறித்து ஜலகண்டபுரம் காவல் நிலையத்தில் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.



விசாரணையில், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவடத்தூர் கிராமம் குண்டத்துமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல். இவர் ஹோட்டல் நடத்திவருகிறார். சக்திவேலின் கடையில் முருகேசன் ரூ. 2 ஆயிரத்து 500 பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.


இச்சமயத்தில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் ஒன்றாக மது அருந்தியபோது இந்த விபரீதம் நடந்ததாக தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட சௌந்தரராஜனை காவல் துறையினர் கைது செய்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண