அழகு நிலையத்தில் 3 பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஸ்பா உரிமையாளரை கைது செய்த போலீசார், பெண்களையும் மீட்டுள்ளனர்.


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் நகரில் ஜேம்ஸ் ஹராகாம்புங் (27 வயது) என்பவர் ஸ்பா நிலையம் நடத்தி வந்தார். அங்கு வரும் ஆண்களை மயக்கி அவர்களிடம் பணத்தை பிடுங்க, மூன்று பெண்களை பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் அங்கு வரும் ஆண்களை மயக்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ரூமில் ஆண்களுக்கு மசாஜ் செய்து, அதனால், பல ஆண்கள் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.


ஒருநாள் திடீரென்று, இதுதொடர்பான ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அவர்கள் ஸ்பாவில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது, ஸ்பா உரிமையாளர் ஜேம்ஸ் ஹராகாம்புங் ஸ்பா நிலையத்தை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்து மூன்று பெண்களையும் போலீசார் மீட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.


குற்றம் சாட்டப்பட்டவர் மீது மீரா ரோடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண