சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறை, குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவரையும் அதிரடியாக கைது செய்தது. இதன் பிறகு, குற்றவாளிகள் தரப்பில் இருந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
தி.மு.க., நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கை அடுத்த சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது - 27), தி.மு,க.,வின் விளையாட்டு மேம்பாட்டுப் பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்துவரும், இவர் வீடு வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த கும்பல் அவரது காரை வழிமறித்து பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அந்தப் பகுதியினர் மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் பேச்சுவார்த்தை
ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு, கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, சிவகங்கை - மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், துணைக் கண்காணிப்பாளர் அமல அட்வின் உள்ளிட் டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளைவிரைந்து கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்
இதுகுறித்து சிவகங்கை நகர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சாமியார்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் விக்கி என்ற கருணாகரன் (20), சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரபாகரன் (19), திருப்பத்தூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த சூரிய மூர்த்தி மகன் குரு (21) ஆகிய மூவருக்கும் இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மீண்டும் கொலை மிரட்டல்
சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறை, குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவரையும் அதிரடியாக கைது செய்தது. இதன் பிறகு, குற்றவாளிகள் தரப்பில் இருந்து மீண்டும் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனை எதிர்த்து, குற்றவாளிகளை உடனடியாக பிடித்து கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.