மேலும் அறிய

சிவகங்கை லாக்கப் மரணம்; அஜித் உடலின் உடற்கூராய்வு முடிவடைந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு !

பிணவறையில் அஜித்தின் உடலை பார்த்து மாஜிஸ்திரேட் விசாரணை - நீதி விசாரணை நடத்த கோரி மாஜிஸ்திரேட்டிடம் அஜித் குடும்பத்தினர் மனு.

அஜித்குமாரின் வாயில் மிளகாய்பொடியை கொட்டி சித்ரவதை செய்து, தண்ணீர் கொடுங்கள் என கெஞ்சிக்கேட்டும் தொடர்ந்து தாக்கியதாக அதிர்ச்சி தகவல்.

மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை
 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் அஜித்தின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட மாஜிஸ்திரேட் வேங்கடபிரசாத், இளைஞர் அஜித்தின் உடலை பார்த்து காயங்கள் குறித்து பார்வையிட்டார். பின்னர் அஜித்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து அஜித்குமாரின் தாயார், சகோதரர் மற்றும் குடும்பத்தினர் நேரில் சென்று பிணவறையில் அஜித்குமாரின் உடலை பார்வையிட்ட பின்னர், உடற்கூராய்வுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
 
உடற்கூராய்வு நடைபெற்றது
 
பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுசெய்யப்பட்டு, நடைமுறைளின்படி உடற்கூராய்வு நடைபெற்றது. அப்போது ”காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இனி இது போல சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” - என அஜித் குடும்பத்தினர் சார்பில் மாஜிஸ்திரேட்டிடம் மனு வழங்கினர்.
 
த.வெ.க.,வினர் மரியாதை செலுத்தினர்
 
அஜித்குமாரின் உடலானது உடற்கூராய்விற்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கிராமத்திற்கு எடுத்துசெல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தமிழக வெற்றி கழகம் சார்பில் அஜித்தின் உடலுக்கு தமிழக வெற்றி கழகத்தின், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
வாயில் மிளகாய்பொடி கொடுத்து சித்திரவதை
 
காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவத்தில், அஜித்தை விசாரணையின்போது தொடர்ந்து நகையை கொள்ளையடித்ததாக ஒப்புக்கொள்ள வேண்டும். என, அஜித் அவரது தம்பி நவீன் மற்றும் அஜித்துடன் பணிபுரியும் நான்கு பேர் என 6 பேரையும் முழங்கால் போடவைத்து, குதிங்காலில் பிளாஸ்டிக் லத்தியால் கடுமையாக தனிப்படை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். பின்னர் அஜித்குமாரிடம் மட்டும் விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து தாக்கியபோது, ”தான் இறந்துவிடுவேன்” - என கதறி அழுதுள்ளார். அப்போதும் வாயில் மிளகாய்பொடியை கொடுத்துள்ளதாகவும். அப்போது தண்ணீர் வேண்டும் என, அழுது கேட்டபோது. கண்டுகொள்ளாமல் காவல்துறையினர் தொடர்ந்து, தண்ணீர் கொடுக்காமல் தாக்கியதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு
’’தவெக வாழ்க!’’கோஷமிட்ட புஸ்ஸி ஆனந்த்கடுப்பான விழா கமிட்டி’’போதும் இறங்குங்க’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ்  அதிரடி
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் அதிரடி
Embed widget