இந்த சம்பவங்களுக்கு முன்பாக இடைக்காட்டூரில் பட்டியலினத்தை சேர்ந்த 3 பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி சில நாட்களில் சிவகங்கை மாவட்டத்தில் தொடர் குற்றசம்பவங்கள் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் இளைஞர் உயிரிழப்பு
 
சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவரக, இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று  மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக இளைஞரின் உறவினர் மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் நேற்று போராட்டத்தை ஈடுபட்டனர்.
(CBCID) உரிய விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்த நிலையில், போராட்டக்காரர்கள் சாலையிலேயே படுத்து உறங்கியபடி இன்று காலையிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மானாமதுரை பகுதியில் சில இடங்களில் சாலைகள் மறிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றியுள்ள தனியார் மற்றும் அரசு மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. போராட்டம் காரணமாக பேருந்துகள் அனைத்தும் மாற்று பாதைகளில் அனுப்பப்பட்டுள்ளன. அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று திங்கள்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் அதிகமாக இந்த சாலையை பயன்படுத்தும் நிலையில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பிரதான நெடுஞ்சாலையை கடந்து தான் தங்கள் பணிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாலை மறியல் போராட்டம் தொடர்வதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் இளைஞர் ஆகாஷ உயிரிழந்தது தொடர்பான வழக்கானது, காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களது செயல்முறை ஆணையின்படி, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறைக்கு (CBCID) உரிய விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது.

தொடர் குற்றசம்பவம்

Continues below advertisement

மேலும் மானாமதுரை உடைகுளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மூனீஸ்வரன் தனது நண்பர்களான சதீஷ்குமார், கார்த்திகேயனால் மது போதையில் கொலை செய்யப்பட்டார். இது குறித்து சிவகங்கை எஸ்.பி முழு விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவங்களுக்கு முன்பாக இடைக்காட்டூரில் பட்டியலினத்தை சேர்ந்த 3 பேர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படி சில நாட்களில் சிவகங்கை மாவட்டத்தில் குற்றசம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.